செவ்வாய், 21 ஜனவரி, 2014

வேலூர்  மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550   பேர் தேர்ச்சி



தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,550
பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது .
  வேலூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் நாள்தோறும் தலா 150ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் இப்பணியை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மனோகரன், பிரியதர்ஷினி மற்றும் தலைமை ஆசிரியர் குழுவினர் மேற்கொண்டனர்.  சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இம்மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக