ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தனியார் பள்ளி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை, வேப்பேரி, அகர்வால் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்
பள்ளி தாளாளர், எஸ்.கே.டோடி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை,வேப்பேரியில், அகர்வால் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்
பள்ளியை நடத்தி வருகிறோம். கடந்த, 1980ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த 1997ம்
ஆண்டு வரை, சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் இயங்கியது. கடந்த, 1997 - 98ம்
கல்வியாண்டு முதல், மெட்ரிக்குலேஷன் பள்ளியாக இயங்கி வருகிறது. பள்ளியில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பாக, தமிழக அரசு, கடந்த 2009ல், சில
வழிகாட்டுதல்களை தெரிவித்து, கமிட்டி நிர்ணயிக்கும் தொகையை மட்டுமே, வசூலிக்க வேண்டும் என,பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. அரசு நிர்ணயித்த கட்டணம் தொடர்பாக,
எங்களது எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம். தமிழக அரசு, 2012 - 13 மற்றும் 2013 - 14, 2014 - 2015கல்வியாண்டுகளுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டும் வசூலித்தால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, எங்கள் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை,மறு சீரமைப்பு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்து இருந்தார்.
மனுவை விசாரித்தநீதிபதிகள், அக்னிஹோத்ரி, சசிதரன் ஆகியோர், இந்த மனு மீது, உரிய பதில் அளிக்குமாறு, தமிழக அரசின்பள்ளிக்கல்வித் துறை செயலர், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி உறுப்பினர் செயலர், மெட்ரிக்பள்ளிகளின் இயக்குனர் ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக