செவ்வாய், 21 ஜனவரி, 2014

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 927  பேர் தேர்ச்சி


கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ்கள்சரிபார்க்கப்பட்டது
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 927பேருக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்புப்
பணி திங்கள்கிழமை தொடங்கியது. பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா பணிகளை கண்காணித்தார். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1-இல் 343 பேரும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2-இல் 584 பேர் என மொத்தம் 927 பேருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. முதன்மைக் கல்வி அலுவலர் எம்.ராமசாமி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் முருகேசன்,கணேஷ், தொடக்கக் கல்வி அலுவலர் துரைசாமி உள்ளிட்டோர் சான்றிதழ்
சரிபார்க்கும் பணியை ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக