| எட்டன் உருபே எய்து பெயர் ஈற்றின் |
| திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல் |
| திரிபுமாம் : பொருள் படர்க்கை யோரைத் |
| தன்முகமாகத் தான்அழைப் பதுவே |
(நன்னூல் : 303) |
பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும்பொழுது பெயரின் இறுதியில் சில மாறுதல்கள் ஏற்படும். அவை, ஈறு திரிதலும் (இறுதிஎழுத்து மாறுதல்), ஈறு குன்றலும் (குறைதல்), ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்றுஅயல் எழுத்துத் திரிதலும் ஆகும். (ஈற்றயல் எழுத்து = இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து.)
எடுத்துக்காட்டு
| தந்தை | - தந்தாய் ! | ஈறுதிரிதல் ('ஐ' |
| தங்கை | - தங்காய் ! | |
| அன்னை | - அன்னாய்! |
| மன்னன் வருக! | - மன்ன! வருக | ஈறுகுன்றல் ('ன்' என்ற இறுதி |
| நண்பன் | - நண்ப! | |
| புலவன் | - புலவ! |
| அரசன் | - அரசனே | ஈறுமிகுதல் (ஏகாரம் மிகுந்து வந்தது) |
| இறைவன் | - இறைவனே | |
| மகன் | - மகனே |
| தம்பி | - தம்பி! | இயல்பாக வந்தது. |
| தோழி | - தோழி! | |
| மாமி | - மாமி! |
| மக்கள் | - மக்காள் | ஈற்றுஅயல் (இறுதி |
| வணிகர் | - வணிகீர் | |
| புலவர் | - புலவீர் |
இவ்விளிவேற்றுமை அண்மைவிளி, சேய்மைவிளி என இரு வகைப்படும்.
அருகில் உள்ளவரை அழைப்பது அண்மை விளி; தொலைவில் உள்ளவரை அழைப்பது சேய்மை விளி.
(அண்மை = அருகு, சேய்மை = தொலைவு)
எடுத்துக்காட்டு
| இராமன் | - இராம! | அண்மைவிளி |
| அம்மா | - அம்ம! | |
| இராமன் | - இராமா, இராமனே, இராமாவோ | சேய்மைவிளி |
.அண்மைவிளி : இராமன்-இராம! -ஈறுகுன்றல் ( இறுதி எழுத்துக் குறைந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக