சனி, 13 ஆகஸ்ட், 2016

'செட்' தேர்வு முடிவு தாமதம் : பாதிக்கப்படும் பட்டதாரிகள்

உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192உதவி பேராசிரியர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கு வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; செப்., 7க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அளிக்கவேண்டும். ஆனால், விண்ணப்பிக்க முடியாமல் இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காரணம், பேராசிரியர் பணியில்mசேர்வதற்கான, 'செட்' தகுதி தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது; 85 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால், உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், அவதிக்குஆளாகி உள்ளனர். அதேபோல், மனோன்மணியம், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைகளும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளன. பலருக்கு தகுதிஇருந்தும், செட் தேர்வு முடிவு தாமதத்தால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

UGCNET Success Storie-Mukesh Pandya


UGC NET Success Stories from Mukesh Pandya
Author Bio: I am Mukesh Pandya, 49 from Mumbai and working in a Bank as BM. It was my dream to clear UGCNET since long. I have done my MBA in IT. I appeared in UGCNET in December 2012. This was my first attempt and I was lucky to clear it in my first attempt with 70%. After my success my friends have suggested me to prepare document on my success. I have prepared this document on my experience. Readers are requested to change their plan as per their subject, age and job profile.

1. Be Thorough: First of all make a habit to read. Read all related to subject that you get. Use Wikipedia and Google to find more on the topic. Read comprehensive books on the subject.

2. Select Study Material Carefully: This is perhaps most important part of your strategy. I spent lot of time in searching books for my UGCNET Exam. Fipkart and Homeshop18have played a vital role in my books selection. I found books published by Arihant, Cosmos Bookhive, Upkar and Atlantic very useful.

3. Glossary plays an important role in your preparation: Please add suitable dictionaries of the subject in your books. I read Dictionaries on Management, Commerce and Economics for my study.

4. Balance between Theory and MCQ: I selected books in such a way that I got theory and MCQ in a balanced manner. Upkar's books gave me that start which I finished with books from other publications.

5. Use of Internet: I used internet extensively in my study. I always carry a Tab, which I use to search for terms and concepts. There are many websites which have lots of material on our study. Management being a global subject, I found extensive reading on net.

6. General Knowledge: A good and constant reading habit is very much useful for building a sound General Knowledge. However practice is more required for sections like Teaching Aptitude and Reasoning.

7. Reading, Reading, Reading for Theory. Practice, Practice, Practice for MCQ:UGCNET is an exam where your thorough knowledge is tested through MCQs. So read more and more to build your thorough knowledge and practice more and more to sharpen your exam skills.

8. Rome was not build in a day: Just remember that nothing happens in 2-3 months. If your aim is an Exam like UGCNET, prepare for long term. Competitive Exams are like Kushti where strength and skill both required. And both strength and skill come from a long practice with proper eating for a long time.

9. Have faith in System: Please do not be carried away by rumors and noise. Learn to differentiate between noise and news. While I was preparing I got rumor that this time cut off will be 48% as there are large vacancies in Management Institutions. But I ignored the same as it was next to impossible. I checked last exam (June 2012) and found that the cut-off was around 65%. So I worked hard and ensured that I stand somewhere around 68%. With God's grace I got more than what I targeted.

10. Have faith in yourself: Some students have attitude to lose before fighting.  Even when I started my preparation I was not sure that I can do it especially with my present job of around 14 hours time taken in job and travelling. But I utilized all the time I got at home and in travelling and I kept on studying without getting tired. Perhaps it is our will power that makes things happen.

I wish you all the best in your efforts.

 

புதன், 10 ஆகஸ்ட், 2016

TRB PG TAMIL :மணிமேகலை

காப்பியத் தலைவி மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்; கோவலன் கொலையுண்டதை அறிந்த மாதவி தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியாகிறாள். தன்மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய்சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆட வருமாறு அழைக்கிறாள். மாதவியோ,

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை 
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் 
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்

                      (ஊர் அலர் உரைத்த காதை: 55-57)

என்று கூறி மறுத்து விடுகிறாள்.

மணிமேகலையைக் கற்பரசி கண்ணகியின் மகள் என்றும், அவள் தீய தொழிலில் ஈடுபட மாட்டாள் என்றும் அறிவிக்கிறாள்.

கோவலன் கொலைப்பட்ட துன்ப நிகழ்ச்சியைப் பற்றி மாதவி கூறக் கேட்ட மணிமேகலை கண்ணீர் வடிக்கிறாள். அவள் கண்ணீர்த் துளி புத்த பெருமானுக்காகத் தொடுத்த பூமாலையில் பட்டுப் புனிதம் இழக்கச் செய்கிறது. அதனால் புதிய பூக்கள் பறித்து வந்து மாலை தொடுக்க மணிமேகலையும், அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் பூங்காவுக்குச் செல்கின்றனர்.

● உதயகுமரன் வருகை

அப்போது, மதங்கொண்ட யானையை அடக்கிய சோழ மன்னனின் மகன் உதயகுமரன், மணிமேகலை மலர் வனம் புகுந்ததை அறிந்து அவளைத் தேடி உவவனம் வருகிறான். உதயகுமரன் தன்பால் மிகுந்த வேட்கை கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த மணிமேகலை, செய்வதறியாது அங்குள்ள பளிக்கறை மண்டபத்தில் ஒளிந்து கொள்கிறாள். அவளைப் பற்றிச் சுதமதியிடம் உதயகுமரன் கேட்க, அவளோ "மணிமேகலை தவ ஒழுக்கம் உடையவள்; சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையவள்" என்கிறாள். பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன், உள்ளே செல்ல வழியறியாது தடுமாறுகிறான். மணிமேகலையைச் சித்திராபதியால் அடைவேன் எனச் சினத்துடன் கூறி நீங்குகிறான்.

● மணிபல்லவம் செல்லல்

பளிக்கறை விட்டு வெளிவந்த மணிமேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, "அவன் என்னை இகழ்ந்து பேசினான். இருந்தும் என் நெஞ்சம் அவனை நோக்கிச் செல்கிறது. காதலின் இயற்கை இது தானா? அப்படியாயின் அது கெட்டு அழியட்டும்" என்று தோழியிடம் கூறுகிறாள். அப்போது, இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவர்களை அணுகி, "இது முனிவர் வனமாதலின் உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றனன்; நீவிர் இருவரும் சக்கரவாளக் கோட்டம் செல்க" என அறிவுறுத்துகிறது. சக்கரவாளக் கோட்டத்தில் சுதமதி சிறிது கண் துயில்கிறாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயக்கி மணிபல்லவம் எடுத்துச் செல்கிறது. பின் அத்தெய்வம் உதயகுமரனைக் கண்டு "தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை ஒழிக" என அறிவுறுத்துகிறது. தொடர்ந்து மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் சென்று, "மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கிறாள்; அங்குத் தன் பழம் பிறப்பை அறிந்து ஏழு நாட்களில் திரும்பி வருவாள்" என்கிறது. சக்கரவாளக் கோட்டத்திலுள்ள கந்திற்பாவையும், மணிமேகலை ஏழு நாட்களில் "தன் பிறப்பதனோடு நின்பிறப்பும் உணர்ந்து வருவாள்" என்கிறது. அப்போது பொழுது விடிகிறது. சுதமதி மாதவியிடம் வந்து நிகழ்ந்தவற்றைக் கூறி வருந்தி இருக்கிறாள்.

3.2.2 மணிபல்லவத்தில் மணிமேகலை

மணிபல்லவத்தில் தனித்து விடப்பட்ட மணிமேகலை உவவனத்தையோ சுதமதியையோ காணாது புலம்புகிறாள். தன் தந்தை கோவலனை நினைக்கிறாள். பலவாறு புலம்பும் மணிமேகலையின் முன் புத்த பெருமானின் மறுவடிவான தரும பீடிகை காட்சியளிக்கிறது. கண்ணில் நீர் வழிய, கைகள் தலைமேல் குவிய, பீடிகையை மும்முறை வலம் வந்து முறைப்படி தொழுகிறாள். தொழுத அளவில் தன் முந்திய பிறவி பற்றி அறிகிறாள். தான் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்து, அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்ததை அறிகிறாள். இராகுலன் 'திட்டிவிடம்' என்னும் பாம்பு தீண்டி இறந்துபடத் தான் தீப்புகுந்து இறந்ததுமாகிய பழம்பிறப்பினை உணர்கிறாள். பின், அங்குத் தரும பீடிகை தொழுது நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் மாதவிசுதமதி ஆகியோர் தம் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறாள். முற்பிறப்பில் இராகுலன் ஆக இருந்தவன்தான் உதயகுமரன் என்பதையும் அறிகிறாள். மணிமேகலா தெய்வம், மணிமேகலைக்கு இனி எதிர்காலத்தில் நிகழ விருப்பதைக் கூறுகிறது. வேற்று உருவம் கொள்ளுதல், பசியைத் தாங்கிக் கொள்ளுதல், வான்வழிச் செல்லுதல் ஆகிய ஆற்றல்களைத் தரும் மூன்று மந்திரங்களை மணிமேகலைக்கு அருளிச் செல்கிறது.

● அமுத சுரபி பெறல்

பின் மணிமேகலை அங்குள்ள மணற்குன்றுகள், பூஞ்சோலை, பொய்கை முதலானவற்றைக் கண்டு களிக்கிறாள். அவள்முன் தீவ திலகை என்னும் தெய்வம் தோன்றி, "கோமுகிப் பொய்கையில்அமுதசுரபி தோன்றும் நாள் இது; ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்குக் கிடைக்கும்" என்று கூறி அழைத்துச் செல்கிறது. இருவரும் கோமுகிப் பொய்கையை வலஞ்செய்து வணங்க, அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிறது.

● அமுத சுரபியின் சிறப்பு

அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும் என்று அதன் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.

ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து 
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது 
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

                           (பாத்திரம் பெற்ற காதை : 48-50)

(ஆருயிர் மருந்து = உணவு; தான் தொலைவு இல்லா = தான் குறையாத)

என்றும்,

அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும் 
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

                          (பாத்திரம் பெற்ற காதை  120-121)

(கரியாக = சான்றாக; சுரவாது = பெருகாது)

என்றும் அமுதசுரபியின் சிறப்பும், அது சுரப்பது அருள் உடையவர்க்கே என்பதும் இங்கு எடுத்து உரைக்கப்படுகின்றன.

3.2.3 புகார் நகரில் மணிமேகலை

மணிபல்லவத்தில் ஆபுத்திரனின் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வறியவரின் பசிப்பிணி தீர்க்க வான்வழியே புகார் வருகிறாள். அங்கு மாதவியையும் சுதமதியையும் கண்டு அவர்தம் பழம்பிறப்பும் அமுதசுரபியின் சிறப்பும் கூறுகிறாள். இங்குப் பழம்பிறப்பில் 'இலக்குமி'யாகப் பிறந்த மணிமேகலைக்குத் தாரை, வீரை என்ற தமக்கை (அக்காள்) யராகப் பிறந்தவர்களே மாதவிசுதமதி என்பது தெரிய வருகிறது. பின்பு மூவரும் அறவண அடிகளைக் கண்டு தொழுது நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கின்றனர். அடிகள் அவர்களின் பழம்பிறப்பை உணர்த்தி, அவர்களைப் புத்த நெறிப்படுத்துகிறார். இங்கு, அவரால் ஆபுத்திரன் வரலாறு சொல்லப்படுகிறது.

ஆபுத்திரன் சிந்தாதேவி என்னும் தெய்வத்தின் அருளால் அமுதசுரபி பெற்றுப் பசிப்பிணி தீர்த்து வருகிறான்; இதனால் அவன் புகழ் பரவுகிறது. பொறாமை கொண்ட இந்திரன் நாட்டை மழையால் செழிக்கச் செய்கிறான். இதனால் அமுதசுரபிக்குத் தேவையில்லாமல் போகிறது. எனவே சாவக நாடு சென்று பசிப்பிணி போக்கச் செல்லும் ஆபுத்திரன் மணிபல்லவத்தில் தனித்து விடப்படுகிறான். அங்கு மக்களே இல்லாததால் வருந்திய ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அவன் செய்த அறப்பயனால் சாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் தோன்றி, பூமிச்சந்திரன் என்ற அரசனால் தத்தெடுக்கப்பட்டு அரசனாகி நல்லாட்சி செய்கிறான்.

● சிறையும் அறமும்

இவ்வாறு ஆபுத்திரன் வரலாறு கூறிய அடிகள் மணிமேகைலையைப் பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்ளப் பணிக்கிறார். அவளும் துறவுக் கோலங்கொண்டு, காயசண்டிகைவழிப்படுத்த ஆதிரையிடம் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள்; காய சண்டிகையின் 'யானைத் தீ' என்னும் அடங்காப் பசிநோயும் நீங்க அவள் தன்னுடைய விண் நாடு புறப்பட்டுச் செல்கிறாள்.

மணிமேகலையின் துறவு வாழ்வை விரும்பாத சித்திராபதி உதயகுமரனைத் தூண்டி விடுகிறாள். அவன் மணிமேகலையை அடைய முயற்சி செய்ய, அவள் காய சண்டிகையாக உருவத்தை மாற்றிக் கொண்டு அறம் செய்கிறாள். காய சண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என உணர்ந்த உதயகுமரன் பாதி இரவில் அவளைக் காண வருகிறான். இதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொண்டதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். மணிமேகலை இதனை உணர்ந்து புலம்ப அவளைக் கந்திற்பாவை தடுத்துத் தேற்றுகிறது. இளவரசன் கொலைக்குக் காரணமானமணிமேகலையை அரசன் கைது செய்கிறான். அவன் தேவி, அவளைப் பலவாறு துன்புறுத்த, மணிமேகலை தான்பெற்ற மந்திரத்தால் அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறாள். சிறையிலும் அறம் செய்கிறாள். இதனால் அஞ்சிய தேவி மணிமேகலையை வணங்க, அவள் காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் குற்றங்களைத் தேவிக்கு எடுத்துரைக்கிறாள்.

மீண்டும் மணிமேகலையைக் கலை வாழ்வில் ஈடுபடுத்தச் சித்திராபதி அரசமாதேவியிடம் வேண்டுகிறாள். தேவி மறுத்து விடுகிறாள். அதே நேரத்தில் மணிமேகலையை மீட்க அறவண அடிகள், மாதவி, சுதமதி வருகின்றனர். தேவிக்கு அறவுரை கூறிய அறவணர் வேற்று நாடு செல்கிறார்.

● ஆபுத்திரனோடு மணிமேகலை

சிறையிலிருந்து விடுதலை பெற்ற மணிமேகலை, ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆட்சி புரியும் சாவக நாடு செல்கிறாள். அங்குத் தருமவாசகன் எனும் முனிவன் இருப்பிடம் உள்ளது. அங்கு வந்த ஆபுத்திரன் மணிமேகலையை யார் என அறிகிறான். அவனது பழம்பிறப்பை அறிய மணிபல்லவத்துக்குமணிமேகலை அழைத்துச் செல்கிறாள்; அங்குத் தரும பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறான். பின் தீவ திலகையும் மணிமேகலையும் ஆபுத்திரனை அவன் நாடு செல்லப் பணிக்கின்றனர்; மணிமேகலை வான்வழியாக வஞ்சி நகர் அடைகிறாள்.

3.2.4 துறவு வாழ்வில் மணிமேகலை

வஞ்சி நகர் வந்த மணிமேகலை கண்ணகிக் கடவுளை வணங்குகிறாள். பத்தினி கடவுளாகிய கண்ணகி தன் பழம்பிறப்பு வரலாற்றை மணிமேகலைக்கு விரித்துரைக்கிறாள். பின்னர் வேற்றுருக் கொண்டு பிற சமயக் கருத்துக்களை அறிந்து வர வேண்டுகிறாள். மணிமேகலையும் 'மாதவன்' வடிவு கொண்டு பிரமாணவாதி முதல் பூதவாதி வரை, அனைத்துச் சமயவாதிகளின் கொள்கைகளைத் தெரிந்து கொள்கிறாள். பின் அங்குள்ள பௌத்தப் பள்ளியில் தவம் செய்யும் கோவலன் தந்தை மாசாத்துவானைக் காணுகிறாள். அவன், தன்வரலாறு கூறியதுடன், மாதவியும் சுதமதியும் கச்சி மாநகர் சென்றுள்ளதை அறிவிக்கிறான். அங்கு மழையின்றி மக்கள் பசியால் வாடுவதை எடுத்துக் கூறி, அங்குச் சென்று பசிப்பிணி நீக்குமாறு வேண்டுகிறான்.

மணிமேகலை தன் உண்மை வடிவுடன் கச்சி மாநகர் அடைந்து, அந்நாட்டு அரசன் இளங்கிள்ளிக்கு நல்லறம் கூறி, நாட்டு மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். அங்குத் தீவ திலகைக்கும், மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோவிலும் எழுப்பப்படுகின்றன. அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் அவளது அறச்சாலை அடைந்தனர். அவர்களை, மணிமேகலை இனிதே வரவேற்க, அடிகள் காவிரிபூம்பட்டினம் கடலால் அழிந்ததை எடுத்துரைக்கிறார். மணிமேகலை, தான் பல சமயக் கணக்கர் கொள்கைகளை அறிந்தும், அவற்றில் சிறப்பில்லை என்று உணர்ந்ததாகக் கூறுகிறாள். பௌத்த சமயத் தருக்க நெறிகளை அறவணர் அவளுக்குப் போதிக்கிறார். மணிமேகலை புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரத்தை மும்முறை தியானம் செய்து தன் பவத்திறம் நீங்க நோன்பு மேற்கொள்கிறாள். இத்துடன் மணிமேகலைக் காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.


 

TRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு ! முதுகலை தமிழாசிரியர் தேர்வு நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்!

PG TRB TAMIL :இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள்
தொடர்பு கொள்க.
முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு
வெற்றி நிச்சயம் !

TRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற
முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை
நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள்
நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில்
90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே
பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள்
இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு
இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின்
வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும்
பயிற்சி உண்டு.
தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து,
தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

கடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி
நியமனம் பெற்றுள்ளனர்.முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா
நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்
நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்

கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன
உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
8973975233

TRB PG TAMIL:சிலப்பதிகாரம்


    தமிழில் தோன்றிய முதல் காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம். இது இயல்இசைநாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியம்மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைப்பதுசமணபௌத்தவைதீக சமயங்களைப் பத்தினி வழிபாட்டில் இணைத்துச் சமய ஒற்றுமை பேணுவது; புகார்க்காண்டம்மதுரைக்காண்டம்,வஞ்சிக்காண்டம் எனச் சோழபாண்டியசேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டு தமிழ்த்தேசியம் காண்பது.
    இது மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளாதுவணிக மகளையும் கணிகை மகளையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது.
    மொழியாலும்பொருளாலும்இலக்கிய நயத்தாலும்இன்சுவையாலும் முதன்மை பெறும் காப்பியம் இதுபல்வேறு வகையான சிந்தனை மரபுகளையும்பண்பாட்டையும்பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கி இருப்பதுவிரிந்த களப் பின்னணியும் காலப் பின்னணியும் கொண்டதுபல்வேறு இன மக்கட் பிரிவினர் பற்றிப் பேசுவதுசமூகசமயஅரசியல் சிந்தனைகளின் களஞ்சியமாகத் திகழ்வதுஎல்லாவற்றிற்கும் மேலாகஉலக இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதன்மை தருகின்ற ஓர் உன்னதக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.

2.2 சிலப்பதிகாரம் கதைப்பின்னல்
    சிலப்பதிகாரம் புகார்க்காண்டம்மதுரைக்காண்டம்வஞ்சிக்காண்டம்என மூன்று காண்டங்களைக் கொண்டது.புகார்க்காண்டம்-10 காதைகள்மதுரைக்காண்டம் 13-கதைகள்வஞ்சிக்காண்டம் 7-காதைகள்ஆக முப்பது காதைகளையுடையதுஇங்குஇக்காண்டங்களின் வழியேசிலப்பதிகாரக் காப்பியத்தின் கதைப்போக்கைக் காண்போம்.
2.2.1 புகார்க் காண்டம்
    புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்அவன் மகள் கண்ணகிஅதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்அவன் மகன்கோவலன்புகார் நகரமே விழாக்கோலம் கொள்ளகோவலன்-கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
    இதனைத் தொடர்ந்து தனிமனையில் குடியிருத்தப் பெறும் புதுமணத் தம்பதியர் புதுமண வாழ்வின் இனிமையைத் துய்த்து மகிழ்கின்றனர்சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அவர்கள் வாழ்வில் இடையூறு வந்து சேர்கிறதுசோழன் அவையில் நடன அரங்கேற்றம் செய்து தலைக்கோல் அரிவை என்ற பட்டத்தையும், 1008 கழஞ்சு பொன் விலை பெறும் பச்சை மாலையையும் பரிசாகப் பெற்றமாதவியைச் சேர்ந்து அந்த மகிழ்ச்சியில் தன் மனைவியை மறக்கிறான் கோவலன்.
    விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
    வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்து

            (சிலப்பதிகாரம்:3:174-175)
(வடு குற்றம்)
    மாதவி ஆர்வ நெஞ்சத்தோடு கோவலனுடன் கூடி மகிழ்ந்திருக்ககண்ணகி கையற்ற (செயலற்றநெஞ்சோடு தனித்துத் தவிக்கிறாள்.
    இந்தச் சூழலில் புகார் நகரில் இந்திரவிழா தொடங்குகிறதுவிழாவில் மாதவி விண்ணவரும் போற்றப் பதினோரு ஆடல்களை ஆடி மகிழ்விக்கிறாள்அவள் கலைமகள்விழாவில் ஆடுவது அவளுக்குச் சிறப்புகோவலன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஊடல் கொள்கிறான்அவன் ஊடல் தீர்க்கப் பலவாறாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அவனோடு கடலாடச் செல்கிறாள் மாதவிஅவன் கையில் யாழைக் கொடுக்கிறாள்கோவலன் மாதவி மனம் மகிழ வாசிக்கிறான்அவன் பாடிய காதற் பாடல்களுள் வேறு யாரையோ விரும்பும் குறிப்பு இருப்பதாக நினைத்த மாதவிதானும் ஒரு குறிப்புடையவள்போல யாழிசையோடு பாடுகிறாள்மாதவியின் பாடல் கேட்ட கோவலன்,
கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்

            (சிலப்பதிகாரம்: 7: 52-2-3)
என அவளை இழிவாக நினைத்துப் பிரிந்து போகிறான்.
    கோவலன் பிரிவால் வாடிய மாதவி தன் காதல் உணர்வை எல்லாம் தாழை மடலில் கடிதமாகத் தீட்டி வசந்தமாலை என்ற தன் தோழியிடம் கொடுத்தனுப்புகிறாள்; 'கடிதம் காட்டிக் கோவலனை அழைத்து வாஎன வேண்டுகிறாள்கடிதம் கண்ட கோவலன் 'அவள் ஒரு நாடக நடிகைகை தேர்ந்த நடிகைஎன்பால் அன்புடையவள் போல் இதுவரை நடித்திருக்கிறாள்என்று கூறி மடலை ஏற்காமல் வசந்த மாலையை அனுப்பி விடுகிறான்.செய்தியறிந்த மாதவியோ 'மாலைக்காலத்தே வாரார் ஆயினும் காலையில் காண்போம்என்று வருந்திக் காத்திருக்கிறாள்.
    ஆனால் கோவலனோதன் மனைவி கண்ணகியிடம் செல்கிறான்தன் செயலுக்கு வருந்துகிறான்அவேளா தீய கனவொன்று கண்ட குழப்பத்தில் இருக்கிறாள்அந்த நேரத்தில் 'மாதவியோடு வாழ்ந்து என் குலம் தந்த குன்று போன்ற பொருளை எல்லாம் இழந்துவிட்டேன்அது நாணமாக இருக்கிறதுஎன்கிறான். 'மாதவிக்குப் பொருள் கொடுக்க ஒன்றுமில்லை என வருந்துகிறான் போலும்என எண்ணிய கண்ணகி 'சிலம்புகள் உள்ளனகொள்க'என்கிறாள்தன் மனைவியின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட கோவலன் 'அச்சிலம்பையே முதலாகக் கொண்டு மதுரை சென்று வணிகம் செய்வேன்புறப்படுஎன்கிறான்மறுப்பு இன்றி அவளும் புறப்படுகிறாள்புகார் நகரிலிருந்து மதுரை வரை அவர்களுக்கு வழித்துணையாகச் சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் வருகிறார்அவர்கள் சோழ நாட்டு வளங்களைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்து சீரங்கத்தை அடைகின்றனர்பின் காவிரியைக் கடந்து நடக்கின்றனர்இத்துடன் புகார்க் காண்டம் முற்றுப் பெறுகிறது.
2.2.2 மதுரைக் காண்டம்
    உறையூரைத் தாண்டிஒரு மறையவனிடத்தில் வழிகேட்டுநடந்து ஒரு கொற்றவை கோயிலை அடைகின்றனர்.அங்குப் பாலைநில மக்களின் கொற்றவை வழிபாட்டைக் கண்டு களிக்கின்றனர்சாலினி என்ற வேட்டுவப் பெண்ணின் மேல் வந்த கொற்றவை அங்கிருக்கும் கண்ணகியைப் பலவாறு போற்றுகிறாள்.
    இவேளா கொங்கச் செல்வி குடமலை யாட்டி
    தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
    ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமா மணி

            (சிலப்பதிகாரம்: 12: 47-50)
(பொருள்: இவள் கொங்குநாடுகுடநாடுதென்தமிழ்நாடு ஆகிய நாடுகளை ஆளும் தெய்வ மகள்முற்பிறப்பில் செய்த தவத்தின் காரணமாக இத்தகைய சிறப்பினைப் பெற்றவள்மிக உயர்ந்த மாணிக்க மணி திரண்டு பெண் உருக்கொண்டது போன்ற சிறப்புடையவள்.)
    பின்னர்க் கோவல கண்ணகியர் தம் பயணத்தைத் தொடர்கின்றனர்வழியில் மாதவி அனுப்பிய தூதுவனாகிய கோசிகன் எனும் அந்தணன் கோவலனைத் தனியே சந்திக்கிறான்மாதவி கொடுத்தனுப்பிய இரண்டாவது கடிதத்தைக் கொடுக்கிறான்.
    கோவலனைப் பிரி்ந்த அவன் பெற்றோர்புகார் மக்கள்மாதவி முதலானோரின் துயரைக் கோசிகன் மூலம் கேட்டு உணர்கிறான்அதோடு மாதவி தீங்கற்றவள் என்பதைக் கடிதத்தின் மூலம் புரிந்து கொள்கிறான்எல்லாவற்றிக்கும் தன் செயலே காரணம் என உணர்கிறான்.
    தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
    என்தீது என்றே எய்தியது உணர்ந்து

            (சிலப்பதிகாரம்: 13: 64-65)
    பின்னர்ப் பயணம் தொடர்ந்துஅவர்கள் வையை ஆற்றைக் கடந்து மதுரையின் மதில் புறத்தில் உள்ள புறஞ்சேரியை அடைகின்றனர்விடிந்ததும்கோவலன் கவுந்தியிடம் கண்ணகியை ஒப்படைத்து விட்டு மதுரைக்குள் செல்கிறான்.அவன் வணிக இனத்தாரைக் கண்டு வணிகம் செய்து பொருள் ஈட்டும் தன் நோக்குடன் செல்கிறான்மதுரையிலுள்ள இரத்தினக் கடைவீதிபொன் கடைவீதிகூலவீதிபரத்தையர் வீதி எனப் பலவற்றைக் கண்டு மதுரையின் அழகில்,வளத்தில் மகிழ்வு எய்திமெய்ம்மறந்து திரும்புகிறான்.
    புறஞ்சேரி வந்த மாடலன் என்னும் மறையோன் கவுந்தியடிகளை வணங்குகிறான்மாடலனைக் கோவலன் வணங்குகிறான்தீவினையால் துயருற்ற கோவலனைக் கண்ட மாடலன்அவன் முன்னர்ச் செய்த நல்வினைகளை எல்லாம் எடுத்துரைக்கிறான்.
ஒரு முதிய பார்ப்பனன் உயிரைக் காப்பாற்ற மதயானையை எதிர் கொண்டு அடக்கிய கருணை மறவன்.
அறியாது கீரிப்பிள்ளையைக் கொன்ற ஒரு பார்ப்பனியின் துயர் துடைத்தவன்.
ஒரு பத்தினிபால் பழி சுமத்திய பொய்யன் உயிரைப் பூதத்திடமிருந்து காக்கத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த தியாக சீலன்.
இப்படி இந்தப் பிறவியில் நல்வினையே செய்த கோவலன் துயர் அடையக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன்போலும் - என உரைக்கிறான்அவனிடம் கோவலன் தான் கண்ட தீய கனவினைக் கூறுகிறான்.
    கனவில் கீழ்மகன் ஒருவனால் தன் ஆடை களையப்பட்டு எருமைக் கடாவில் ஏறிச் செல்லவும்கண்ணகி மிகப்பெரிய துன்பம் அடையவும்பின்னர் இருவரும் சான்றோர் அடையும் துறக்க உலகம் செல்லவும்மாதவிமணிமேகலையை பௌத்தத் துறவியாக்கவும் கண்டதாகக் கூறுகிறான்உடன் கேட்டுக் கொண்டிருந்த கவுந்தியடிகள்இப்புறஞ்சேரி தவத்தோர் வாழும் இடம்இங்கு இல்லறத்தார் தங்குதல் கூடாது என்று கூறி மாதரி என்னும் ஆயர் மகளிடம் கோவல-கண்ணகியரை அடைக்கலப் படுத்துகிறார்இங்கு அருகனைத் தவிரப் பிற கடவுளரை வணங்காத கவுந்தியடிகள் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லதுபொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம் எனக் கண்ணகியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசுகிறார்.
    மாதரி வீட்டில் அடைக்கலம் புகுந்த கண்ணகிஅவள் மகள் ஐயை துணையுடன் உணவு சமைத்துக் கோவலனுக்குப் படைக்கிறாள்அமுதுண்ட கோவலன்கண்ணகிக்குத் தான் செய்த தீங்கினை எண்ணி இரங்குகிறான்:
    இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
    சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்

            (சிலப்பதிகாரம்: 16: 67-68)
(முதுகுரவர் பெற்றோர்;
முதுக்குறைவி பெரும் அறிவுடையவள்)
தன் தீங்கை எல்லாம் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுகிறான்.
    என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
    பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

         (சிலப்பதிகாரம் : 16: 88-89)
எனப் பாராட்டுகிறான்.
பின் அவளுடைய சிலம்பில் ஒன்றை எடுத்து விற்றுவரச் செல்கிறான்அவன் எதிரேநூறு பொற்கொல்லர்களுடன் அரண்மனைப் பொற்கொல்லன் வருகிறான்அவனிடம், காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணிநீவிலை இடுதற்கு ஆதியோ (சிலப்பதிகாரம்: 16: 111-112) (அரசனுடைய தேவிக்குப் பொருத்தமான இச்சிலம்பின் விலையை நீ சொல்ல முடியுமா?) எனச் சிலம்பைக் காட்டிக் கேட்கிறான்இது பொற்கொல்லனைச் சிந்திக்கத் தூண்டுகிறதுதான் திருடிய சிலம்போடு இச்சிலம்பு ஒத்திருப்பது கண்டுதேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என அரசனிடம் காட்டிக் கொடுக்கிறான்அரசனோகள்வன் கையில் அச்சிலம்பு இருப்பின் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக'என ஏவலர்க்கு ஆணையிடுகிறான்இதனால் கோவலன் கொலைப்படுகிறான்இதனை அவலச் சுவையுடன் அனைவர் நெஞ்சமும் நெகிழ வெளியிடுகிறார் இளங்கோ.
    மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
    காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
    கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து

            (சிலப்பதிகாரம்:16: 215-17)
(நிலமகள் மிகப்பெரிய துன்பம் அடையவும்அரசனின் நீதி பிறழவும்கோவலன் பண்டை வினை காரணமாக வீழ்ந்து படுகிறான்.)
    புறஞ்சேரியில் ஆய்ச்சியர்கள் சில தீய நிமித்தங்களைக் கண்டதால் வரும் துயர்கள் நீங்குவதற்காகக் கண்ணனைப் போற்றிக் குரவைக் கூத்தினை நிகழ்த்துகின்றனர்ஆய்ச்சியர் கண்ணனுடைய அவதாரச் சிறப்புக்களை எல்லாம் வியந்து போற்றிப் பாடி ஆடுகின்றனர்.
    கூத்தின் முடிவில் கோவலன் கொலைப்பட்டான் என்ற செய்தி வருகிறதுகேட்ட கண்ணகி அழுது புலம்பி அரற்றுகிறாள்அவளது அவலம்பின்னர் அவல வீரமாக மாறுகிறதுமன்னவன் தவற்றால்திருடன் என்று பழி சுமத்தப்பட்டு என் கணவன் கொலைப்பட்டான்அவனுக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பேன் என்று வீறு கொண்டு எழுகிறாள்கதிரவனைப் பார்த்துக் கள்வனா என் கணவன்? என்று கேட்கிறாள்அப்போது கள்வன் அல்லன் என அசரீரியாகச் செய்தி வருகிறதுதன் எஞ்சிய ஒரு சிலம்பைக் கையில் ஏந்தியவளாய் மதுரை நகர்ப் பெண்களிடம் பலவாறு சூளுரைத்து நடக்கிறாள். காதற் கணவனைக் காண்பேன்அவன் வாயில் தீதுஅறு நல்லுரை கேட்பேன்என்கிறாள்மதுரை மக்கள் தென்னவன் கொற்றம் சிதைந்தது என்றும்,செம்பொற் சிலம்பொன்று கையேந்தி வம்பப் பெருந்தெய்வம் வந்ததுஎன்றும் அஞ்சிப் பதறுகின்றனர்கொலைப்பட்டுக் கிடக்கும் கோவலன் பாதம் பற்றி அழுகிறாள் கண்ணகிஅப்பொழுது அவன் உயிர்கொண்டு, நீ இங்கு இரு என்று சொல்லிமறுபடி உடம்பைத் துறந்து வானுலகு செல்கிறான்பின் கண்ணகி தீவேந்தனைக் கண்டு வழக்குரைப்பேன் என அரண்மனை செல்கிறாள்.
    
    பாண்டிய மன்னனிடம், 'தேரா மன்னாஎன் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான்என் சிலம்பு மணிகளை உள்ளீடாகக் கொண்டதுஎன வழக்குரைக்கிறாள்பாண்டியன் தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தன் சிலம்பை வரவழைத்துக் கொடுக்கிறான்கண்ணகி சிலம்பை உடைக்கிறாள்அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து வீழ்கிறது; 'பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யான் அரசன் அல்லன்யானே கள்வன்எனக் கூறிப் பாண்டிய மன்னன் உயிர்விடுகிறான்;
    பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட
    யானோ அரசன் யானே கள்வன்

            (சிலப்பதிகாரம்: 20: 74-75)
பாண்டிமாதேவியும் உயிர்விடுகிறாள்.
    கண்ணகி புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்களின் வரலாற்றைக் கூறி, 'நானும் அவர்களைப் போன்ற ஒரு பத்தினியாகின் இந்த அரசையும் மதுரையையும் ஒழிப்பேன்எனச் சூள்உரைக்கிறாள்தன் இடமுலையைத் திருகி,மதுரையை வலம்வந்துவீதியில் எறிகிறாள்அப்போது தீக்கடவுள் தோன்றி அவளிடம் ஏவல் கேட்கிறான்பார்ப்பனர்,அறவோர்பசுபத்தினிப்பெண்டிர்மூத்தோர்குழந்தைகள் இவர்களை விடுத்துத் தீயவர்களை மட்டுமே அழிக்க என அனல் கடவுளுக்கு ஆணையிடுகிறாள்மதுரை எரிகிறதுஅங்கிருந்த அரச-அந்தணவணிக-வேளாண் பூதங்கள் வெளியேறுகின்றன.
    மதுரையின் காவல்தெய்வமான மதுராபதி கண்ணகி முன் தோன்றிக் கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவன் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக அவனுக்கு இடப்பட்ட சாபமே என எடுத்துக்கூறிமதுரையைத் தீயிலிருந்து விடுவிக்கிறாள்பின்னர்க் கண்ணகி மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைகிறாள்நெடுவேள் குன்றில் ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கிறாள்பதினான்கு நாள் கடந்த பின்னர்இந்திரன் முதலிய தேவர் வந்து அவளைப் போற்றுகின்றனர்அவர்கேளாடு இருந்த கோவலனோடு சேர்ந்து வான ஊர்தியில் ஏறித் துறக்கம் செல்கிறாள் கண்ணகிஇத்துடன் மதுரைக்காண்டம் முடிகிறது.
2.2.3 வஞ்சிக் காண்டம்
    கண்ணகி வானுலகு சென்ற காட்சியைக் கண்ட மலைக்குறவர்கள்அவளைத் தம் குல தெய்வமாகக் கருதி அவளுக்காகக்குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர்மலைவளம் காணவந்த அரசன் செங்குட்டுவனிடம் தாம் கண்ட காட்சியை எடுத்துரைக்கின்றனர்உடனிருந்து சாத்தனார் கோவலகண்ணகியர் வரலாற்றை-புகார்மதுரை நிகழ்வுகளை-அரசனுக்கு விளக்குகிறார்கேட்ட அரசமாதேவி, 'நம் சேரநாடு வந்த இப்பத்தினிக் கடவுளுக்கு வழிபாடு எடுக்க வேண்டும்என்கிறாள்.
    நம் அகல்நாடு அடைந்த இப்
    பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்

         (சிலப்பதிகாரம்: 25: 113-114)
(பரசல் வழிபடல்)
    கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடு்த்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும்தமிழர் வீரத்தை நிலை நாட்டுவதற்காகவும் சேரன் படை எடுத்துச் செல்கிறான்.வழியில் பல மன்னர்கள் திறைப் பொருளுடன் சேரனை வரவேற்கின்றனர்வாழ்த்துகின்றனர்எதிர்த்த மன்னர்களைச் சேரன் வெல்கிறான்.
கண்ணகி சிலை வடிக்கஇமயத்தில் கல் எடுத்துதமிழர்தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்துகங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான்அப்போது அங்கு வந்த மாடல மறையோன் சேரனின் வெற்றியைப் புகழ்கிறான்பின்னர்க் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்தவற்றைக் கேட்ட அவர்களின் தாயர் இறந்துபட்டனர் என்பதையும்அவர்தம் தந்தையர் துறவு மேற்கொண்டனர் என்பதையும்மாதவி-மணிமேகலை பௌத்தத் துறவியாகினர் என்பதையும்கவுந்தியடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பதையும் அடைக்கலமாகக் கண்ணகியைப் பெற்ற மாதரி தீப்பாய்ந்து உயிர்துறந்தாள் என்பதையும்கொற்கை அரசன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டான் என்பதையும் தெரிவிக்கிறான்இவ்வாறு புகார்மதுரை நிகழ்வுகளைக் கேட்டறிந்த செங்குட்டுவன் வஞ்சி திரும்புகிறான்.
    சேரன் சிற்பநூல் வல்லாரைக் கொண்டு கண்ணகிக்குக் கோயில் எழுப்புகிறான்இமயக் கல்லில் வடிக்கப்பட்ட கண்ணகி சிலையைப் பிரதிட்டை செய்து முறைப்படி வழிபாடு நடத்துகிறான்கண்ணகியின் அடித்தோழிதேவந்தி,காவற்பெண்டு முதலானோர் அங்கு வந்து கண்ணகியை வாழ்த்திப் பாடுகின்றனர்பத்தினிக் கடவுள் மின்னல் கொடியாகச் செங்குட்டுவனுக்கும் காட்சியளிக்கிறாள்முன்பு பாண்டியனைப் பழிவாங்கிய வீரக்கண்ணகிஇங்கு அவனை மன்னித்து அருள் செய்யும்அருள் கடவுளாக மாறுகிறாள்.
தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான் நான்அவன் தன் மகள்
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்

        (சிலப்பதிகாரம்: 29 பாடல் : 10)
என அருள்புரிகிறாள்.
(பாடல் பொருள்பாண்டியன் தீமையற்றவன்அவன் தேவர் உலகம் அடைந்து தேவர்களின் விருந்தினன் ஆகிவிட்டான்நான் அவனுடைய மகள்நான் இம்மலை நாட்டில் எப்போதும் நீங்காது தங்குவேன்என் அருமைத்தோழியரேநீங்கள் எல்லோரும் வாருங்கள்)
    கண்ணகிக் கடவுளின் அருள்பெற்ற தோழியர் அம்மானை வரிகந்துகவரிஊசல்வரி முதலான வரிப்பாடல்களால் மூவேந்தரையும்பத்தினிக் கடவுளையும் வாழ்த்துகின்றனர்இப்பத்தினி வழிபாட்டில் பன்னாட்டு மன்னர்கள் கலந்து கொள்கின்றனர்குறிப்பாக இலங்கைக் கயவாகு மன்னன் இவ்விழாவில் கலந்து கொள்கிறான்பத்தினிக் கடவுள்,அவ்வந்நாட்டு வழிபாட்டில் தான் எழுந்தருளுவதாக வரமளிக்கிறாள்இத்துடன் வஞ்சிக்காண்டம் நிறைவு பெறுகிறது.