வெள்ளி, 2 டிசம்பர், 2016

TRB PG TAMIL:MODEL QP

1. "திங்கள் முக்குடைகவிப்பத்" என்ற பாடலின் ஆசிரியர்?
அ) சுந்தரர் ஆ) குலசேகரர் இ) சீத்தலை சாத்தனார் ஈ) நீலகேசி
2. நம்பியாரூரர் இவற்றுடன் தொடர்புடையவர்
அ) திருநாவுக்கரசர் ஆ) மாணிக்கவாசகர் இ) சுந்தரர் ஈ) திருஞானசம்பந்தர்
3. "கண்ணுதல்" இலக்கண குறிப்பு தருக.
அ) உவமை ஆ) உருவகம் இ) இலக்கணப்போலி ஈ) வினைத்தொகை
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர்
அ) பெரிய வாச்சான் பிள்ளை ஆ) வடக்கு திருவீதிப்பிள்ளை இ) ஆறுமுக நாவலார் ஈ) உ.வே.சா
5. மணிமேகலை எத்தனை காதைகளைக் கொண்டது.
அ) 30 ஆ) 40 இ) 100 ஈ) 599
6. சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதை சுவை மிக்க நூல் எது?
அ) குண்டலகேசி ஆ) நீலகேசி இ) மணோன்மணியம் ஈ) கம்பராமாயணம்
7. "தண்டமிழ் ஆசான்" இவற்றுடன் தொடர்புடையவர்
அ) திருவள்ளுவர் ஆ) கம்பர் இ) சீத்தலை சாத்தனார் ஈ) மீனாட்சி சுந்தரனார்
8. ஜான் பனியன் என்பார் எழுதிய "பில்கிரிம்ஸ் பிராகிரஸ்" என்ற நூலினை தழுவி எழுதப்பட்ட நூல் எது?
அ) இரட்சண்ய மனோகரம் ஆ) இரட்சண்ய குறல் இ) இரட்சண்ய யாத்ரிகம் ஈ) மணோன்மணியம்
9. "சின்ன சீறா" என்ற நூலை எழுதியவர்?
அ) பனு அகமது மரைக்காயர் ஆ) உமறுப்புலவர் இ) நபிகள் நாயகம் ஈ) சீதக்காதி
10. பொருத்துக. (a) (b) (c) (d)
a. மணிமேகலை - 1. சமணம் அ) 1 2 3 4
b. நீலகேசி - 2. பெளத்தம் ஆ) 4 3 2 1
c. இரட்சண்ய யாத்ரிகம் - 3. கிறித்தவம் இ) 2 1 3 4
d. சீறாப்புராணம் - 4. இசுலாம் ஈ) 2 1 4 3
11. "இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து
காட்டியவர் சுந்தரர் என்பார்" இது யாருடைய கூற்று.
அ) குன்றக்குடி அடிகளார் ஆ) இராமலிங்க அடிகளார் இ) திரு.வி.க ஈ) மாணிக்கவாசகர்
12. "திருக்கடைக் காப்பு" இதனுடன் தொடர்புடையது.
அ) பலச்ருதி ஆ) மாட திருவீதி இ) நிலா முற்றம் ஈ) காலில் அணிவது.
13. பொருந்தாதது.
அ) ஆலோகம் ஆ) பிரபாமூர்த்தி இ) கனப்பிரபை ஈ) பூலோகம்
14. "சந்திராதித்தம்" இதனுடன் தொடர்புடையது.
அ) முத்துக்குடை ஆ) பொற்குடை இ) மணிக்குடை ஈ) சாற்றமுது
15. அருக தேவனின் ஆகமங்களுள் தவறானது எது.
அ) பூர்வாகமம் ஆ) பிரகீர்ணவாகமம் இ) அங்காகமம் ஈ) தீர்த்தவாகமம்
16. "பொங்கு தாமரை" இலக்கண குறிப்பு தருக.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உருவகத்தொகை
17. கந்த புராணம் எத்தனை படலங்களை கொண்டது.
அ) 153 ஆ) 135 இ) 118 ஈ) 92
18. "நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்" என்று பாடியவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வாணிதாசன் ஈ) கம்பதாசன்
19. "செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்" யார்?
அ) பாரதியார் ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இ) கனக சுப்புரத்தினம் ஈ) கம்பர்
20. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர்
அ) பாரதிதாசன் ஆ) வாணிதாசன் இ) முடியரசன் ஈ) அப்துல் ரகுமான்
21. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்
அ) வாணிதாசன் ஆ) சுரதா இ) அப்துல் ரகுமான் ஈ) தாராபாரதி
22. தவறானவற்றைத் தேர்க.
அ) விலங்குகள் இல்லாத கவிதை ஆ) பால் வீதி இ) நேயர் விருப்பம் ஈ) புதிய விடியல்கள்
23. "கங்கையும் சிந்துவும்" இலக்கணக் குறிப்பு தருக.
அ) உம்மைத்தொகை ஆ) முற்றும்மை இ) எண்ணும்மை ஈ) முரண் தொடை
24. "திருக்கை வழக்கம்" என்னும் நூலின் ஆசிரியர் ?
அ) வீரமாமுனிவர் ஆ) வரதநஞ்சயப் பிள்ளை இ) கம்பர் ஈ) கபிலர்
25. "ஒன்றே யென்னின் ஒன்றேயாம்" என்னும் பாடலில் இடம் பெற்றுள்ள பா வகை என்ன ?
அ) அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆ) எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) நாட்டுபுற சிந்து வகையை சார்ந்தது ஈ) எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக