மதுரை ஐகோர்ட் தகுதித்தேர்வு வழக்கு : தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதித் தேர்வு மதிப்பெண்
அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்கக்
கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என, தாக்கலான
வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு கண்ணன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு: தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்றவர்களை, ஆசிரியர்களாக அரசு நியமிக்கிறது. இதன்படி இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதிகள் நிர்ணயித்து, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தலைவர்,2012ல், அறிவிப்பு வெளியிட்டார். அதில், 'டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது,பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சலுகை வழங்கப்படும். பின், பணி நியமனம்மேற்கொள்ளப்படும்' என, உள்ளது. ஒவ்வொருவரும், பல்வேறு கால கட்டங்களில், பிளஸ் 2, பட்டம்
படித்து வெளியேறுகின்றனர். இதனால், மதிப்பெண்ணில் அதிகம், குறைவு என்ற வேறுபாடு நிலவுகிறது. பிளஸ் 2, பட்டப்படிப்பிற்கு சலுகை வழங்குவதால், டி.இ.டி.,யில் அதிக மதிப்பெண்பெற்றவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது. இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என, தெரியவில்லை. நியமனத்தில்,வெளிப்படைத் தன்மை இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்கக்கூடாது என,
உத்தரவிட வேண்டும். சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்குறிப்பிட்டார்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், டி.ஆர்.பி., தலைவருக்கு, நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்ட நீதிபதி, ''பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்,'' என்றார்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக