வெள்ளி, 30 டிசம்பர், 2016

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்'

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்' உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான, மாநில தகுதி தேர்வு பட்டியலை, வெளியிட தடை கோரிய வழக்கில், அரசுக்கு,
'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டியன் செல்வராஜ் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., - -எம்.பில்., படித்துள்ளேன். கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநில தகுதி தேர்வை, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை, பிப்., 21ல் நடத்தியது. கணித
அறிவியல் பாடத்திற்கான தேர்வை எழுதினேன். தேர்வு முடிவு அக்., 24ல் வெளியானது. எனக்கு, 190 மதிப்பெண் கிடைத்தது. பிற்பட்டோர் பிரிவிற்கான, 'கட்- ஆப்' 192. கணித அறிவியல் பகுதி, மூன்றுக்கான
தாளில், ஐந்து வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் சம்பந்தமின்றி உள்ளன. 'கீ' பதில்களும் தொடர்பின்றிஉள்ளன.அவ்வினாக்களுக்கு விடை அளித்திருந்தாலே, முழு மதிப்பெண் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால்,எனக்கு, 200 மதிப்பெண் கிடைத்திருக்கும்.மறு மதிப்பீடு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க கோரி, மாநில தகுதிதேர்வு உறுப்பினர் செயலருக்கு மனு அனுப்பினேன்; நடவடிக்கை இல்லை. தேர்வில் தகுதியான வர்கள் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஐந்து வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கி,தகுதியானவர்கள் பட்டியலில் என் பெயரை சேர்த்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு
செய்திருந்தார். மாநில தகுதி தேர்வு உறுப்பினர் செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

24 எழுத்தாளர்களுக்கு 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது


தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.க.சி.யின் மகன்

கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழில் காத்திரமான படைப்புகளை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் வண்ணதாசன். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்ட இவர், கவிதைகளை கல்யாண்ஜி எனும் பெயரில் எழுதி வருகிறார். கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

இவரது 15 சிறுகதைகள் அடங்கிய 'ஒரு சிறு இசை' என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளி யிட்டது. இந்த சிறுகதை தொகுப் புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. வங்கிப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற வண்ணதாசன், தமிழின் மூத்த மார்க்சிய எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

24 எழுத்தாளர்களுக்கு விருது

இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.

8 பேர் கவிஞர்கள்

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 படைப்பாளிகளில் 8 பேர் கவிஞர்கள் ஆவர். ஜனன் பூஜாரி (அசாமி), அஞ்சு (போடோ), கமல் வோரா (குஜராத்தி), பிரபா வர்மா (மலையாளம்), சீதாநாத் ஆச்சார்யா (சமஸ்கிருதம்), கோவிந்த சந்திரா மாஜி (சந்தாலி), நந்த் ஜவேரி (சிந்தி) மற்றும் பப்பினேனி சிவசங்கர் (தெலுங்கு) ஆகிய கவிஞர்கள் கவிதைகளுக்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சத்திரப்பால் (தோக்ரி), ஷியாம் தாரிஹர் (மைதிலி), மொய்ரந்தம் ராஜன் (மணிப்புரி), ஆசாராம் லோமதே (மராத்தி), பரமிதா சத்பதி (ஒடியா), புலாகி சர்மா (ராஜஸ் தானி) மற்றும் வண்ணதாசன் (தமிழ்) ஆகிய 7 பேர் சிறுகதைகளுக்காக விருது பெற்றுள்ளனர்.

சிறந்த நாவல்களுக்காக ஜெர்ரி பிண்டோ (ஆங்கிலம்), நசிரா சர்மா (இந்தி), பொலுவாரு முகமது குன்ஹி (கன்னடம்), எட்வின் ஜே.எப்.டி. ஜவுஷா (கொங்கனி) மற்றும் கீதா உபாத்யாய் (நேபாளி) ஆகிய 5 எழுத்தாளர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த விமர்சன நூல்களுக்காக ஆசிஷ் ஹஜினி (காஷ்மீரி), நிஜாம் சித்திக் (உருது), சிறந்த கட்டுரை நூலுக்காக பதுரி (பெங்காலி), சிறந்த நாடக நூலுக்காக சுவராஜ்பிர் (பஞ்சாபி) ஆகியோருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட் டுள்ளது.

தேர்வுக் குழு

ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நூலைத் தேர்வு செய்ய தனித்தனி தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. தமிழ் மொழியில் விருதுக்கான நூலைத் தேர்வு செய்யும் குழுவில் முனைவர் டி.செல்வராஜ், முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன், முனைவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பிப்ரவரி 22-ல் விழா

தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை மற்றும் செப்பு பட்டயம் வழங்கப்படும்.


 

சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன்


விருதுபெறும் புத்தகம் (இடது), வண்ணதாசன் (வலது)
விருதுபெறும் புத்தகம் (இடது), வண்ணதாசன் (வலது)

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ண தாசன் 22.8.1946-ல் பிறந்தவர். கல்யாணசுந்தரம் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர். இவரது `ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, வைரமுத்து கவிஞர் தின விருது என்று 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில் விஷ்ணு புரம் விருது பெறவுள்ளார். 

உங்களது முதல் எழுத்து அனுபவம் குறித்து..?

பள்ளியில் படிக்கும்போது தி.சு.ஆறுமுகம் என்ற தமிழாசிரியர் தமிழ் கற்றுக்கொடுத்தார். அவரது வகுப்பில் வைத்துத்தான் சீட்டுக் கவிதைகளை எழுதி அரங்கேற்றம் செய்தேன். 1962-ல் 'ஒரு ஏழையின் கண்ணீர்' என்கிற எனது முதல் சிறுகதை `புதுமை' என்ற இதழில் வெளிவந்தது. ஒரு அச்சகத்தில் வேலை பார்ப்பவனின் கதை அது. அதன் பிரதிகூட இப்போது என்னிடம் இல்லை.

2000-ல் உங்களது தந்தை, திறனாய்வாளர் தி.க.சி.-க்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. உங்களது எழுத்துக்கு அவர் அளித்த ஊக்கம்போன்று வேறு யாரேனும் ஊக்கமாக இருந்துள்ளார்களா?

எனது தந்தை முதல் காரணம். அவர் உருவாக்கிய எங்கள் வீட்டு நூலகம் என்னை அதிகம் வாசிக்க வைத்திருந்தது. எனது அண்ணன் கணபதி நல்ல படைப்பாளி. வண்ணதாசன் என்ற பெயர்கூட அண்ணனிடமிருந்து நான் எடுத்துக்கொண்டதாக நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் தந்தைக்கும், மகனுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்.

வண்ணதாசன், கல்யாண்ஜி என்கிற உங்கள் புனைப் பெயர்களைப் பற்றி?

வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளையும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதுகிறேன். வர்ணம் என்ற குமுதம் ஓவியர் மீது எனது அண்ணன் கணபதிக்கு ஒரு பெரிய ஈடுபாடு. வர்ணதாசனாக அவர் இருந்தார். எனக்கு வல்லிக்கண்ணன் மீது ஈடுபாடு. சுப்புரத்தினதாசன் என்பதை ஒரு கவிஞர் சுரதா என வைத்துக்கொண்ட மாதிரி, வல்லிக்கண்ணதாசனை 'வண்ண தாசன்' என மாற்றிக்கொண்டேன். ஆனால், இப்பெயர் என் அண்ணனிடம் இருந்து எடுத்துக் கொண்ட மாதிரிதான் ஞாபகம்.

எல்லா கதைகளிலும் நீங்களே 'கதை சொல்லி'யாக இருக்கிறீர்களே?

வாழ்க்கையின் தளத்தில் இருந்து தான் எழுத முடியும். ஜெயகாந்தனால் குதிரை வண்டிக்காரனைப் பற்றி எழுத முடிகிறது. வண்ணநிலவனால் கடல்புரத்து மக்களைப் பற்றி எழுத முடிகிறது. நான் சுந்தரத்து சின்னம்மை பற்றி எழுதுகிறேன். நேரடிப் பங்கேற்பு அனுபவம் இல்லாதவரை அப் படைப்பாளியால் அதை எழுத முடியாது. பரமசிவன் என்கிற நண் பரை பற்றி எழுதும்போது, சிவன், சிவன் என்றே எழுதியிருப்பேன். சில நேரங்களில் குறியீடுகளாய் மாற்றி எழுதியுள்ளேன்.

உங்களது நட்பு வட்டாரம் குறித்து…?

மிகக் குறைந்த நண்பர்கள், சுருக்கமான நட்பு வட்டாரம். வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ர மாதித்யன். இப்படியான எங்க ளது நால்வரை குறித்தும் விக்ர மாதித்யன் எழுதியுள்ள 4 பேர் கட்டுரை நல்ல கட்டுரை. நண்பர்களும் எழுத்தாளர்களாய் அமைவது பெரிய விஷயம்.

நாவல் எழுத இதுவரை முயற்சிக்காதது ஏன்?

தடை ஒன்றும் இல்லை. இன்று நினைத்தாலும் எழுதி விடலாம். என்னுடைய 15 சிறுகதைகளை முன் பின்னாக எப்படி மாற்றிப்போட்டாலும் நாவல் வடிவம் வந்துவிடும். என்னுடைய சிறுகதைகளை நானே இப்படிச் செய்யமுடியும். இலங்கையிலும் பிறமொழி இலக்கியங்களிலும் இப்போக்கு நடைமுறைக்கு வந்து விட்டது. அதையே சுவாரசியமான நாவலாக்கிவிடலாம். தடையேதும் இல்லை.

சாகித்ய அகாடமி விருதுபெற்றுள்ள நிலையில் இளம் படைப்பாளிகளுக்கு எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

அதிகம் வாசிக்க வேண்டும். படைப்பாளிகளாக இருந்து கொண் டும் இப்போதும் நாங்கள் வாசித்துக் கொண்டே இருக்கி றோம். படைப்பாளிகள் சிறந்த வாசகர்களாக இருக்க வேண்டும்.




 

வியாழன், 22 டிசம்பர், 2016

TN SET 2017 ANOUNCEMENT BY MOTHER THERASA UNIVERSITY


Numerous false information, distorted and unauthentic news is being floated on unauthorized websites regarding the Tamil Nadu State Eligibility Exams 2017(TNSET 2017). You are requested NOT to believe or refer to these websites. The only authentic websites are given below.

1.www.motherteresawomenuniv.ac.in

2.www.setresult2016.in

These websites alone have to be referred to, for genuine details.

 



 

சனி, 17 டிசம்பர், 2016

படைப்பாளிகள் அல்லா தோருக்கு சாகித்ய அகாதமியில் என்ன வேலை?”

காப்காவின் புகழ்பெற்ற நாவலான விசாரணையில் வரும் குட்டிக் கதை இது. சட்டத்தின் வாசலில் ஒரு வாயிற்காவலன் நிற்பான். நீதி பெற விரும்புபவர்கள் ஒவ்வொருவரையும் உள்ளே விடாமல் பலவந்தமாகத் தள்ளிக்கொண்டே இருப்பான். அவன் களைப்புறும்போது மட்டுமே ஒருவர் அந்த வாசலுக்குள் நுழைய முடியும்.

தமிழில் வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருதுக்கு இந்தக் கதை முற்றிலும் பொருந்தும். தரமற்றவர்கள் தங்கள் செல்வாக்காலும் அரசியல் பலத்தாலும், வரிசையில் வரும் சிறந்த எழுத்தாளர்களை வருடம்தோறும் தள்ளிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள், களைத்து அமரும்போது எப்போதாவது தரமான எழுத்தாளருக்கு அந்த விருது செல்லும். எப்போதும் விளையாடத் தெரியாதவர்கள் மட்டுமே வெற்றிபெறும் அபூர்வமான தமிழ் விளையாட்டு இது. டிசம்பர் மாதம் வந்துவிட்டது. இந்த வருடம் சாகித்ய அகாதமியை வெல்லப்போவது எழுத்தாளரா? எழுத்தாளரைப் போன்றவரா?

சி.மோகன் எழுத்தாளர்

"தமிழைப் பொறுத்தவரை, சாகித்ய அகாதமி விருதுகள் அளிக்கும் முறை தொடங்கிய விதமே துரதிர்ஷ்டவசமானது. தொடக்க காலத்திலேயே நவீன இலக்கியத்தின் பரிச்சயம், அதன் வளம் பற்றி எதுவும் தெரியாத கல்வியாளர்களும் அறிஞர்களும்தான் பரிசுகளைத் தீர்மானித்தார்கள். நவீன படைப்பிலக்கியத்துடன் தொடர்பே அற்ற ரா.பி. சேதுப்பிள்ளை, ராஜாஜி தொடங்கி அ. சீனிவாச ராகவன் வரை பரிசுபெற்றனர். அந்தப் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படைப்பைக்கூட இன்றைய தமிழிலக்கிய மாணவர்கள் நினைவுகூரவே முடியாது. அடுத்த கட்டமாக நடந்தது மேலும் அபாயகரமானது. கம்யூனிஸமும் முழுமையாகத் தெரியாத, இலக்கிய ரசனையும் இல்லாத கம்யூனிஸ்ட்டுகள், வானம்பாடிகள், கல்வியாளர்கள் தமிழ் சாகித்ய அகாதமியின் அதிகார வட்டத்தை ஆக்கிரமித்து, பரிசுகளை நிர்ணயித்தார்கள். நவீனத் தமிழில் காத்திரமான பங்களித்த எழுத்தாளர்கள் மீது குரோதத்துடனும் வன்மத்துடனும் அவர்கள் நடந்துகொண்டனர். இன்றும் அந்தப் பாரம்பரியத்திலிருந்து அகாதமி முழுக்க வெளிவர முடியவில்லை. இடையிடையே விதிவிலக்குகளாக கு.அழகிரிசாமி, அ.மாதவன், நீல. பத்மநாபன், சு.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும் அது இலக்கியமல்லாத காரணங்களுக்காகவே வழங்கப்பட்டவை. அவை விதிவிலக்குகளே. நான் தேர்வுக் குழுவில் இருந்த ஆண்டில் என்னுடன் பேராசிரியர் தமிழண்ணல் இருந்தார். இன்னொரு உறுப்பினர் நவீன இலக்கியப் பரிச்சயம் ஏதுமில்லாத கோவையைச் சேர்ந்த ஒரு இளம் கவிஞர்!"

கி. நாச்சிமுத்து பேராசிரியர், சாகித்ய அகாதமி ஒருங்கிணைப்பாளர்

"இந்தியாவில் 24 மொழிகளுக்கும் சாகித்ய அகாதமி தலா 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இந்த 10 பேரில் ஒருவர் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுவார். பதவிக்காலம் ஐந்தாண்டுகள். இப்போதைய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருப்பவன் எனும் வகையில் சொல்கிறேன், ஆண்டுதோறும் அந்தந்த மொழியில் வெளிவரும் சிறந்த படைப்பைத் தேர்வுசெய்வதற்கு 100 பேரிடம் 'கிரவுண்ட் லிஸ்ட்' என்று சொல்லப்படும் அடிப்படைப் பட்டியலைக் கோருகின்றனர். அந்தப் பட்டியலிலிருந்து முதல்நிலைப் பட்டியல் ஒன்று சலித்தெடுக்கப்படும். ஆலோசனைக் குழுவிலுள்ள 10 பேரும், இந்த இரண்டு பட்டியல்களிலும் இல்லாத படைப்புகளின் பெயரையும் சேர்க்கலாம். இவற்றிலிருந்து 15 முதல் 20 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த இறுதிப் பட்டியல், சாகித்ய அகாதமியின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நடுவர்கள் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப்படும். இந்த மூன்று பேர் யார் என்பது சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருக்கே தெரியாத ரகசியம். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை, அந்தந்த மொழிகளுக்காகச் செயல்படும் சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழுவினர் ஒரு பட்டியல் கொடுப்பார்கள். படைப்பாளர்கள், முன்னாள் விருதாளர்கள், கல்வியாளர்கள், விமர்சகர்கள் ஆகியோர் கொண்ட பட்டியல் அது. அதிலிருந்துதான் மூன்று நடுவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளரைப் பொறுத்தவரை இந்த மூன்று பேர் தேர்விலும், அவர்கள் தேர்வு செய்யும் படைப்புகளிலும் எந்தத் தலையீடும் செய்ய முடியாது!"

ஜெயமோகன் எழுத்தாளர்

"சாகித்ய அகாதமி விருதுக்கான அடிப்படைப் பட்டியலைத் தயாரிக்கும் முறையிலேயே ஜனநாயகப் பங்கேற்பு என்ற பெயரில் சிறந்த படைப்பாளிகள் இல்லாமலாகிவிடுகிறார்கள். தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதால் கல்வியாளர்களை எளிதாக இடதுசாரிகள் தங்களுக்குச் சார்பாக வசப்படுத்திவிடுகிறார்கள். தமிழண்ணல் காலத்தில் சாகித்ய அகாதமி விருதுத் தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது. கவிஞர் பாலா, சிற்பி காலகட்டத்தில் நிலைமை மேலும் மோசமானது. சாகித்ய அகாதமி விருதுகள் தொடர்பாக முற்றிலும் கவுரவம் குலைந்து விமர்சனங்கள் பெருகும் போதெல்லாம், இடையிடையே நல்ல படைப்பாளிகள் சிலருக்கு விருதுகளை வழங்கித் தப்பித்துக் கொள்வது இவர்களுடைய உத்தி களில் ஒன்று. ஒரு எழுத்தாளனாக என்னுடைய எளிமையான கேள்வி இதுதான்: படைப்பாளிகள் அல்லா தோருக்கு சாகித்ய அகாதமியில் என்ன வேலை?"

ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர்

"ஒரு எழுத்தாளராகவும் தமுஎகச நிர்வாகியாகவும் இந்தத் தேர்வுகளை நான் தொடர்ந்து கவனித்துதான் வருகிறேன். விருதுக்காக அமைக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்களின் வாசிப்பனுபவமும் அவர்களின் விருப்பு வெறுப்பும் விருதுத் தேர்வோடு பிரிக்க முடியாமல் இருக்கிறது. மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன்."

கண்ணன் பதிப்பாளர்

"முன்பு படுமோச மாக இருந்தார் கள். இப்போது நிலைமை கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. ஆனால், சாகித்ய அகாதமி விருது தகுதி யானோரைப் போய்ச் சேர வேண்டும் என்றால், தேர்வுக்கான இறுதிப் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதில் மர்மம் நிலவத் தேவை என்ன? அதேபோல, சாகித்ய விருதோடு மட்டும் இந்த விமர்சனங்களை முடித்துக்கொள்வது தவறு. தமிழக அரசு, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் விருதுகள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன? ஏன் நாம் அதை விமர்சனத்துக்குள்ளாக்குவதேயில்லை? ஒரு பதிப்பாளராக நான் உணர்வது இதைத்தான். உண்மையில் இங்கு விருதுத் தேர்வில் நிலவும் மோசமான கலாச்சாரம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது."

கம்யூனிஸ்ட்டுகள், வானம்பாடிகள், கல்வியாளர்கள் தமிழ் சாகித்ய அகாதமியின் அதிகார வட்டத்தை ஆக்கிரமித்து, பரிசுகளை நிர்ணயித்தார்கள். நவீனத் தமிழில் காத்திரமான பங்களித்த எழுத்தாளர்கள் மீது குரோதத்துடனும் வன்மத்துடனும் அவர்கள் நடந்துகொண்டனர். இன்றும் அந்தப் பாரம்பரியத்திலிருந்து அகாதமி முழுக்க வெளிவர முடியவில்லை.



 

சாகித்ய அகாதமி

இந்திய மொழி இலக்கியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் பிரதமர் நேருவால் 1954-ல் தொடங்கிவைக்கப்பட்ட அமைப்பு சாகித்ய அகாதமி. ஆண்டுதோறும் அதன் சார்பில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு எழுத்தாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் இந்த விருதானது ஒரு வகையில் அரசு சார்பில் ஒரு படைப்பாளிக்கு அளிக்கப்படும் முக்கியமான கௌரவம். இந்தியாவில் எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி பிழைப்பு நடத்த முடியாத சூழலில் இந்த விருதுடன் அளிக்கப்படும் பரிசுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒரு தொகையே அல்ல; இத்தொகையை ஒரு கோடியாக உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும், அதைத் தாண்டியும் சாகித்ய விருதுக்கென ஒரு மதிப்பு இருக்கிறது இது அந்த விருதுக்கான தேர்விலிருந்து உருவாவது

 

கியூபா கல்வி முறை


சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற கியூபவைச் சேர்ந்த ஏழெட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அறிவுபூர்வமாகக் கருத்தரங்கில் உரை ஆற்றியது மட்டுமல்லாமல், இனிமையாகப் பாடினார்கள், நளினமாக நடனம் ஆடினார்கள், அற்புதமாகக் கிட்டார் புல்லாங்குழல் வாசித்தார்கள், சிறப்பாக நாடகமாக்கம் குறித்துப் பேசினார்கள். எப்படி இத்தனை திறன்களை வளர்த்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டபோது, கியூபா கல்வி முறைப்படி அங்குள்ள அனைவருக்கும் இத்திறன்கள் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொன்னார்கள்.

அதைக் கேட்டதும், வெற்று கட்டளைகளையும் அரசாணைகளையும் நம்பி இருக்கும் நமது ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி எவ்வளவு மேம்படவேண்டி இருக்கிறது என மனம் நொந்தது. பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வதிலிருந்து வகுப்பறை பயிற்று முறை வரை ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழுவாக அமைத்து அனைத்திலும் அவர்களது பங்கேற்பை உறுதி செய்கிறது கியூபா.

யுனெஸ்கோவின் உலகக் கல்வி தர வரிசைப் பட்டியலில் இப்போதெல்லாம் முதல் இரண்டு மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றைப் பிடித்துவிடுகிறது கியூபா. ஆனால் 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் சோஷலிச அரசு பதவி ஏற்றபோது கியூபாவின் எழுத்தறிவு 52% மட்டுமே. அந்த நிலையிலிருந்து முன்னேறி இன்று 99.7% எழுத்தறிவு பெற்ற நாடாகக் கியூபா மிளிர்கிறது. அமெரிக்கா உட்பட 62 வளர்ந்த நாடுகளின் குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 70 புள்ளிகளாக இருக்கும்போதே கியூபா குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 100 புள்ளிகளை எட்டியது.

கல்வி அரசின் பொறுப்பு

கியூபாவில் கல்வி என்பது பெற்றோர்களின் கவலை அல்ல. பிறந்த குழந்தையின் சுகாதாரமும் கல்வியும் அரசின் பொறுப்பு. குழந்தைகள் பள்ளி செல்லும் வயது ஆறு. தாய்மொழியான ஸ்பானிஷில் மட்டுமே கல்வி. தொடக்கப்பள்ளிப் படிப்பு ஆறு ஆண்டுகள். புத்தகம், நோட்டு, வீட்டுப்பாடம், பரீட்சைக்கு இடையிலான போராட்டம் அல்ல அது. இசை, தோட்டம் போடுதல், சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று இவையே தொடக்கக் கல்வியின் அடிப்படை பாடத்திட்டம். மருத்துவக் குழுக்கள் இல்லாத கல்வி நிறுவனங்கள் இல்லை. பள்ளிக்கூடம் போகாத குழந்தை என்று யாரும் கிடையாது.

மூன்று அடுக்கு கல்வி

கல்வித் தரத்தில் முன்னுதாரணமாகக் கியூபா இன்று ஒளிரக் காரணம் மூன்று படிநிலைகள். 1961-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'மக்கள் எழுத்தறிவு இயக்கம்' அதன் முதல் படி. 'புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல அனைத்து மக்களுக்குமான சமமான வாய்ப்போடு கல்வி சுகாதாரம் வாழ்க்கைத் தரம் ஏற்படுத்தும்வரை தொடரும் மக்கள் செயல்பாடு' எனும் சேகுவேராவின் ஒற்றை முழக்கத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட இயக்கம் அது.

22% மக்களுக்கு மட்டுமே தரமான கல்வி வாய்ந்திருந்த அக்காலகட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரம் கல்விப் புரட்சியாளர்கள் (Educational Revolutionaries) மூலமாக 817 எழுத்தறிவு மையங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி புகட்டியது அந்த இயக்கம். வாய்ப்பு வசதிகளில் கிராம, நகரப் பெண்களுக்கு இடையே நிலவும் இடைவெளி கியூப பெண்கள் கூட்டமைப்பு (Federation of Cuban women) மூலமாகக் களையப்பட்டது இரண்டாம் படி நிலை.

சமூக மாற்றத்துக்கான கல்வி (Education for social change) என்ற கொள்கையோடு காஸ்ட்ரோவின் 1981 இயக்கத்தின் வழியே சமூகநீதியும், சமத்துவமும் நவீனத்துவமும் சாதித்தது மூன்றாம் நிலை ஆகும். இன்று தொடக்கக் கல்வியில் நுழையும் 100 கியூபா குழந்தைகளில் உயர்நிலைப் பள்ளி இறுதி படிப்பை முடிப்பவர்கள் 99 பேர். இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தைகள் 46, பெண்குழந்தைகள் 27 என்பதே இன்றைய நிலை.

மருத்துவருக்கும் விவசாயப் பயிற்சி

பள்ளி இறுதிவரை மட்டுமல்ல கல்லூரி வரைகூட கியூப மாணவர்களுக்குப் படிக்கக் கட்டணமும் கிடையாது. 100% மானியத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் அரசே கல்வி அளிக்கிறது. பல்கலைக்கழக - கல்லூரி படிப்பு என்பதும் வெறும் பாடம், தேர்வு என்பதோடு முடிந்துவிடுவது அல்ல. மூன்று விதமாக அது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பட்டத்துக்கான (The Licenciatura) படிப்புகள் முதல் வகை. தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி கல்வி (Titulo) இரண்டாம் வகை.

இந்த இரண்டுமே நான்கு அல்லது ஐந்தாண்டுகளைக் கொண்டவை. மூன்றாவது தனித்துவம் வாய்ந்தது. 200 மணிநேரம் வகுப்பு பாடங்களும் (theory) பெரும்பாலான மணிநேரம் நேரடி உற்பத்தி (Practicum and Especialista) முறையில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் மருத்துவம், ஆசிரியர் பயிற்சி, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு இப்படி எதைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும் விவசாய உற்பத்தியில் நேரடி பயிற்சிபெறும் பட்டயம் (Diplomads) ஒரு ஆண்டு பயிற்சி கட்டாயம். சர்க்கரை உற்பத்தி, நிக்கல் உட்பட ஏழு உலோகத்தாதுக்கள், மீன் பிடிப்பு, சோளம், கேழ்வரகு உற்பத்தி ஆகியவற்றில் கியூபா முதலிடத்தில் இருப்பதன் ரகசியம் இந்தக் கல்வி முறையே!

மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை

கலந்துரையாடுதல் (discustura), விவாதித்தல் (Dialogueo) முறைகளுக்கே கியூபாவின் வகுப்பறைகளில் முன்னுரிமை தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு என்பது குழு தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவுக்கு ஒப்பானது. அதிலும் முக்கியமாக, மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் 27 பேரில் ஒருவர் ஆசிரியர். வேலை நேரம் போக உள்ளூர் தேவைகளுக்குப் பள்ளிக்கூடம் பயன்படுத்தப்படுகிறது. விவசாய உற்பத்தி பொருட்களைத் தற்காலிகமாக வைத்தல், மாலைநேர இயக்கம், அரசு சார்ந்த அமைப்புக் கூட்டங்கள் நடத்துதல், திருமணங்கள் உட்படப் பலவற்றுக்குப் பள்ளி வளாகம் சமூகத்தின் ஒரு அங்கமாகச் செயல்படுகிறது.

கற்றுக்கொள்ள ஏராளம்

பள்ளி இறுதி ஆண்டில் ஒரு மாணவர் மின்சார நிலையம், மருத்துவமனை நலப் பணி, உள்ளூர் விவசாய உற்பத்தி பணி, துப்புரவு, தொழிலகப் பணி எனப் பல நேரடி உழைப்பு சான்றுகள் பெற்று நாட்டின் உழைப்பில் ஒரு அங்கமாய்த் தன்னை உணரும் கல்வியை நினைத்துப் பாருங்கள்! டியூஷன் கலாச்சாரத்தில் சிதைந்து மதிப்பெண்ணைத் துரத்தும் நமது குழந்தைகளை எண்ணி வேதனைப் படுவீர்கள்.

நாட்டில் வருடாந்தர பட்ஜெட்டில் கல்விக்குக் கியூபா ஒதுக்குவது 13%, இந்தியா சென்ற வருடம் ஒதுக்கியதோ 3%. அங்கே 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் வகுப்பறை விகிதாசாரம் உட்படப் பல அற்புதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தனியார் சந்தையின் வியாபாரமாகக் கல்வி மாறிப்போன பிறகு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் என்பது நம் நாட்டில் என்ன சாதித்து விடப்போகிறது? புதிய கல்விக் கொள்கை பற்றித் தீவிர விவாதங்கள் நடக்கும் நமது சூழலில் கியூபாவிடம் கற்க நமக்கு ஏராளம் உள்ளது. eranatarasan

 

சொந்த முயற்சி:அன்றாடம் 8 முதல் 10 மணி நேரம்வரை படித்தேன்.

பயிற்சியைவிட சொந்த முயற்சி

கரூரைச் சேர்ந்த முத்துகுமாரசாமி முழுக்கத் முழுக்க தமிழ்வழிக் கல்வி மூலம் பள்ளிப் படிப்பை முடித்தார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டபோது முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. அதிக மதிப்பெண் பெற மறுதேர்வு எழுதி 1994-ல் தேர்வாகிச் சென்னையின் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரி யூ.பி.எஸ்.சி. தேர்வாளர்களுக்குப் பெயர் பெற்றது. நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்றவர்கள் அந்தக் கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஊக்குவிப்பது வழக்கம். இப்படித்தான் முத்துவுக்கும் யூ.பி.எஸ்.சி. எழுதும் ஆர்வம் வந்தது.

ஆனால் முதல் முறை பெயரளவுக்கு மட்டும் எழுதியதால் முதல்நிலையில்கூட வெல்ல முடியவில்லை. பின்னர், புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விலங்குகளின் உணவு பிரிவில் முதுகலை பட்டப் படிப்பை முடித்தார். அதன் பிறகு 2003-ல் மூன்றாவது முயற்சியில் யூ.பி.எஸ்.சி. யில் தேர்வாகி ஐ.ஏ.எஸ். ஆனார்.

"கால்நடை மருத்துவம் படித்து விட்டு, முதல் இரண்டு முறை விலங்கியல், புவியியலை விருப்பப் பாடங்களாக எடுத்தது தவறு என்பதை உணர்ந்தேன். ஆகவே, மூன்றாவது முயற்சியில் இரண்டாம்நிலை தேர்வில் விலங்கியலுக்குப் பதிலாகக் கால்நடை அறிவியலை எழுதி வெற்றி பெற்றேன். சென்னையிலும் டெல்லியிலும் உள்ள பயிற்சி மையங்களில் படித்தும் அவை எனக்குக் கைகொடுக்கவில்லை. இதனால் நானே அன்றாடம் 8 முதல் 10 மணி நேரம்வரை படித்தேன்.

குறிப்பாக ஏற்கெனவே யூ.பி.எஸ்.சி. எழுதித் தோல்வி அடைந்தவர்களிடமிருந்து பல ஆலோசனைகள் பெற்றேன். தோல்வியைத் தழுவியவர்கள் செய்த தவறுகளைத் தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாம். இது மட்டுமல்லாமல், தமிழகப் பிரிவு கண்ணன் ஐ.பி.எஸ்., அனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., உத்தரகண்டின் மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ்., யுவராஜ் ஐ.ஏ.எஸ். ஆகிய வெற்றியாளர்களிடம் கிடைத்த ஆலோசனையும் பெரிதும் உதவியது" என்கிறார் முத்துகுமாரசாமி.


 

வியாழன், 15 டிசம்பர், 2016

தமிழ் ஊடக உலகின் தனித்த குரலாக இருந்த சோ ராமசாமி


தமிழ் ஊடக உலகின் தனித்த குரலாக இருந்த சோ ராமசாமி  'துக்ளக்' இதழின் ஆசிரியராக இருந்த அவர், தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியவர்.

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீநிவாச ஐயருக்கும், ராஜம்மாளுக்கும் மகனாக 1934 அக்டோபர் 5-ல் பிறந்தவர் ராமசாமி. இளங்கலை அறிவியலும் சட்டமும் பயின்று வழக்கறிஞரானார். அவரது குடும்பத்தில் அவரது தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர், தந்தைவழி, தாய்வழித் தாத்தாக்கள் புகழ்பெற்ற நீதிபதிகள். அந்த மரபில் அவரும் இணைந்தார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் டிடிகே நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். பொழுதுபோக்காக அந்தக் காலகட்டத்தில் நாடக உலகில் நுழைந்தவரை வெகுசீக்கிரம் சினிமா உலகம் அரவணைத்துக்கொண்டது. 'முகமது பின் துக்ளக்', 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்', 'இன்பக் கனா ஒன்று கண்டேன்', 'சட்டம் தலை குனியட்டும்', 'நேர்மை உறங்கும் நேரம்' ஆகிய அரசியல் நாடகங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என்று கலை உலகோடு கலந்துபோனவர், பத்திரிகையாளராக உருவெடுத்தது ஒரு சுவாரஸ்ய திருப்பம்.

நண்பர்களுடனான ஒரு உரையாடலின்போது, "பத்திரிகை நடத்த முடியுமா?" என்று நண்பர்கள் விட்ட சவாலின் தொடர்ச்சியாக, பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்தவர் அவர். பத்திரிகை தொடங்கலாமா, வேண்டாமா என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வாசகர்களிடம் யோசனை கேட்டு அவர் கொடுத்த விளம்பரமும், "சோவின் பத்திரிகை வந்துவிட்டதாமே, ஆம்.. இனி நமக்கு நல்ல தீனிதான்" என்று இரு கழுதைகள் பேசிக்கொள்வது போன்ற முதல் இதழின் அட்டைப் படமும் அவரது குறும்பையும் புதுமையான சிந்தனை வீச்சையும் கணத்தில் உணர்த்தக் கூடியவை. உற்ற நண்பரும் 'விகடன் குழும'த் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியனின் நிபந்தனையற்ற ஆதரவும் ஊக்கமும் உடனிருக்க… மிக விரைவில் தமிழ் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாத ஓரிடத்தை சோவின் 'துக்ளக்' பிடித்துக்கொண்டது.

ஒரு பத்திரிகையாளராக ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மீது தனக்கே உரிய எள்ளலும் கூரிய பார்வையும் கொண்ட துணிச்சலான விமர்சனங்களைத் தன்னுடைய 'துக்ளக்' பத்திரிகையின் மூலமாக அவர் முன்வைத்தார். பொதுவெளியின் மனநிலையைப் பொருட்படுத் தாமல், அது சரியோ, தவறோ - தான் நம்பியதை உரக்கச் சொன்ன அவருடைய துணிச்சல் அவரைத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் விமர்சகர்களில் ஒருவராக்கியது. முக்கியமாக நெருக்கடிநிலைக் காலகட்டத் தில் சோ காட்டிய துணிச்சல் என்றும் நினைவுகூரப்பட வேண்டியது. அவர் ஒரு வலதுசாரியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாலும்கூட, அவருடைய 'துக்ளக்'அனைத்துத் தரப்புகளாலும் தொடர்ந்து கவனிக்கப் படும் பத்திரிகையாக இருந்தது. ஆண்டுதோறும் அவர் நடத்திவந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில் கூடிய ஆயிரக்கணக்கானோரின் கூட்டம், வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் கிடைக்காத சோவின் வெகுஜன செல்வாக்குக்கு ஒரு சாட்சியம். இந்தச் செல்வாக்கு மாநிலத்தில் காமராஜர் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை மத்தியில் மொரார்ஜி தேசாய் முதல் மோடி வரை அவருக்குப் பெரும் தொடர்புகளை உருவாக்கித் தந்தது. ஒருகட்டத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குபவராகவும் ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுப்பவராகவும்கூட அவர் விளங்கினார். பாஜக சார்பில் தேர்வுசெய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக சோ இருந்தார்.

தமிழ் ஊடகத் துறை, கலைத் துறை, அரசியல் துறை, சட்டத் துறை எனப் பல்துறை வித்தகராகத் திகழ்ந்த சோ, எங்கும் தன்னுடைய முத்திரைகளை அழுத்தமாகப் பதித்துவிட்டே வாழ்வைக் கடந்திருக்கிறார். சோவின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்!


 

புதன், 14 டிசம்பர், 2016

போட்டதேர்வு எழுத முயற்சிப்பவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுக்காவிட்டால் நேரம் வீணாகும்

யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத முயற்சிப்பவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுக்காவிட்டால் நேரம் வீணாகும் எனக் கூறுகிறார் ஐ.பி.எஸ். பணி செய்தபடியே ஐ.ஏ.எஸ். பெற்ற எஸ்.ராஜலிங்கம். 2008 பேட்ச்சின் உ.பி. மாநில அதிகாரியான இவர், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். பொறியியல் பட்டம் பெற்ற பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் வந்தது. சென்னையின் அண்ணா தமிழக அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் பயிற்சி எடுத்தார். 2004-ல் அளித்த முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்குக் கிடைத்த குறைந்த மதிப்பெண்ணால் எந்தப் பணியும் கிடைக்கவில்லை. மறு முயற்சியில் ஐ.பி.எஸ். வென்று, 2006-ம் ஆண்டு பேட் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இதில் ஐதராபாத் போலீஸ் அகாடமியின் பயிற்சி எடுத்தவாறே மூன்றாவது முறை முயன்றபோது மீண்டும் ஐ.பி.எஸ்.தான் கிடைத்தது. கடைசியாக ஒரு முறை முயற்சிக்கலாம் என்று நான்காவது முறை எழுதி வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ். ஆனார்.

பயிற்சியின் பலன்

"நமக்கு விருப்பமில்லாத பணியைச் செய்துவிட்டுச் சில வருடங்களுக்குப் பிறகு வருந்துவதை விட ஆரம்பக் கட்டத்திலேயே வேறு முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தேன். இதற்கு என்னுடைய பெற்றோரும் ஆதரவளித்தனர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு விருப்பப் பாடங்களாகப் பொது நிர்வாகத்தையும் தமிழையும் தேர்ந்தெடுத்தேன். தமிழில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காததால் அதை நானாகவே படித்தேன். சொந்த ஊருக்கு அருகிலுள்ள மேலகரத்தின் நூலகம், சென்னையின் கன்னிமாரா, தேவ நேயப் பாவணர் ஆகிய நூலகங்களிலும் படித்தது உதவியாக இருந்தது. ஆனால், தானாகத் தேடிப் படித்ததால் நேரம் கூடுதலாகச் செலவழிக்க வேண்டிவந்தது. பயிற்சி நிலையங்களில் சேர்வதன் மூலம் எதைப் படிப்பது என்பது உட்பட நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதை உணர்ந்து அண்ணா அரசு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தேன். அதன் முதல்வரான பிரபாகரன் எனக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அடுத்தடுத்து நான் செய்த முயற்சிகளில் என்னை ஊக்கப்படுத்தினர் எனது கல்லூரி தோழி நித்யா. அவரே எனது வாழ்க்கைத் துணையாகவும் பின்பு மாறினார்" என்கிறார் ராஜலிங்கம்.

ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்-ல் வகித்த பணிகள்

2006-ம் ஆண்டு பேட்ச்சில் உபி மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். பெற்ற ராஜலிங்கம், அலிகர் மாவட்டத்திலும் மொராதாபாதிலும் ஏ.எஸ்.பி.யாகப் பணியாற்றினார். 2009 பேட்ச்சின் ஐ.ஏ.எஸ். பெற்றவர் பாந்தாவில் துணை ஆட்சியர் (பயிற்சி), தேவரியாவில் தலைமை வளர்ச்சி அதிகாரி, ஒரய்யாவின் ஆட்சியர், உ.பி.யின் பால்வளத்துறையின் சிறப்புச் செயலாளர் ஆகிய பணிகளை வகித்துள்ளார்.

பணி அனுபவம்

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உபியின் 'பராக்' பால்வளத்துறையை ராஜலிங்கம் தலைமையிலான குழுவினர் செயல்பட வைத்தைப் பாராட்டி உபி மாநில முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் பால்வளத் துறையின் மறுசீரமைப்பிற்காக ரூ.1200 கோடி நிதியை ஒதுக்கினார். நாடு முழுவதிலும் நடைமேடைகளில் கூடாரங்கள் அமைத்துப் பல வருடங்களாக வசிக்கும் குடும்பங்கள் உண்டு. இதுபோல், சுல்தான்பூரின் நடைமேடைகளில் 50 ஆண்டுகளாக 18 குடும்பங்கள் வாழ்ந்தனர். நதிக்கரையில் வளரும் கோரைப்புல்லில் தார்பாய், மூங்கில் பொருட்கள் தயாரித்து விற்றுப் பிழைப்புநடத்தினார்கள். இவர்களிடம் அவ்வப்போது பேசி அதன் ஆண்கள் சுயதொழிலுக்கு வங்கி கடன், பெண்களுக்குச் சுயதொழில் பயிற்சி, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, உ.பி. மாநிலத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் மாத பென்ஷன் தொகை, பல்வேறு வயதிலான குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்ப்பு, ரேஷன், அடையாள அட்டை என அனைத்தையும் வழங்கினார். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களுக்கு விற்பனை வசதியும் அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்களும் வழங்குவதற்குத் தற்போது முயன்று கொண்டிருக்கிறார் ராஜலிங்கம்.

புதியவர்களுக்கான ஆலோசனை

கடந்த ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் படித்துப் பயிற்சி எடுத்தால் என்ன படிக்க வேண்டும் என்பது ஓரளவிற்குத் தெரிந்துவிடும்.

அன்றாடம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. நாள் ஒன்றுக்கு நாம் எத்தனை மதிப்பெண்ணுக்கு உரியதைப் படித்தோம் என்பது முக்கியம்.

படிப்பதற்குப் பல பக்கங்கள் கொண்ட நூல்கள் உள்ளதாகக் கருதி, நாளிதழ்கள் படிக்காமல் விடக் கூடாது.

நேர்முகத் தேர்வின்போது படபடப்பு காரணமாகத்தான் முதல் மூன்று முயற்சிகளிலும் எனக்கு மதிப்பெண் குறைந்து. திடீரென்று பயத்தைப் போக்க முடியாது. நமது வீடுகளிலிருந்து இது தொடங்க வேண்டும். வெற்றியைப் பற்றி யோசிக்காமல் பள்ளிக் காலம் முதல் பேச்சுப் போட்டிகளிலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது பலன் தரும்.


 

புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்குவரத்து!


உலகப் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். சாலைகள், ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, தடையற்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற வசதிகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

தொழில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் உற்பத்தி பெருகும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கு புதிய தொழில்நுட்ப வசதி களை கொண்டுவரவும் திட்டமிடப் பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மும்பை அகமதாபாத்துக்கு இடையே புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

2-வது புல்லட் ரயில் சேவை டெல்லி வாரணசி இடையே அமைப்பதற்கு திட்டமிடலும் நடந்து வருகிறது. தொடர்ந்து புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்கு வரத்தும் வர இருக்கிறது. இதுதான் அடுத்த இருபது வருடங்களில் மிக முக்கிய போக்குவரத்து வசதியாக எதிர்கால உலகில் இருக்கப் போகிறது. 

ஹைப்பர்லூப்

2012-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் புதிய போக்குவரத்து முறையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார். குறிப்பாக நிலம், நீர், விமானம், விண் வெளிப் பயணம் ஆகிய நான்கு போக்கு வரத்து இல்லாமல், ஐந்தாவதாக புதிய முறையிலான போக்குவரத்து குறித்து யோசனை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

அது வானிலை மாற்றங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை எல்லாம் எளிதில் எதிர்கொள்ளும் வகை யிலும், மணிக்கு 1,200 கி.மீ வேகத்திலும் செல்லும் என்றும் கூறினார். ஐந்தாவது வகையான போக்குவரத்தை கண்டு பிடிப்பதற்கான விவாதம் நடைபெற் றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இணைந்து ஹைப்பர்லூப் என்ற தொழில் நுட்பத்தை உருவாக்கினர்.

வெற்றிட மான குழாய்க்குள், ஒரு கேப்சூல் மூலம் பயணிப்பது. காந்த அலைகள் மூலம் இந்த கேப்சூலை நகர்த்தும் தொழில்நுட்பம்தான் ஹைப்பர்லூப். இது எப்படி செயல்படும் என்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழலாம். ரயில் பாலங்கள் போலவே, இதற்கென பிரத்யேக தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் குழாய்கள் நிறுவப்படும். அந்த குழாய்க்குள் பயணத்திற்கான கேப்சூல்கள் இருக்கும். கேப்சூலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருப்பர். காந்த அலைகள் மூலம் கேப்சூலை நகர்த்தும்போது, ரயில் தண்டவாளத்தில் செல்வதுபோல கேப்சூல் குழாய்குள் பயணிக்கும்.

இதற்கான கட்டுமான செலவும், பயண செலவும் இதர போக்குவரத்து முறைகளை விடவும் குறைவு என்பதுதான் இதன் சிறப்பு. அத்துடன் இது சூரிய சக்தியில் இயங்குவதால், மின்சார மற்றும் எரிபொருள் செலவும் மிச்சம். சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்காது. இந்த தொழில்நுட்பம் பல தொழில்நுட்பங்களின் கலவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர் ஹாக்கி எனப்படும் விளையாட்டின் தத்துவம், கன்கார்ட் எனப்படும் விமானத்தின் வடிவமைப்பு, ரயில் கன் எனப்படும் மின் துப்பாக்கி ஆகியவற்றின் கலவை இது.

ரயில்களை போல தண்டவாளம், இன்ஜின்கள், எரிபொருள் என எதுவும் வேண்டாம். 100 மீட்டருக்கு ஒரு தூண் அமைத்தால் போதும். உதாரணமாக புல்லட் ரயில் அமைக்க, ஒரு கிலோ மீட்டருக்கு 140 கோடி ரூபாய் தேவைப் படும். ஆனால் ஹைப்பர்லூப்பிற்கு அதில் பாதி செலவு செய்தால் போதும். வேகமும் அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு பலமுறை இயக்கப்படும். இதனால் நிறைய மக்கள் பயணிக்க முடியும்.

துபாய் - அபுதாபி இடையே உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதையை அமைக்க அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து நிறுவனத்துடன் துபாய் அரசு ஒப்பந்தம் செய்தது. இதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஹைப்பர்லூப் போக்கு வரத்தை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மும்பைக்கும்-புணேவுக்கும் இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதை அமைப்பதற்காக ஹைப்பர் லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னால ஜீஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக மத்திய சாலைப்போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிபோம் கிரெஸ்டா சந்தித்து பேசியுள்ளார்.

ஹைப்பர்லூப் போக்குவரத்து கொண்டுவரப்பட்டால் மும்பைக்கும் புணேவுக்கு இடையே செல்வதற்கான பயணநேரம் 90 நிமிடத்திலிருந்து 25 நிமிடம் குறைந்து 65 நிமிடத்தில் செல்லலாம். விரைவில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஹைப்பர்லூப்பில் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை! இதற்கான கட்டுமான செலவும், பயண செலவும் இதர போக்குவரத்து முறைகளை விடவும் குறைவு என்பதுதான் இதன் சிறப்பு. அத்துடன் இது சூரிய சக்தியில் இயங்குவதால், மின்சார மற்றும் எரிபொருள் செலவும் மிச்சம்.




 

படிப்பது எப்படி?


மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர், பெற்றோர் எனச் சகல தரப்பிலும், நினைவாற்றல் திறன் தொடர்பான தவறான புரிதல்களும் ஐயங்களும் நிலவுகின்றன. பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் இருந்து மாணவர்களின் நினைவாற்றல் தகராறு தொடங்குகிறது. பாடக் கருத்துகளை உள்வாங்காமல், அவற்றை அப்படியே மனப்பாடம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது படிப்பது, நினைவில் இருத்துவது, தேர்வில் அவற்றை நினைவுகூர்வது என எல்லா இடங்களிலும் சிரமத்தையே உண்டாக்கும்.

சுலபமான வழி

'மைன்ட் மேப்பிங்' எனப்படும் 'மன வரைபட'த்தின் அடிப்படையில் படிப்பது நமது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் இருந்தாலும், அதனை மாணவர்கள் முறையாக பின்பற்றுவது இல்லை. 'சிலந்தி வலைப் படம்' என்ற பெயரில் நமது மூதாதையர்கள் பயன்படுத்திய நுட்பமே தற்போதைய மன வரைபடத்தின் அடிப்படை.

இம்முறையில் பாடப்பொருளைப் புரிந்துகொண்டு, முக்கிய வார்த்தைப் பிரயோகங்களை மட்டுமே மனப்பாடம் செய்தால் போதும். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்ய வேண்டாம். தேர்வுத் தாளைத் திருத்துபர்களுக்கும் இந்தப் பிரதான வார்த்தைப் பிரயோகங்களே தேவை. இம்முறையினால் பாடப்பொருளினைப் புரிந்துகொள்வது முதல் திருப்புதல் மேற்கொள்வது வரை அனைத்தும் சுலபமாகவும், நேர விரயமின்றியும் சாத்தியமாகும்.

இன்றே இப்பொழுதே

பாடங்களைப் படிப்பதற்கு என்று தனியாக நாள் கிடையாது. வகுப்பறையில் ஆசிரியர் நடத்துவதற்கு முன்பிருந்தே மாணவர்கள் பாடப்பொருளை வாசிக்கத் தொடங்குவது நல்லது. அடுத்த நாள் நடத்தப்போகும் பாடத்தை முன்தினமே ஒரு முறை வாசிப்பது,

புரியாத இடங்களைப் பென்சிலால் அடிக்கோடிடுவது, முந்தைய வருடங்களில் அந்தப் பாடக் கருத்தினை ஒட்டிக் கற்றதை அசை போடுவது போன்றவை பிற்பாடு படிக்கும் சிரமத்தைப் பாதியாகக் குறைக்கும். தயார் நிலையில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவருக்கு ஆசிரியர் நடத்தும் பாடக் கருத்துகள், மற்ற மாணவர்களைவிட அதிகமாகவும் விரைவாகவும் புரியும். ஐயங்களைப் போக்கிக்கொள்ளவும் இந்தத் தயார் நிலையே உதவும்.

ஆகவே, பாடங்களைப் படிப்பதற்கு எனத் தனியாக நேரத்தை ஒதுக்குவதோ ஒத்திப்போடுவதோ கூடாது. இன்றே இப்போதே என முழு தயார் நிலையில் கற்றல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நூற்றுக்கு நூறு எதிர்பார்க்கும் மாணவர்கள் மட்டுமன்றி, அனைவருமே உடலை வருத்தாமல், பரீட்சை பயமின்றிப் படிப்பதற்கு இம்முறையே கைகொடுக்கும்.

படிப்பது எப்படி?

பாடங்களை முதல் முறை மட்டுமே முழுமையாகப் படித்தால் போதும். அடுத்த தடவைகளில் 'கீ வேர்ட்ஸ்' எனப்படும் பாடப்பொருளின் பிரத்யேக வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு விரைவாகப் படிக்கலாம். படிக்கும் இடம் அதற்கென வழக்கமாக அமரும் இடமாக இருக்க வேண்டும், போதிய காற்றோட்டம், வெளிச்சம் ஆகிய வசதிகளுடன், தேவையான பாட உபகரணங்களை அருகில் வைத்துக்கொண்டு படிப்பைத் தொடங்கலாம்.

நினைவுத் திறன் அடிப்படையில் ஒரு பாடத் தலைப்பைப் படிப்பது என்பதை 5 நிலைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். பாடம் நடத்தும்போது கவனிப்பது, அவற்றை அன்றைய தினமோ, 24 மணி நேரத்திற்குள்ளாகவோ விரிவாகப் படித்துவிடுவது, அடுத்து வரும் 3 நாட்கள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதத்திற்குள் அதே பாடத்தைக் குறுகிய அவகாசத்தில் ஒருமுறை படிப்பது ஆகியவையே இந்த 5 நிலைகளாகும். மனிதரின் நினைவுத் திறன் மற்றும் மறதியின் வேகம் தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் இப்படிப் பாடங்களைப் படிப்பது, அவற்றைப் பிற்பாடு நினைவிலிருந்து மீட்கச் சிறப்பாக உதவுகிறது.

நிரந்தர நினைவுக்கு

இந்த 5 நிலைகளில் படிப்பதுடன் சரியான திருப்புதல்களை மேற்கொள்ளும்போது பாடப்பொருள் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவுக்குச் செல்லும். இதற்கு வார இறுதிகளில் அல்லது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மிகக் குறைவான அவகாசத்தில் அவற்றைத் திருப்புதல் மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, உறங்கச்செல்லும் முன்னர் ஏதேனும் ஒரு பாடத் தலைப்பினை 'கீ வேர்ட்' அடிப்படையில் நினைவிலிருந்து திருப்புதல் மேற்கொண்டால், மனதில் பாடக் கருத்துகள் ஆழமாகப் பதியும். நாம் உறங்கிய பிறகும் மூளையானது அப்பாடக் கருத்துகளையே ஆராயும் என்்பதால், கடினப் பகுதிகள் என கருதிய பாடங்கள்கூடப் பிறகு சுலபமானதாகத் தோன்றும்.

களைப்பின்றிப் படிக்க

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பதற்கு, படித்ததை எழுதிப் பார்ப்பதற்கு என நாளில் அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அடிக்கடி களைப்பாக உணர்வார்கள். சரியான உத்திகளைப் பின்பற்றினால் இந்தக் களைப்பினை எளிதாகக் களையலாம். ஒரு மணி நேரத்தில் சேர்ந்தாற்போல 50 நிமிடங்கள் மட்டுமே படிக்கலாம். அடுத்த 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். அல்லது பிற பணிகளைப் பார்க்கலாம். இதே போல 2 முறை எனத் தொடர்ந்தாற்போல 2 மணி நேரம் படிக்கலாம். இதன் பிறகு 30 நிமிட இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் சிற்றுணவு, சிறு நடை, மூச்சுப் பயிற்சி ஆகியவை ஆசுவாசம் தரும். 50 நிமிடங்கள் படிப்பதையும் இரண்டாகப் பிரித்துக்கொண்டு, அவற்றுக்குள் ஒன்றிரண்டு நிமிடங்கள் இடைவெளி தரலாம். இந்த இடைவெளியில் அதுவரை படித்ததைத் திருப்பிப் பார்ப்பது, வெளியிலிருக்கும் மரம் போன்ற பசுமையானவற்றைப் பார்ப்பது போன்றவற்றைச் செய்யலாம். இந்த நடைமுறைகள் அலுப்பு சலிப்பின்றி மாணவர்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்கு உதவும்.


 

சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – 1


16DFR_KANNAKI3_1894936g32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–


அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்' என
–சிலப்பதிகாரப் பதிகம்

33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
"பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்"
(வரந்தரு காதை)

34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)

35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)

36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)

37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)

tm_hindu-indian-jain-sculpture

38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
"நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்" — (நடுநற் காதை)

39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)

40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)

41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை

42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை

silambu_for_dance

43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை

44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை

45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை

46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை

47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை

48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை

49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை

anklets

50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை

52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை

53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை

54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை

55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை

56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை

57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை

58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை

59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை

29frSilappadikaram__736602g

60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை

61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை

62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை

63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை

64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி

65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி

66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை

Puhar-ILango
Image of Ilango

67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)

68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை

70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை

71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி

72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்'
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி

73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை

75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை

pumpukar

76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை

77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை

78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை

79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை

80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை

81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை

82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை

Riverkaveri

83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி

84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை

85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை

86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை

silambu tamil book

87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை

88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை

89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை

90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை

91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்

silambu book1

92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்

93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)

வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!

–சுபம்–