ஞாயிறு, 30 நவம்பர், 2014

TRB PG TAMIL :திருநாவுக்கரசர்



  திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகனாகத் திருநாவுக்கரசர் கி.பி. 575-ல் அவதரித்தார். பெற்றோர்கள் அவருக்கு மருள்நீக்கியார் எனப் பெயரிட்டு அழைத்தனர். இளம் பருவத்தில் தம் பெற்றோரை இழந்த அவர் தமது தமக்கiயாரான திலகவதியாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். எனினும், உலக நிலையாமையை உணர்ந்து சமயநூற் கோட்பாடுகளை ஆராயப் புகுந்தார். ஆனால் சிறந்த சமயம் எது என்பதைத் தேர்ந் தெடுப்பதில் அவர்; தெளிவில்லாதவராகிப் போனார். சமணப் பள்ளியின் தலைமை குருவின் தவறான அறிவுரையை நம்பி சமணம் சார்ந்தார்.

  சமண சமயத்தில் மேம்பட்டு தருமசேனர் என்னும் பட்டம் பெற்றார். தன் தம்பியின் இந்த மத மாற்றம் திரகவதியாருக்குப் பெரும் மனவேதனையை அளித்தது. தம்பியின் இந்த மனமாற்றத்தால் திருவாமூரில் வாழ்வதற்கு விரும்பாமல் திருவதிகை என்னும் தலத்தில் குடியேறினார். வருடங்கள் பல உருண்டேடின. ஆனால் தமபியின் மனம் மாறவில்லை. ஒருநாள் தன்னுடைய தம்பியை நினைந்து திருவீரட்டானரிடம் மனமுருகி வேண்டிக் கொண்டு நிம்மதி இன்றி நித்திரை போனார். அல்லலுறும் அடியவர்களின் துயர் துடைக்கும் கருணாமூர்த்தியான கங்காதரன் அன்று இரவு திலகவதியாரின் கனவிலே தோன்றி 'சூலைநோய் கொடுத்து ஆட் கொள்வேன்' என்று கூறி மறைந்தார்.

இறைவனின் அருள் வாக்கின்படி தருமசேனர் என்ற மருள்நீக்கியார் சூலை நோயால் பீடிக்கப்பட்டு, சமணர்களின் சாமர்த்தியங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால்,  தமது தமக்கையாரிடம் சரண் புகுந்தார். திருவைந்தெழுத்தோதித் திருநீற்றைத் தன் தம்பியிடம் கொடுத்தார். பயபக்தியுடன் அவர் அளித்த விபூதியை இருகையேந்தி பெருவாழ்வு வந்ததெனப் பெற்று, தன் வயிற்றிலும் உடலெங்கும் பூசிக் கொண்டு, திருவதிகைப் பெருமானை வழிபடடுக் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் பதிகம் பாடி சூலைநோய் நீங்கப் பெற்றார். அப்போது. 'இனிக்கும் தேன் தமிழில் நீ எனைப்பாடி மகிழ்வித்தாய். ஆகவே இனி உம்மை மக்கள் 'திருநாவுக்கு அரசர்' என்று அழைப்பர்களாக. உன் பெயரும் புகழும் ஓங்கும்' என்று தெய்வ வாக்கு ஒன்று ஒலித்தது. அன்று முதல் மருள்நீக்கியாரை சிவபகிதர்கள் திருநாவுக்கரசர் என்று அழைக்கலானார்கள்.     


    பல்லவ நாட்டு மன்னனான மகேந்திரவர்ம பல்லவன், சமண மதத் தலைவர்களின் பொய்யான அறிவுரைகளை ஏற்று, திருநாவுக்கரசரைக் காளவாயில் தள்ள உத்தரவிட்டான். சமணர்தம் ஏவலால் திருநாவுக்கரசு சுவாமிகள், சுண்ணாம்பு நீற்றறையில் இடப்பட்டார். சிவ மந்திரத்தை நெஞ்சுள் இருத்தி ஓதியவாறு விளங்கிய சுவாமிகளுக்கு, அவ்வெம்மையுடைய நீற்றறை பனிக்குகை போலக் குளுகுளு வென்றாயிற்று. அடியவரின் துயர் துடைக்கும் கருணாகர மூர்த்தியின் கருணையை நினைந்து நெஞ்சம் நெகிழ, கண்ணீர் கசிய 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்ற திருப்பதிகம் அவர் நெஞ்சத்தின் அடியிலிருந்து பிறந்தது. சுண்ணாம்புக் காளவாய் வெப்பத்திலே வெந்து மடிந்து நீறாகிப் போயிருப்பார் நாவுக்கரசர் என்று எண்ணி மகிழ்ந்த பல்லவ மன்னனும், சமணர்களும் காளவாய்க் கதவைத் திறக்கச் செய்தார்கள் - அந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க. கதவு திறக்கப்பட்டது. அனல்காற்று வீசவில்லை. குளிர் தென்றல் குபுகுபு என்று வெளிப்பட்டது. சாம்பலான நாவுக்கரசரின் நீறான உடலுக்குப்பதில் - சம்மணமிட்ட நிலையில், உடலில் திருநீறணிந்த கோலத்தில் அவர் நிஷ்டையில் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.

   பின்னர், சமணர்கள் இவர்க்கு கொடிய விஷத்தை பாலில் கலந்து கொடுத்தும், மதயானையைக் கட்டவிழ்த்து விட்டும் திருநாவுக்கரசர் சுவாமிகளை கொல்வதற்கு முயன்றனர். ஆனால் சிவபெருமான் அருளால் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சமணர்களின் தூண்டுதலால், நாவுக்கரசரைப் பெரியதோர் கருங் கல்லில் கயிறுகளால் பிணைத்து, தோணியில் கொண்டுபோய் நடுக்கடலில் வீசிவிட்டு வருமாறு பல்லவ மன்னன் ஆணையிட்டான். சேவர்களும் அப்படியே செய்தனர். சிவ சிந்தனை உறைப்புடைய மெய்த்தொண்டராகிய வாகீசப் பெருந்தகையார் 'எது எப்படியாயினும் ஆகுக, யான் என் எந்தையை ஏத்துவன்' என்று ஸ்ரீ பஞ்சாட்சரத்தைத் துதிக்கத் தொடங்குபவராய் 'சொற்றுணை வேதியன்' என்னும் திருப்பதிகத்தைப் பாடியவுடன் அவரைக் கட்டிய கயிறு அற்றுப்போக அவரை ஏற்றிய கல்லே தெப்பமாக மாற அதன் மீது மிதந்து கரையேறினார்.

    பின்னர் பல ஆண்டுகள் திருவதிகையில் தங்கி உழவாரப்பணி செய்து வந்தார். தலயாத்திரை செய்ய விரும்பித் தலங்கள்தோறும் உழவாரப்பணி செய்தும், பதிகம் பாடியும் வழிபட்டார். அப்போது பெண்ணகடத்தில் இறையருளால் இடபக்குறியும் சூலக்குறியும் தோளில் 

  

பொறிக்கப் பெற்றார். பொன்னம்பலத்தாடும் பெம்மான் நடராஜனை தரிசிக்கத் தில்லைக்கு வந்தார். எங்கு வந்தாய் என்று கேட்ட அம்பல வாணனுக்கு 'பத்தனாய்ப் பாட மாட்டேன்' என்ற திருப்பதிகம் பாடி பதில் உரைத்தார். அதன்பின் தித்திக்கும் பல திருப்பதிகங்களைப் பாடி, சபாபதிக்கு நிகர் எவருமில்லை என்று சிவனடியார்களுக்குப் போதித்து, உழவாரப்பணி புரிந்தவாறு சில காலம் சிதம்பரத்தில் தங்கினார். கி. பி. 644-ல் சீர்காழியில் திருஞானசம்பந்தர் சுவாமிகளை முதன் முறையாகச் சந்தித்து அவரால் 'அப்பரே' என அழைக்கப் பெற்றார். பின்பு பலதலங்களை வணங்கி திருநல்லூர்க்கு வந்த போது இறைவனால் திருவடி சூட்டப்பெற்றார். 

   திங்களுரில் அப்பூதியடிகளின் மகன் அரவு தீண்டி இறக்க, 'ஒன்றுகொ லாமவர்' என்ற திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். திருவாரூரில் திருவாதிரை விழாக்கண்டு மகிழ்ந்து வீதிவிடங்கப்பெருமான் மீது பக்திரசம் சொட்டும் 'திருவாதிரைத் திருப்பதிகங்கள்' என்று அழைக்கப்படும் பத்துப் பதிகங்களைப் பாடினார். மேலும் பல சிவாலயங்களைக் கண்டு வழிபட்ட அவர், திருப்புகலூரில் ஞானசம்பந்தர் பெருமானை இரண்டாம் முறையாகச் சந்தித்து உடனுறைந்தார். 

   பின்பு திருநாவுக்கரசரும் சம்பந்தரும் இணைந்து தலயாத்திரை தொடங்கிப் பல தலங்களை வணங்கித் திருக்கடவூரை அடைந்து குங்குலியக்கலய நாயனரின் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்து பல தலங்களை வழிபட்டுத் திருவீழிமிழலையை அடைந்து சில நாட்கள் தங்கினார். அப்போது பஞசம் ஏற்பட்டதால் அடியவர்கள் பசியால் துன்புற்றனர்.  அது  கண்ட  இருபெரும் சமயக் குரவர்களும் ஈசனை நினைந்து துயில் கொள்ளலாயினர். ஈசன், கனவில் தோன்றிப் பஞ்சம் தீரும் வரையில் படிக்காசு அளிக்கின்றோம் என்று அருள் செய்தனர். அவ்வாறே பீடத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு பொற்காசும், மேற்குப் பகுதியில் ஒரு பொற்காசும் ஆக இரு காசுகள் அளித்தனர். பின்பு இருவரும் திருமறைக்காடு சென்றனர்.  அங்கே வேதத்தால் அடைக்கப் பெற்றிருந்த கதவுகளை திருநாவுக்கரசர் சுவாமிகள் 'பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ' என்ற பதிகம் பாடி திறந்தார். திருஞானசம்பந்தர் சுவாமிகள் 'சதுரம் மறைதான்' என்ற திருப்பதிகம் பாடி அடைப்பித்தார். பாண்டி நாட்டிலிருந்து மங்கையர்க்கரசியார் விட்ட அழைப்பிற்கு  இணங்கிச் திருஞானசம்பந்தர் சுவாமிகள் புறப்பட்டபோது, 'நாளும் கோளும் நன்றாயமைய வில்லை' என நாவுக்கரசர் தடுக்கச்


சம்பந்தர் 'வேயுறு தோளிபங்கன்' என்ற கோளறு பதிகம்பாடி நாவுக்கரசரிடம் விடைப்பெற்றுப் புறப்பட்டார். 

    பின்னர் நாவுக்கரசர் தனியாக யாத்திரை மேற்கொண்டு திருநாகைக்காரோணம், திருவாவடுதுறை தலங்களில் உள்ள தயாநிதியான இறைவனை தரிசித்து உள்ளம் உருகிப்பாடி வழிபட்டு, திருப்பழையாறை என்னும் தலத்திற்கு வந்தார். அங்கு வடதளியில் உண்ணா நோன்பிருந்து அரசன் உதவியால் சமணர்களை அகற்றி அத்தலத்து இறைவனை வழிபட்டார். திருப்பழையாறையில் பலநாட்கள்
தங்கிய பின் காவிரிக்கரை ஓரமாக உள்ள சிவஸ்தலங்களான திருவானைக்கா, திருவெயூம்பூர், சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை போன்ற தலங்களுக்குச் சென்று ஈசனை வணங்கி, ஆலயங்களைத் துப்புறவு செய்து மகிழ்ந்தார். பின்னர்த் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியில் இறைவனால் கட்டமுது தரப்பெற்றார். மீண்டும் தன் சிவத்தால யாத்திரையை மேற்கொண்ட அப்பர். திருவண்ணாமலை, காஞ்சி, திருக் கழுக்குன்றம், திருவான்மியூர், திருமயிலை, திருவொற்றியூர், திருப்பாகர், திருவலங்காடு, திருக்காரிக்கரை, திருக்காலத்தி போன்ற திருத் தலங்களை பதிகம் பாடி தரிசித்துவிட்டு திருக்கயிலையை தரிசிக்க வேண்டி பனிமலையில் ஏறிச்சென்றார். 

    திருக்கயிலை செல்லும் வழியில் இறைவனால் தடுத்தாளப்பெற்று அங்குள்ள தடாகத்தில் மூழ்கித் ஒரு வாவியின் மேலேத் தோன்றி கரை ஏறினது திருவையாற்றில் உள்ள ஒரு குளத்தில் எழுந்து கயிலைக் காட்சியைக் கண்டு 'வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி' என்ற பதிகம் பாடி இறைவனை துதித்தார். பின்னர் பல தலங்களை வழிபட்டுத் திருப்பூந்துருத்தியில் சிறிது காலம் தங்கியிருந்து அங்கே திங்களும் ஞாயிறும் தோயும் மடம் ஒன்று கட்டினார். திருஞானசம்பந்தர் சுவாமிகள் திருப்பூந்துருத்திக்கு வந்த போது மூன்றாம் முறையாக அவரைச் சந்தித்தார். சில நாட்கள் உடனுறைந்த திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டு யாத்திலைக்காகப் பிரிந்து சென்றதும் திருநாவுக்கரசர் சுவாமிகள் பாண்டி நாட்டு யாத்திரை மேற்கொண்டார். இறுதியாகத் திருப்புகலூரில் வந்து தங்கி உழவாரப் பணி செய்யும் போது, ஈசன் அப்பரை சோதிக்க விரும்பி நிலத்திலிருந்து பொன்னும், நவமணிகளும் வெளிப்படுமாறு செய்தார். அப்பர் பெருமானோ அவற்றைத் துச்சமாகக் கருதி, குப்பை கூளங்களைப்போல் வீசியெறிந்தார். பற்று அற்றுப் பணி செய்த அப்பர், உடல் தளர்ந்து போனார். உலக வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது.
   

    உலக வாழ்வில் சலிப்படைந்த அப்பர், தீவண்ணனின் திருவடி நிழலை அடைந்து பிறவாப் பெருவாழ்வைப் பெற எண்ணினார். திருப்புகலூர் அண்ணலிடம் தன் விருப்பைக் கூறி வேண்டிக் கொண்டார். அடிகளாரின் வேண்டுகோளை இறைவனும் ஏற்றுக் கொண்டார். திருப்புகலூரில் உழவாரப் பணி செய்து வரும்போது தமது எண்பத்தோராம் வயதில் (சுமார் கி. பி. 656 ல்) சித்திரை மாதம் சதய நாளில் சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்தார். 

.

சனி, 29 நவம்பர், 2014

TRB PG TAMIL QUESTION PAPPER :முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினாத்தாள் 2-8

                        முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014          வினாத்தாள் 2-8

 

1. பிரெஞ்சு குடியரசின் செவால்யர் விருதுபெற்ற கவிஞர்

A கண்ணதாசன்         வாணிதாசன்        .C வண்ணதாசன்         .D பாரதிதாசன்

2. நமக்குத்தொழில் கவிதை நாட்டுக்கு ழைத்தல் என்றவர்

A.நாமக்கல் கவிஞர்           B. பாரதியார்        .C தமிழன்பன்     .D சுரதா

3. உரைநடையின் சிக்கனந்தான் கவிதைஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம் தான் பெண்ணின் நாணம் என்றவர்

A.வைரமுத்து                   B. சுரதா             .C மேத்தா         .D அப்துல் ரகுமான்

4  கவிக்கோ என்று போற்றப்படும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை பரிசு பெற்றவர்

Aசுந்தரம்பிள்ளை           B.நாமக்கல் கவிஞர்           C மேத்தா          .D அப்துல் ரகுமான்

5. ஹைக்கூ பற்றிய கட்டுரை முதலில் வெளிவந்த இதழ்

A. சுதேசமித்திரன்           B. லோகோபகாரி  .C தினவர்த்தமாணி   .D மெட்ராஸ் கூரியர்

6 குழந்தைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்

A.அழவள்ளியப்பா         B. வாண்டுமாமா         .C தணிகை உலகநாதன்   யுமா வாசுகி

7 . சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் -

A சுரதா   B. புலமைப்பித்தன்      புலவர் குழந்தை   .D கவிஞர் தமிழழகன்

8.தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர்

A. அருணாசலக்கவிராயர்     B. .சோமசுந்தரம்   .கோபாலகிருஷ்ணபாரதி   D கவிமணி

9. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -

A.  பாரதிதாசன்               B. பாரதியார்         .C தமிழன்பன்                .D சுரதா

10   தமிழன் இதயம் நூலாசிரியர்

A.நாமக்கல் கவிஞர்                  B. பாரதியார்         .C தமிழன்பன்             .D  கவிமணி

11.   தமிழச்சி நூலாசிரியர்  

கண்ணதாசன்           B வாணிதாசன்         .C வண்ணதாசன்         .D பாரதிதாசன்

12. சகராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் -

A. இங்குலாப்         B. நா.காமராசன்          C மேத்தா          .D அப்துல் ரகுமான்

13. வாலிபக் கவிஞர்

A. வாலி           B.பழநி பாரதி          மேத்தா          .D அப்துல் ரகுமான்

 14 கவிமணி மொழிபெயர்த்த நூல் யாருடையது  

A. லார்டு லிட்டன்         B. உமர்கய்யாம்     .C கீட்ஸ்          .D பைரண்

15. கவிஞர் மீராவின் இயற்பெயர் -

A. ராஜேந்திரன்           B.துரைராசு               .C எத்திராசுலு         .D ஜெகதீசன்

16.   கருப்பு மலர்கள் ஆசிரியர்

அப்துல் ரகுமான்          B மீரா               .C பழநி பாரதி       .D நா.காமராசன்

17   கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர்

A. வைரமுத்து           B.தமிழன்பன்           C மேத்தா          .D அப்துல் ரகுமான்

18.இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்

A. வைரமுத்து           B.பழநி பாரதி           C மேத்தா          .D தாமரை

19. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் 

A. கண்ணதாசன்           B. பாரதிதாசன்       .C தமிழன்பன்      .D சுரதா

20 அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் –  

 A.ஞானி           B. இன்குலாப்   நா.காமராசன்             .D ஞானக்கூத்தன்

21..அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்  

A.பால்வீதி                     B. சூரியபிறை                 .C ஆலாபனை     .D நேயர்விருப்பம்

22. . ஊசிகள் கவிதை நூலாசிரியர்

அப்துல் ரகுமான்          B மீரா               .C பழநி பாரதி       .D நா.காமராசன்

23 இலக்கியம் இதழாசிரியர்

A  ..நா.சு                     B. சி.சு.செல்லப்பா       .C தமிழன்பன்         .D சுரதா

24உரைவீச்சு நூலாசிரியர் -

A. சாலை இளந்திரையன்    B. சாலினி இளந்திரையன் .C .அறவாணன்     D சுரதா

25 இராவண காவியம் நூலாசிரியர் 

கண்ணதாசன்           B புலவர் பழனி       .C புலவர் குழந்தை       .D பாரதிதாசன்

26பாரதியின் பாடல்களை வெளியிட்டவர் 

பரலி.சுநெல்லையப்பர்     .B.. கிருஷ்ணசாமி அய்யர்          C ஆர்ய பாஷ்யம் மெய்யப்பர்

27 தஞ்சை கெளசிகன்  என்ற புனைப்பெயரில் எழுதியவர்

A. வி.கே.மூர்த்தி           B. பொன்னரசன்             C திருச்சி பரதன்     குழ.கதிரேசன்

28 எலி கடித்த பூனை என்ற தமிழக அரசின் பரிசு பெற்ற நூலை எழுதியவர்

A. வி.கே.மூர்த்தி            B. பொன்னரசன்             C திருச்சி பரதன்     குழ.கதிரேசன்

29புதுக்கவிதை என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

பாரதியார்           B.. பிச்சமூர்த்தி                ,நா.சு               D பசவையா

30அகநிலைக் கவிஞர்கள் என்று கருதப்படுபவர்கள்

எழுத்து கால கவிஞர்கள்                       B.. வானம்பாடி கால கவிஞர்கள்  

தாமரை கால கவிஞர்கள்                      இவர்களுல் யாருமில்லை 

31. ப்ராய்டின்  உளவியல் கோட்பாடுகளுக்கு கலைவடிவம் தந்தவர்

சி.மணி                B மீரா                .C பழநி பாரதி           .D சிற்பி

32புதுக்கவிதையில் கட்புலக்காட்சியை மிகுதியாகப் பயன்படுத்தியவர் 

தமிழன்பன்                .B .உதயகுமார்      C.தருமு சிவராமு        பாலா

33. .பிச்சமூர்த்தியின்  முதல் புதுக்கவிதைத் தொகுதி

காட்டு வாத்து               .B புதுக்குரல்கள்           C. கிளிக்குஞ்சு      D வழித்துணை

34தருமுசிவராமின் சிறந்த படிமக்குறியீட்டுக் கவிதை

A. கண்ணாடி        B. கைப்பிடி அளவு கடல்      .C விடிவு         மேல் நோக்கிய பயணம்

35 .நடுநிசி நாய்கள் யாருடைய கவிதைப்படைப்பு

சுந்தர ராமசாமி                 .B.பிரமிள்     .C சி.சுசெல்லப்பா       .D சி.மணி

36.கிராமத்து நதிக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்

அப்துல் ரகுமான்          B மீரா               .C பழநி பாரதி       .D சிற்பி

37நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்படைத்த கவிஞர் 

A. வைரமுத்து           B.ஜெகதீசன்           C மேத்தா          .D அப்துல் ரகுமான்

38.தொன்மம் என்ற இலக்கிய உத்த்யை தனது கவிதையில் அதிகமாக பயன்படுத்தியவர் 

.நா.சு             சி.சு.செல்லப்பா    C. அப்துல் ரகுமான் தொ.மு.சி.ரகுநாதன்      

39 வைரமுத்துவின் முதல் கவிதை

தமிழுக்கு நிறம் உண்ண்டு                     .B. இன்னொரு தேசிய கீதம்  

.C கொடி மரத்தின் வேர்கள்                       .D இள நெஞ்சின் ஏக்கம்

40.அங்கதக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்

தமிழ் நாடன்                   B. தமிழன்பன்           தமிழினியன்      .D தமிழச்சி

 41புதுமைப்பித்தனின்  பார்வையை வாங்கி என் பாதிப்பிலே எழுதினேன் என்ற கவிஞர்

இன்குலாப்       B.கலாப்ரியா           அக்னிபுத்திரன்           D கு..ரா          

. 42 எப்போதும் மத்தாப்பு  -- கொளுத்தி விளையாடுகின்றது ---  மலையருவி ! என ஹைக்கூ பாடியவர்

கழனியூரன்           B.அமுதபாரதி           C பரிமள முத்து           .D முரளிதரன்

43.கூடைக்குள் தேசம்  என்ற ஹைக்கூ நூல் யாருடையது ?

கழனியூரன்           B.அமுதபாரதி            C பரிமள முத்து     .       முரளிதரன்

44. ஜப்பானிய  கவிதை வடிவங்கள் எனும் கட்டுரை வெளிவந்த இதழ்

A. தாமரை               B. தீபம்                 எழுத்து               .D கணையாழி

45.புள்ளிப் பூக்கள்யாருடைய ஹைக்கூ படைப்புகள்

மித்ரா          B. அமுதபாரதி                      C பரிமள முத்து         .D முரளிதரன்

46. தமிழில் ஹைக்கூ முயற்சிக்கு முன்னோடி

A.சிந்தர்பா               B. வசனகவிதை           சிந்துப்பா           .D கிரெஜி

47.கவிராசன் கதை யாரைப்பற்றிய கவிதை நூல்

வைரமுத்து              .B பாரதியார்           பாரதிதாசன்           கண்ணதாசன்

48. புதிர்போட்டு விட அவிழ்க்கும் ஜப்பானிய இலக்கிய விடுகதை

ரென்கா            .         B.நுபுச்சி               கிரெஜி         கெரி  

49  .பில்கனியத்தின் தழுவல்

A   பாண்டியன் பரிசு       B. புரட்சிக் காப்பியம்      .C புரட்சி கவி          .D சேர தாண்டவம்

50. குயில் பாட்டு அருமையான காதல்  காவியம் ஆன்மாவின் காவியம் என்றவர்

திரு.வி.                   B. வல்லிக்கண்ணன்       கண்ணதாசன்         தெ.பொ.மீ

 

 

 

         உங்களால் முடியாவிட்டால்வேறு யாரால் முடியும்?

       இன்னும் இருப்பதோ 4 7 நாட்கள் !

            வாழ்த்துக்கள்          TRB PG QP B2-8


எமது மாதிரி வினாத்தாளை வெளியிட்டமைக்கு தமிழ்த்தாமரைக்கு    நன்றி


 முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படித்து வெற்றிக்கனியை பறியுங்கள்! மேலும் விவரங்களுக்கு

வெற்றி- 7373967635 


பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 8 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.


 இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருவோர் பலர் அவர்களில் சிலரின் கருத்துக்கள்....


 ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270

வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள் இந்திரா, சிதம்பரம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


 நிஹாத் பெங்களூர்.

பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.


 ரிஹானா , மேலூர் நெல்லை

நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 


தாமரை, திருவண்ணாமலை

 தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது 


மஞ்சுளா, மயிலாடுதுறை

நான் முதன்முதலாக இப்போட்டித்தேர்வு எழுதவுள்ளேன்.பல புத்தகங்களைத் தேடி படிக்கவேண்டும் எனும் நிலயைமாற்றி தேவையான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.தங்களின் வினாத்தாள் எனது இலக்கை நோக்கிய பயணத்தின் அளவுகோலாக உள்ளது.

நன்றி


 அருள்,திட்டக்குடி 9842197488

சேர்ந்த மறுநாளே எனக்கு உடணடியாக study meteriyal அனுப்பியமைக்கு நன்றி.

இபோதே திட்டமிட்டு அலகுவாரியான தேர்வுக்கு தயாராவதற்கு உங்கள் பாடப்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது.


 ஜெ.செந்தாமரைக்கண்ணன், விருத்தாசலம்

தங்களின் பாடப்பொருளுடன் வினா-விடை வடிவில் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொகுத்தளிதிருப்பது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கிய அத்தொகுப்பு வெற்றிக்கு வழி வகுக்கும் 



சுகந்தி  மத்தூர்

நான் தேர்வுக்கு நன்கு தயாராகிவருகிறேன். தங்களின் வினாத்தாட்களைக் கொண்டு தேர்வெழுதி பார்த்தபின்தான் இன்னும் படிக்கவேண்டிய செய்திகள் அதிகம் உள்ளது என புரிந்துகொண்டேன். உங்களின் இந்த பணிக்கு எனது நன்றி


இளமுருகன், செங்கம்.

உங்களின் இந்த தேர்வுத்திட்டம் அருமை.பாடப்பொருளை நேரில் பெற்றுக்கொண்டேன். 4 தொகுதிகளாக பாடத்திட்டத்தை ஒட்டி தயாரித்தளித்திருப்பது சிறப்பு.


டெல்பின், வேலூர்

இன்று உங்களது பாடப்பொருள் கிடைத்தது.இது எனக்கு முன்பே கிடைத்திருந்தால் தேர்வுக்கு இன்னும் நன்கு தயாராகியிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. இன்றையிலிருந்து தீவிரமாக படிக்க ஆரம்பித்துவிட்டேன்.


மலர் வேதாரண்யம்:

பல இலக்கிய வரலாற்று நூல்களில் உள்ள செய்திகளின் தொகுப்போடு.,கூடுதலாக புதிய செய்திகள் இடம்பெற்றுள்ளது முக்கியமான செய்திகள் தொகுத்து தந்துள்ளது பாராட்டுக்குரியது


நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா?

கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க. 

வெற்றி- 7373967635

 

 

 குறைந்த நாட்களே உள்ளன..... நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்!!