திங்கள், 21 டிசம்பர், 2015

டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது-நாசா விண்வெளி ஆய்வு மையம்

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த முழுநிலவு பெரியதாகவும் மிகவும் பிரகாசமனதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

மேலும், 1977-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று முழு நிலவு தோன்றவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இவ்வாறாக டிசம்பர் 25-ல் தோன்றும் முழுநிலவை ஃபுல் கோல்ட் மூன் (Full Cold Moon) என்ற அழைப்பது வழக்கமென்றும் அதற்குக் காரணம் குளிர்காலத்தின் துவக்கத்தில் இந்த நிலவு தோன்றுவதே என்றும் நாசா விளக்கியுள்ளது.

இதன் பின்னர் 2034-ல் தான் மீண்டும் டிசம்பர் 25-ல் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று முழு நிலவு தோன்றும் என்றும் நாசா கணித்துள்ளது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக