சிற்றிலக்கிய வகைகள் | சிறந்த நூல்கள் | ஆசிரியர் பெயர் | காலம் (கி.பி.) | பா | அமைப்பும் சிறப்பும் - பிற நூல்கள் |
பரணி | 1. கலிங்கத்துப் பரணி (முதல் பரணி) | செயங் கொண்டார் | 11 ஆம் நூற். | கலித்தாழிசை | 1000 யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம். 13 உறுப்புகளால் ஆனது. தோற்ற நாடு, தோற்ற தலைவன், தோற்ற பொருள் ஆகியவற்றைத் தலைப்பாகக் கொண்டு அமைவது. பிற நூல்கள் :
1. அஞ்ஞவதைப் பரணி (தத்துவராயர்)
2. பாசவதைப் பரணி (வைத்தியநாத தேசிகர்) |
2.தக்கயாகப் பரணி | ஒட்டக் கூத்தர் | 12 -ஆம் நூற். | கலித்தாழிசை |
தூது | 1.நெஞ்சுவிடு தூது (முதல்தூது) | உமாபதி சிவம் | 14-ஆம் நூற். | கலிவெண்பா | அக மற்றும் புறச் செயல்களுக்காக மனிதரையோ, அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாகப் படைக்கப்படும் இலக்கிய வகை. இஃது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும்.
பிற நூல்கள் :
1. அழகர் கிள்ளைவிடு தூது (சொக்கநாதப் புலவர்)
2. விறலிவிடு தூது (கூளப்ப நாயக்கன்) |
2. தமிழ்விடு தூது | ஆசிரியர் பெயர் தெரியவில்லை | காலம் அறிய முடிய வில்லை |
உலா | மூவருலா | ஒட்டக் கூத்தர் | 12 -ஆம் நூற். | கலிவெண்பா | தலைவன் உலா வரும்பொழுது எழு பருவ மகளிர் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) அவன்மீது காதல் கொள்வதாக அமைவது.
பிற நூல்கள் :
1. திருக்கயிலாய ஞான உலா (முதல் உலா) (சேரமான் பெருமாள் நாயனார்)
2. ஏகாம்பரநாதருலா (இரட்டைப் புலவர்கள்) |
கலம்பகம் | 1. கச்சிக் கலம்பகம் | இரட்டைப் புலவர்கள் | 14-ஆம் நூற். | பல்வகைப் பாவும், பா இனமும் விரவி வரும் | பல்வகை மலர்களால் ஆன மாலை போன்று பல்வகையான 18 உறுப்புகளைக் கொண்டு பாடப்படும் இலக்கிய வகை.
பிற நூல்கள் :
1. நந்திக் கலம்பகம் (கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் தோன்றியது)
2. தில்லைக் கலம்பகம் (இரட்டைப் புலவர்கள்) |
2. மதுரைக் கலம்பகம் | குமரகுருபரர் | 17-ஆம் நூற். |
பிள்ளைத் தமிழ் | மீனாட்சி - யம்மை பிள்ளைத் தமிழ் | குமரகுருபரர் | 17-ஆம் நூற். | விருத்தப்பா | கடவுளையோ, அரசனையோ, தலைவனையோ குழந்தை யாகப் பாவித்துப் பாடப்படும் இலக்கிய வகை. 3 முதல் 21 மாதங்கள் வரையிலான குழந்தைப் பருவச் செயல்பாடுகள் பாடப்படும். ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
பிற நூல்கள் :
1. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் (முதல் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்) 2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (பகழிக் கூத்தர்) |
குறவஞ்சி | குற்றாலக் குறவஞ்சி (முதல் குறவஞ்சி) | திரிகூட இராசப்பக் கவிராயர் | 18 - ஆம் நூற். | விருத்தம், அகவல், வெண்பா, கலித்துறை, கொச்சகம், இசைப் பாக்கள் | தலைவன் மீது காதல் கொண்ட குறிஞ்சி நிலத் தலைவி அடைந்த துயரைப் போக்கும் விதமாக முக்காலம் உணர்ந்த குறத்தி குறி கூறும் முறையில் படைக்கப்படும் இலக்கிய வகை.
பிற நூல்கள் :
1. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (சிவக்கொழுந்து தேசிகர்)
2. பெத்லகேம் குறவஞ்சி (வேதநாயக சாஸ்திரியார்) |
பள்ளு | முக்கூடற் பள்ளு (முதல்பள்ளு) | ஆசிரியர் பெயர் தெரியவில்லை | 17 (அ) 18 - ஆம் நூற். | சிந்து, விருத்தம் கலந்தும் வரும் | மருத நிலத்தில் உழவுத் தொழில் செய்யும் பள்ளர் நில மக்களின் வாழ்வியலைப் பேசும் இலக்கியம். இது 'உழத்தி பாட்டு' என்னும் பெயராலும் வழங்கப்பெறும். இதில் நெல் விதையின் வகைகள், மாட்டின் வகைகள், பயிர்த்தொழில் கருவிகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
பிற நூல்கள் :
1. திருமலைப் பள்ளு
2. திருவாரூர்ப் பள்ளு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக