செவ்வாய், 31 ஜூலை, 2012

குக்கூ..குக்கூ....

விதைகள்…….நாளைய உலகின் விழுதுகள்
  குக்கூ…..குழந்தைகள் வெளி…’ பெயரே இனிக்கின்றதல்லவா ! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் செயல்பட்டுவரும் இந்த தன்னார்வ அமைப்பின் சார்பில் அங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்றுவரும் 30 க்கும் மேற்பட்ட சுட்டிகள் கைத்தமலைக் குன்றுக்கு வித்தியாசமான விதை சேகரிக்கும் பயணத்தை மேற்கொண்டனர்
     கைகளில் துணிப் பைகள் ..உள்ளத்தில் குதுகலம்.என புறப்பட்ட  அவர்கள்  மா,  சப்போட்டா,     நாவல்      என     வழிநெடுக    கிடைத்த விதைகளையெல்லாம் சேகரித்தபடி கொளுத்தத் தொடங்கிய கோடைவெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாக நடைபோட்டனர்

வளர்மதி

    வறண்டுகிடக்கின்ற இந்த பூமியை வளமாக்கறது மரங்கள்தான்….அவை பலவிதங்களில் அழிக்கப்பட்டு வருகின்றன..அதனால் கைத்தமலைப் பகுதியில் உள்ள பலன் தரக்கூடிய பாலை, ஆயா, வேம்பு, நாவல், ஆல், அரசு போன்ற  நமது பாரம்பரிய மரங்களின் விதைகளை  சுட்டிகளைக் கொண்டு சேகரித்து  மீண்டும் மரம் வளர்க்கச்செய்வதுதான் இப்பயணத்தின் நோக்கம் என்றார் இந்த பயண அமைப்பளர்களில் ஒருவரான வளர்மதி
      சுட்டிகள் கைத்தமலையை அடைந்தவுடன்  அங்குள்ள பல வகையான மரங்களின் கீழிருந்த விதைகளை ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு  சேகரிக்க... சில சுட்டிகள் மரங்களின் மீது ஏறி விதைகளை உலுக்கி அதனையும் தங்களது பைகளில் நிரப்பினர்.
     நாங்க சேகரிக்கும் இந்தவிதைகளை முதலில் செம்மண் கொண்டமதர் பெட்டில்ஊன்றி  மண்புழு உரமெல்லம் போட்டு நீர்பாய்ச்சுவோம்கொஞ்சம் பெரிதானதும் தனித்தனி கவர்களில் போட்டு வளர்ப்போம்.. நடுவதற்கேற்ற அளவு வளர்ந்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள் கோயில்கள் சமுதாய இடங்களில் நடுவதுடன் தேவை என கேட்ப்போர்க்கும் இலவசமாக கொடுப்போம்என்றார் கண்ணன் எனும் சுட்டி பெருமையாக
  இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இவ்வாறு ஊத்துக்குளி சுற்றுவட்டாரத்தில் நடப்பட்டுள்ளன. இப் பணியில் ஈடுபட சுட்டிகளுக்கு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான மூர்த்தி மற்றும் லக்ஷ்மி ஆகியோர் ஊக்கமூட்டி வருகின்றனர்


அழகேஸ்வரி

          வகுப்பறையில் இறுக்கமான சூழ்நிலையிலிருக்கும் சுட்டிகளை அதிலிருந்து விடுவித்து சுதந்திரமாகவும் உயிர்ப்போடும் வாழ்க்கையை அனுகச் செய்வதற்கு நாங்கள் செய்யும் முயற்சிதான் இதுநிலம் நீர் காற்று ஆகாயம்னு மாசுபட்டு கிடக்கின்ற இந்த பூமியை மாற்றுவதற்கு சுட்டிகளுடன் கைக்கோர்த்துள்ளோம்..இந்த பயணத்தின் மூலம் இயற்கயை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்கின்றனர் சுட்டிகள்அவர்கள் சேகரித்த விதைகளை தங்கள் வீட்டுக்கருகில் ஊன்றி வளர்க்கவும் ஊக்கப்படுத்திவருகின்றோம்ஊன்றப்படும் ஒவ்வொரு விதையும் செடியாய்.. மரமாய்.. வளர்ந்து, பூத்தும் காய்த்தும் இவர்களை நிச்சயம் வாழ்த்தும்…” என்று நெகிழ்வோடு கூறினார் உடனிருந்த குக்கூ குழந்தைகள் வெளியின் வழிகாட்டியான அழகேஸ்வரி
  கைத்தமலையிலிருந்து பைநிறைந்த விதைகளுடனும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் திரும்பினர் சுட்டிகள்.    அவர்கள்     விதைகளை விதைப்பது மண்ணில் மட்டுமல்ல  நம் மனதிலும்தான்!    


   குக்கூ…. குழந்தைகள் வெளிசுட்டிகளின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் நாட்டுப்பு நடனம், நடிப்பு,ஓவியம், களிமண்சிற்பம்,புகைப்படக்கலை போன்றவற்றிலும் பயிற்சி அளித்துவருகின்றது..இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நாடகக்கலை பேராசிரியர் வேலுசரவணன் போன்றவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஊத்துக்குளியில் சமீபத்தில் குழந்தைகள் நூலகம் ஒன்றும் தொடங்கி  செயல்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்



சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி


நன்றி சுட்டிவிகடன்

திங்கள், 30 ஜூலை, 2012

                    "கனவுக்குச் செயல்கொடுப்போம்".

   
 
   அக்டோபர் 12....2011  ஸ்ரீஹரிகோட்டா சதிஸ்தவன் ஏவுதளம்....SRMSAT,JUGNU மற்றும்LUXEMBURG நாட்டின் செயற்கைக்கோள் என மூன்றுகுட்டிச் செயற்கைக்கோள்களை முதுகில் ஏற்றிக்கொண்டு  MEGHA TROPIQUES - எனும் இந்திய-பிரஞ்ச் கூட்டு முயற்சியால் காலநிலை மாற்றங்களைப்பற்றி  ஆராயதயாரிக்கப்பட்ட செயற்ககைக்கோள் விண்ணில் பறந்தது…..
( ஜுக்னுவுடன் கான்பூர் ஐஐடி மாணவர்கள்)
    இதில் சிறப்பம்சம் என்னவென்றால்  SRMSAT,JUGNU  இரண்டு குட்டிகளும் இந்தியமாணவர்களால் தயாரிக்கப்பட்டது என்பதுதான். சுமார் 10 கிலோ எடையுள்ளSRMSAT சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்விநிறுவனத்தில் பல்வேறுதுறைகளைச்சேர்ந்த 54 மாணவர்கள் சுமார் 2 கோடி செலவில் தயாரித்ததாகும்.இது  பசுமை இல்ல வாயுக்களைப்பற்றி ஆராயத் துணைபுரியும்.JUGNU கான்பூர் ஐஐடி மாணவர்கள் 50 பேரால் தயாரிக்கப்பட்ட குறைந்தஎடையிலான் நேனோசெயற்கைக்கோளாகும் இது வெள்ளம், வறட்சி போன்றவற்றை நிர்வகிக்கத் தேவையான விவரங்களை பெறுவதற்கு உதவும்.
       2009 ல் தொடங்கி  மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ANUSAT,STUDSAT,YOUTHSAT[இந்திய ரஸ்யா கூட்டுத்தயாரிப்பு]
 என மூன்று சிறிய செயற்கைக்கோள்கள் இதுவரை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுளன.STUDSAT தயாரித்த மாணவர்களுக்கு
சர்வதேச விருது கிடத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதே போன்ற 100 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுருக்காம்...
 இதனைப்பற்றி ஒரு மாலைப்பொழுதில் சுட்டிகளுக்காக ISRO சந்திராயன் I&II திட்ட இயக்குனர் திரு மயில்சாமி அண்ணதுரை அவர்களுடன் உரையாடினோம்....


 இந்த செயற்கைக்கோள்களை  மாணவர்கள் தயாரித்ததின் சிறப்பம்சம், முக்கியத்தவம் என்று எதனைக் குறிப்பிடலாம்?


  அறிவியல் மற்றும் பொறியியலின் பல துறைகளை உள்ளடக்கிய பணி செயற்கைக்கோளியல். மின்னணுவியல்,இயற்பியல்,இராசாயனம்
இயந்திரவியல் வானவியல் கணினியியல் என் பல துறைகளின் கூட்டுமுயற்சியே செயற்கைக்கோளின் வடிவமைப்பும் வேலைப்பாடும்
ஆக ஒரு செயற்கைக்கோளை வடிவமைக்க பல துறை மாணவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.அப்படி ஒர் சிறந்த குழுவாக
இயங்கத்தேவையான பயிற்சியை இச் செயற்கைக்கோள் தயாரிப்புப்பணி மாணவர்களுக்கு அளிக்கின்றது.அவர்கள் பின்னாளில் எத் துறைக்குச் சென்றாலும் ஒரு குழுவில் செயல்படும்பொழுது நன்கு பரிணமிக்கமுடியும்!


 மாணவர்கள் செயற்கைக்கோள்கள் தயரிக்க வேண்டும் என்றால்  அவர்களுக்கு மிகுதியான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு
 இருக்கவேண்டுமா?
  இது ஒரு கூட்டு முயற்சி. பல் துறைஅறிவு கண்டிப்பாகத் தேவை. செயற்கைக் கோள்செய்யும் போது மனிதனுக்குக் கண், காது, மூளை, கை,கால், இரத்தம், உணவு போல் பலதும் உள்ளது.எல்லாவற்றையும் செய்யவும், இணைக்கவும், சரியாகச் செயல்பட வைப்பதும், அதை
விண்வெளியொத்த தட்ப வெப்ப , வாயுவற்ற வெற்றிடத்தில் பரிசோதித்து செயற்கைக் கோள்வடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.


பயிற்சிபெற்ற ISRO விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்கள் தயாரிப்பில்ஈடுபடுவதற்கும் மாணவர்கள் ஈடுபடுவதற்கும் என்ன வேறுபாடு?

 தற்போதைய நிலையில், மாணவர்களின் செயற்கைக் கோள்கள் பரிச்சார்த்த முறையிலேயே உள்ளன. எடை குறைவு, ஆயுள் குறைவு, அவற்றை விண்ணில் ஏவ எங்களின் விண்கலங்கள்(ராக்கெட்) தேவை. மாறாக நாட்டின் தொலைதொடர்பு, தொலைக்காட்சி, பருவ நிலையுணர்தல் கிரகவியல் ஆராய்ச்சி போன்ற தேவைகளுக்கும், பெரிய பி.ஸ்.எல்.வி, ஜி.ஸ்.எல்.வி போன்ற பெரிய விண்கலங்களைச்(ராக்கெட்) செய்ய எங்கள் பணி  தேவை.

   எந்தவகையில் மாணவர்களுக்கு உதவியது?
 வடிவமைப்பில் ஆலோசனை, சூரியத்தகடு, பேட்டரி போன்ற சில சாதனங்கள், மற்றும் செயற்கைக் கோளைப் பரிசோதித்துப் பார்த்தல்,
 விண்கலனில்(ராக்கெட்டில்) இணைத்தல் போன்ற பணிகளில் மாணவர்களுக்கு உதவியது.

பல்கலைக்கழகங்கள், IIT போன்ற நிறுவனங்கள் அளவில் செய்யப்படும் இந்தமுயற்சி எதிர்காலத்தில் கல்லூரிகள் அளவில் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உண்டா?

கண்டிப்பாக! இப்போதே நிலை அதுதான். ஏன் இதுவரை செய்த 4 மாணவர் செயற்கைக் கோள்களில் ஒன்று மட்டுமே IIT,கான்பூர்.
மற்ற மூன்றும் 1.அண்ணாபல்கலை சென்னை  , 2. கர்நாடகா, ஆந்திராவின் 5கல்லூரிகள் 3. எஸ்.ஆர்.எம் சென்னை.  ஆகியவற்றின் மாணவர்களால்  உருவாகப்பட்டவைதான்



பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்  இது போன்ற விஞ்ஞானஅறிவையும்,ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்வதற்கு தாங்கள்கூறும் அறிவுரை என்ன?
அறிவியல் செய்திகள்,எண்ணங்கள் மூலம் சிறு சிறு பொறிகளை மாணவர்கள் மனதில் உருவாக்கும் முயற்சிகள்,தன்னால் ஏதும் செய்ய முடியுமா என்ற தேடலையும்,வேகத்தையும் தூண்டும் பணிகளை ,பள்ளிகள், கல்லூரிகள், இஸ்ரோ போன்ற ஆராய்ச்சி மற்றும் தொழில்கூடங்கள், மாணவர்கள் கூட்டாக முயற்சிக்க வேண்டும். செயல்முறைப் பாடங்கள் நிறைய வரவேண்டும்.


டாக்டர் அப்துல்கலாம் அய்யா மாணவர்களை கனவு காணுங்கள்என்றார்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
          "கனவுக்குச் செயல்கொடுப்போம்".

கனவு மெய்ப்படவேண்டும்.......
.


தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி


நன்றி சுட்டிவிகடன்