பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும் எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால், காப்பியடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு தடுக்கப்படும்.
வரும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், செய்முறை மற்றும் பாடத்தேர்வில், தேர்வு வரிசை எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, ஒரே இலக்க அடிப்படையில் எண்கள் வரிசையாக வரும்போது, ஒரே பள்ளி மாணவ, மாணவியர் அடுத்தடுத்து அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். காப்பியடிப்பது, விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு நடக்கிறது.
இதை தவிர்க்கும் வகையில், இம்முறை வரிசை எண்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே தேர்வுமையத்தில் தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களின் தேர்வு எண்களும் கலந்து வரும்வகையில் இம்முறை தேர்வு எண்கள் வழங்கப்பட்டுள்ளது . இதனால், ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வரிசையாக அமர வாய்ப்பின்றி, பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவர். அறிமுகமற்ற மாணவர்கள் அடுத்தடுத்து அமரும்போது, முறைகேடு தடுக்கப்படும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக