சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு, சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில்
தொடங்கியது. மேல்நிலைப் பள்ளிகளின் இணை இயக்குநர் வை. பாலமுருகன்
தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும்
சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களின் மாவட்ட கல்வி அலுவலர்கள்
ஆகியோர் மேற்பார்வையில் 5 பிரிவுகளாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்வின் முதல் தாளில் வெற்றி பெற்ற 227
பேர்களுக்கான சான்றிதழ்கள் ஜன. 20 மற்றும் 21ஆம் தேதியும், இரண்டாம்
தாளில் வெற்றி பெற்ற 256 பேர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜன. 22
முதல் ஜன. 24ஆம் தேதி வரையும் நடைபெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக