வியாழன், 6 நவம்பர், 2014

TRB -2014 முதுகலை (தமிழ்) -வினா 1

TRB -2014 முதுகலை தமிழ் -1

1. அகத்திணைகள் ஏழு என்பதற்கேற்ப புறத்திணைகள் என்று என்று குறித்தவர்
A.பனம்பரனார் B.நாற்கவிராச நம்பி C.இறையனார் D.தொல்காப்பியர்

2. நொச்சித்திணை என்பது
A. ஆனிரை கவர்தல் Bமன்னரைப் புகழ்தல். C. ஆனிரை மீட்டல் D.மதில் காத்தல்

3 வெட்சித்திணையை எத்திணைக்கு புறனாக தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்
A.குறிஞ்சி B.முல்லை C . பாலை D மருதம்

4 " மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுரபுரி சங்கம் வைத்தும்" எனும் குறிப்பைத் தருவது
A.ஆனைமங்கலச் செப்பேடு B.சித்தன்னவாசல் குகைப்பதிவு C சின்னமனூர் செப்பேடு D காஞ்சிபுரத்து கல்வெட்டு

5 . வெட்சித்திணை என்பது
A. ஆனிரை கவர்தல் B மதிலை வளைத்தல். C. ஆனிரை மீட்டல் D.மதில் காத்தல்

6. நிலையாமைப் பற்றிக் கூறும் திணை
A. உழிஞை B நொச்சி C வாகை D காஞ்சி

7 .ஐயனரிதனார் இயற்றிய நூல்
A.பன்னிரு பாட்டியல் B வீர்சோழியம். C.புறப்பொருள் வெண்பாமாலை D.வச்சனந்தி மாலை

8 நிரை மீட்டல் குறித்தது எந்த திணை
A..வஞ்சி B.காஞ்சி C.கரந்தை D. வெட்சி

9.பொருண்மொழிக்காஞ்சித்துறை அமைந்த திணை
A.காஞ்சி B பொதுவியல். C பாடாண் D வஞ்சி

10 புறப்பொருள் வெண்பாமாலை கூறும் திணைகளின் எண்ணிக்கை
A. 5 B. 7 C 11 D 12

11. கணவனை இழந்து வருந்தும் நிலை யாது?
A தாபத நிலை. B.தபுதார நிலை C. கையறு நிலை D முதுபாலை

12 புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியர்
A.பவணந்தியார் B.ஐயனரிதனார் C.புத்தமித்திரனார் D.வைத்தியநாத தேசிகர்

13.நெடுந்தொகை எனக் குறிப்பிடும் சங்க நூல்
A. பதிற்றுப்பத்து B புறநானூறு C.அகநானூறு D.கலித்தொகை


14.பாலைக்கலி பாடியவர்
A.பெருநற்கிள்ளி B.பெருங்கடுங்கோ C.நல்லுருத்திரன் D கபிலர்

15 .9 அடி முதல் 12 அடி வரை அமைந்த பாடல்களைக் கொண்ட சங்க நூல். A குறுந்தொகை B. கலித்தொகை C நற்றிணை D.அகநானூறு

16 .புறப்பாடல் நூல் எது
A பதிற்றுப்பத்து B. ஐங்குறுநூறு C நற்றிணை D.அகநானூறு

17.கலித்தொகையினை பாடிய புலவர். .A.கபிலர் B பரணர் C நந்தத்தனார் D.இவர்களுள் யாரும் இல்லை

18. அகநானூற்றில் எத்தனைப் பகுதிகள் உள்ளன ? A.மூன்று B.ஐந்து C நான்கு D.ஏழு

19. கணவனை இறந்தபின் மனைவி கைம்மை நோன்பு நோற்றலைச் சுட்டும் துறை
A . மூதானந்தம் B.தபுதார நிலை C தாபத நிலை. D முதுபாலை

20 ஆண்மகனது ஒழுகலாறுகளைக் கூறும் திணை
A. தும்பை B நொச்சி C வாகை D பாடாண்

21. வாகைத்திணை கீழ்கண்ட நிகழ்ச்சிகளில் எதைக் கூறுகின்றது?
A. ஆனிரை கவர்தல் B போர் வெற்றி C. ஆனிரை மீட்டல் D.மதிலைக் கவர்தல்

22 வஞ்சித் திணை என்பது
A.எதிரிகள் நாட்டைக் கைப்பற்றுவது B. கோட்டயை முற்றுகை இடுவது. C நிரை கவர்தல். D வயல்களை அழிப்பது

23. பரிபாடல் எனும் சங்க நூல்
A.அகம், B.புறம் C அகம், புறம் D அறம்

24. கலித்தொகையில் உள்ள பாடல்
A 100. B .150 C 200, D 250

25. கலித்தொகை எதன் வழி பெயர் பெற்றது
A.பொருள் வகையால் B.கூற்று வகையால் C.திணை வகையால் D யாப்பு வகையால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக