வியாழன், 6 நவம்பர், 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 10-ம் தேதி முதல் விநியோகம் -DINAMANI

முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அறிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் இருந்து விநியோகம் தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக