புதன், 3 செப்டம்பர், 2014

TRB :ஆசிரியர் தகுதித்தேர்வு புதிய இணையதளம் http://tntet.in வடிவமைப்பு

                     TRB :ஆசிரியர் தகுதித்தேர்வு புதிய இணையதளம் வடிவமைப்பு  http://tntet.in
User id 
Password 
 
Login    Exit
Click here for Paper-I TNTET Certificate
Click here for Paper-II TNTET Certificate                                     




FLASH :TRB RELEASED ASSISTANT PROFESSORS PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW





Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

 

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW

As per notification No 04/2013, dated 28.5.2013, Teachers Recruitment Board conducted Certificate Verification process for the Direct Recruitment of Assistant Professors in Government Arts and Science Colleges-2012 from 25.11.2013 to 6.12.2013. Clarification Camp and Special Camp were also conducted from 30.1.2014 to 01.2.2014 and 01.7.2014 to 7.7.2014 respectively.

Board has conducted oral interview for the subject Mathematics, Physics, Physics and Computer Application, Electronics Science & Electronic Communication and Statistics from 25.8.2014 to 28.8.2014.

Now, the Board releases the provisional mark list of all candidates who participated in the oral interview for the above said subjects. Provisional selection list for the notified vacancies for the same will be released separately, following due rules.

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in inadvertently. Incorrect list would not confer any right of enforcement.

 

Dated : 03-09-2014

 

Member Secretary


Please visit www.trb.tn.nic.in

FLASH NEWS

TNTET CERTIFICATE DOWNLOAD IN TRB WEBSITE

NEWS IN DETAIL :ஆசிரியர் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு கிளை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்–2, டிகிரி, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. 2000–மாவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000–த்துக்குள் தான் மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது. 2000–மாவது ஆண்டுக்கு முன்புள்ள பாடத் திட்டங்கள் கடினமாக இருந்தன. கல்வித்தரமும் போதிய அளவு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால் எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 15 பேர் இதே பிரச்சினைக்காக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வக்கீல்கள் சேவியர் ரஜினி, கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். ஆனால் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்

BT counselling update :TRICHY DISTRICT

TRICHY DISTRICT COUNSELING:
TAMIL - 5 VACANCY ONLY ( TOTAL 33 PASSED CANDIDATES )
ENGLISH-33 VACANCY ONLY ( TOTAL AFFROX. 125 PASSED CANDIDATES )
HISTORY - 74 VACANCY ONLY ( TOTAL APPROX. 150 PASSED CANDIDATES )

flash news ; THERE IS NO STAY FOR COUNSELING HENCE COUNSELING WHILL HELD ASPER SHEDULE


FLASH tet papper 1 paper 2 stay to appointment BY MADURAI HC

thanks to padasalai

உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சஞ்சீவினி



இமயமலைச் சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகைச் செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணக் கதைகளில் கூறப்படும் சஞ்சீவினியைப் போன்றதொரு மூலிகை இது.

அத்துடன் மலைப் பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக் கொள்ளவும், கதிரியக்கப் பாதிப்பைத் தடுக்கவும் இந்த மூலிகை உணவு உதவுவதாகத் தெரியவந்துள்ளது.

ராமாயணத்தில் லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை இந்தியாவில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரோடியோலா (Rhodiola) மூலிகைச் செடிதான் ராமாயணத்தில் சஞ்சீவினி என்று குறிப்பிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லடாக் பகுதி மக்களிடையே இந்த மூலிகைக்கு 'சோலோ' என்று பெயர். இதன் நற்பண்புகள் பற்றி அங்குள்ளவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. அதேநேரம், இந்தச் செடியின் இலையைக் கீரை போலச் சமைத்து இப்பகுதி மக்கள் உண்கின்றனர். லே பகுதியைச் சேர்ந்த உயர்மலைப் பகுதி ராணுவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகைச் செடியின் மருத்துவக் குணங்கள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

"உயிர்வேதி ஆயுத யுத்தத்தில் வெளியாகும் காமா கதிர்கள் உடலில் ஊறு ஏற்படுத்தாதவாறு இம்மூலிகையால் தடுக்கமுடியும்" என்கிறார் ராணுவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவாஸ்தவா.

லேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினரும் இந்த அதிசய மூலிகை குறித்துக் கடந்த பத்தாண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

"குறைந்த காற்றழுத்தம், ஆக்சிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவிகரமாக இருக்கும். அத்துடன் இம்மூலிகைக்கு மனஅழுத்தத்தை குணப்படுத்தும், பசியைத் தூண்டும் அம்சமும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் ஸ்ரீவாஸ்தவா.

GK -இந்திய தேசிய இயக்கம் - 1

1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. லார்ட் சின்கா
ஆ. எஸ்.என். தாகூர்
இ. டபிள்யூ.சி. பானர்ஜி
ஈ. தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்

அ. மன்றோ
ஆ. மேஜர் ஜெனரல் பீட்டர்
இ. வில்லியம் பென்டிங்
ஈ. கென்னடி

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்

அ. தாந்தியா தோபே
ஆ. நானா சாகிப்
இ. கன்வர் சிங்
ஈ. பகதூர் ஷா

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1918
ஆ. 1920
இ. 1922
ஈ. 1924

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்

அ. இர்வின் பிரபு
ஆ. ரீடிங் பிரபு
இ. லின்லித்கோ பிரபு
ஈ. வில்லிங்டன் பிரபு

6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?

அ. தி மெட்ராஸ் மெயில்
ஆ. தி இந்தியன் சோஷியல் பார்மர்
இ. தி பெங்கால் கெசட்
ஈ. தி டைம்ஸ் ஆப் இந்தியா

7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?

அ. வல்லபாய் படேல்
ஆ. ராஜேந்திர பிரசாத்
இ. சி.ஆர். தாஸ்
ஈ. நரேந்திர தேப்

8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

அ. பர்தோலி சத்யாகிரகம்
ஆ. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. கிலாபத் இயக்கம்

9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?

அ. ஓரிசா
ஆ. குஜராத்
இ. மேற்கு வங்கம்
ஈ. ஆந்திரப் பிரதேசம்

10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?

அ. 1948
ஆ. 1398
இ. 1498
ஈ. 1500

Answer will publish tomorrow

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தவறை சரிசெய்தது TRB...கிடைத்தது பணி நியமனம்..





AFTER CHANGE COMMUNITY  BC TO BCM. NOORNISHA BEGAM   SELECTED FOR DEE


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

          DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE ASSISTANT

horizontal rule

Roll NoCandidate NameGenderCommunityPH / VITamilMediumClaimDate of BirthTotalWeightageMarksSelectedDept
13TE11100011NOORNISHA BEGAM SFBCMT19/05/198972.75YESDEE

  


BT COUNSELING :நீங்களும் உதவலாம்....

BT COUNSELING :நீங்களும் உதவலாம்....

அன்பான வேண்டுகோள்
தாங்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிட விவரத்தை அனுப்பி உதவிட வேண்டுகின்றோம். அது அடுத்த நாளில் நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பிற மாவட்டத்தினருக்கு உதவக்கூடும்
விவரத்தினை கீழ்கண்ட எண்ணுக்கு கீழ்கண்டவாறு sms மூலம் அனுப்பலாம் அல்லது தொடர்பு கொண்டு கூறலாம்.
District- subject- no of vacants-no of candidates attending
example sms
Erode- Tamil -vacant 60- candidate 35

candidate என்பது முதல் நாள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை(பட்டியல் ஒட்டப்படும்)

அனுப்பவேண்டிய mob no: 8508472547

பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணைஇயக்குனர்களுக்கு 10ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான காலாண்டு பொதுத் தேர்வு பணிகளளைக் காண்காணிக்க இயக்குனர் உத்தரவு

TNPSC - Departmental Examination - Dec. 2014 NOTIFICATION

TNPSC - Departmental Examination - Dec. 2014
DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration .
Notification Departmental Examinations - December 2014
Online up to 30 Sep 2014
*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014
*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14
*தேர்வு நுழைவுச்சீட்டு 17.12.14 முதல் 31.12.14
*தேர்வு முடிவு 7.3.15&16.3.15

PLEASE VISIT TNPSC WEB FOR DETAILS

TET "வெயிட்டேஜ் முறை ரத்து: உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் திமுக தலைவர் கருணாநிதி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை
, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை. அதிலும் "திமுக தலைவர் கருணாநிதி" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.
"வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்று மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். "வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
என்று கூறியுள்ளார்.

யாருக்குச் சொந்தம் யார் யாரோ?


தலைவனின் மனைவிக்குதான் இல்லறக் கடமைகளும் சொத்தும் சமூகச்செயல்பாட்டு உரிமைகளும் வாரிசு உரிமையும் உண்டுஆசை நாயகிகளுக்கு அவ்வுரிமைகள்மறுக்கப்பட்டிருந்தனஇதனை நற்றிணையின் 330ஆவது பாடலும் அகநானூற்றின் 16ஆவது பாடலும் விளக்கியுள்ளன.

இல்வாழ்வில் "கற்பு" என்பது இல்லறக்கடமையாற்றுதலைக் குறித்ததுஅக்கடமையைச் செய்யத் தகுதியற்றவர்களாகக் கருதப்படும் சின்னவீடுகளைக் கற்பற்றவர்கள் என்று கருதினர்.பின்னாளில்தான் கற்பு என்பது உடல்மனம் சார்ந்த்தாகக் கருதப்பட்டது.

தலைவனுக்குரிய மனைவி யார், ஆசை நாயகிகள் யாவர் என்ற வகைப்பாட்டினை விளக்கக் கரணம் என்ற திருமணம் உதவியதுஅவ்வாறு திருமணம் செய்துகொண்ட பெண்தான் தலைவனின் அதிகாரபூர்வமான மனைவி. யாருக்கும் தெரியாமலே அல்லது சிலருக்கு மட்டும் தெரிந்து அவன் மணந்துகொள்ளும் பெண்கள்ஆசை நாயகிகள். இதற்குச் சான்றுகளாக அகநானூற்றின் 36, 46, 66, 166, 206 ஆகிய பாடல்களும் நற்றிணையின் 313ஆவது பாடலும் உள்ளன.

காலத்தின் தேவையோ!

ஆசை நாயகிகளைச் சமுதாயம் ஏற்றுக்கொண்டது ஓர் விபத்துதான்அது காலத்தின் தேவையாகக்கூட இருந்திருக்கலாம்அதாவதுபழந்தமிழ்ச் சமுதாயம் முதலில் வேட்டைச் சமுதாயமாக இருந்து பின்னர் போர்ச்சமுதாயமாக மாறியதுவேட்டையிலும் போரிலும் ஆண்களின் உயிரிழப்பு மிகுதிஆதலால்ஆண் துணையினை இழந்த பெண்கள் மிகுந்திருக்கலாம்.அக்காலத்தில் பெண்கள் ஆண்களைவிட எண்ணிக்கையில் மிகுந்ததால் "பலதார மணம்" (ஓர் ஆண்பல பெண்களை மணப்பதுஅதற்கு ஒரு சமநிலைத் தன்மையைக் கொண்டுவரும் என்று அச்சமுதாயம் கருதியிருக்கலாம்அப்படியென்றால், "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற தமிழ்ப் பண்பாடு என்னவாயிற்றுஅப்பண்பாடு வாரிசுரிமைக்காகத்தான் பின்பற்றப்பட்டதுவாழ்க்கை நலத்துக்காக அல்ல.

சங்க காலத்தில் ஆசை நாயகிகள் மட்டும்தான் இருந்தனரோவிலைமகளிர் என்று யாரும் இல்லையாஇல்லைசங்க காலத்தில் இல்லை. ஆனால் தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியங்களுக்கும் எழுதப்பெற்றுள்ள உரைகளில் விலைமகளிர் பற்றிய செய்திகள் இருக்கின்றன. மூலப் பாடல்களுக்கும் உரைகளுக்கும் இடைப்பட்ட காலம் மிகப்பெரியது.அதனால்தான்உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தின் சமூக வெளிப்பாடுகளே அவர்கள் உரைகளில் பிரதிபலித்துள்ளன.

தொல்காப்பிய மூல நூற்பாவில் பரத்தைகாமக்கிழத்தியர்பரத்தையர் என்ற சொற்கள் யாரைக் குறிக்கின்றனஅவை ஆசைநாயகியைத்தான் குறிக்கின்றனதலைவனின் பலதார திருமணத்தைக்(சமூகத்தால் ஏற்கப்படாதகுறிக்கின்றனவிலைமகளிரைக் குறிக்கவில்லை.

வெளியாள்

"பரத்தை" என்பதற்கு அயன்மைஅயலார்அயலாந்தன்மைஅயலவர்வெளியாள்அந்நியர்,புறப்பெண்டிர் என்று பொருள்கொள்ளலாம். பரத்தை என்பது, "வெளியாள்" என்றால், "உள்ளாள்" என்பது யாரைக்குறிக்கிறதுதலைவியைத்தான் குறிக்கிறதுதலைவியைத் தவிர்த்துத் தலைவனுக்கு இன்பம்தரும் பிற பெண்கள் வெளியாட்கள்தான் பரத்தையர்தான்.

ஆனால்அவ்வெளியாட்களாக அப்பெண்கள் தன் தலைவனுக்கும் அவனது தலைவிக்கும் பிறந்த குழந்தையைத் தன்குழந்தையாகப் பாவிக்கும் செயல்களும் அக்குழந்தைக்கு அணிகலன்களை வழங்குவதும் அக்குழந்தை அப்பெண்ணைத் தாய் என்று அழைப்பதும் இலக்கியத்தில் பதிவாகியுள்ளனஇப்பாசப்பிணைப்பினை எப்படிப் புரிந்துகொள்வது?

எக்காலத்திலும் எந்தப் பாலியல் தொழிலாளியும் தன் நுகர்வோரின் குழந்தையைத் தன் குழந்தையாகப் பாவித்ததில்லைஅக்குழந்தைக்குப் பொன்நகையை அணிவித்ததில்லைஅக் குழந்தை அவளைத் தாய் என்று அழைத்ததும் இல்லைஇவற்றின் வழியாக அவ் வெளியாட்கள் பரத்தையர் "விலைமகளிர் அல்லர்" என்பது புலனாகின்றது.

சின்னம்மாக்கள்

தன் கணவரைப் போலவே தன் குழந்தையும் வெளியாட்களுடன் நட்புறவுகொள்வதைத் தலைவி கண்டிக்கும் நிகழ்வுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளனதலைவி அவ்வெளியாள்களை "எங்கையர்" என்ற சொல்லால் அழைக்கின்றாள்.

அதாவது, "என்னுடைய தந்தை" என்பது "எந்தை" என்றானதுபோல, "என்னுடைய தங்கைகள்" என்பது "எங்கையர்" என்றானது.

தலைவிக்கு உடன்பிறந்த தங்கைகள் அவர்கள் அல்லர்ஆனால், "அம் முறையுடைய பெண்கள் அவர்கள்" என்பது இங்கு குறிப்புணர்த்தப்படுகிறதுஅப்படியானால்தலைவனின் குழந்தைக்கு அப்பெண்கள் சின்னம்மாக்கள்தானே!

அகநானூற்றின் 16ஆவது பாடல் பெரியம்மா-சின்னம்மாவின் உறவினை உறுதிப்படுத்தியுள்ளது.தன் தலைவனின் குழந்தையைக் கண்ட சின்னம்மாஅவனை அன்போடு அருகே அழைத்து, "வருக என்னுயிரே" என்று கொஞ்சுகிறாள்அதனைக் கண்ட தலைவி, "குறுமகளேஏன் பேதுற்றனை.நீயும் இவன் தாய்தானே!" என்று அன்புறவு பாராட்டுகிறாள்அத்தகைய அன்புறவு பலதார மணத்தில் பின்பற்றப்படுவதுதான்.

இச்சின்னம்மாக்கள் தம் தெருவில் (அவர்களுக்கெனத் தனித் தெருவும் இருந்தது -பரத்தைச்சேரிதம் வீட்டில் தனித்திருந்துதலைவனோடு மட்டுமே வாழ்ந்தனர்அவர்களுக்குப் பிற ஆண்களோடுஎவ்விதமான தொடர்பும் இருக்கவில்லைஅவ்வாறு வெளியாட்கள் பிற ஆண்களோடு தொடர்பிலிருந்தால்தலைவி அவர்களை "எங்கையர்" என்று அழைப்பாளாஆக,சின்னம்மாக்கள் "விலைமகளிர் அல்லர்" என்பது தெளிவாகின்றது.

இப்போதுஎன் மனத்தில் ஒரு கேள்வி எழுகின்றதுதலைவியைப் பெற்ற தாயினை "நற்றாய்" என்றும் தலைவியை வளர்க்கும் தாயைச் "செவிலித்தாய்" என்றும் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.ஆதலால்செவிலித்தாய் என்பவள் தலைவியின் தந்தைக்கு ஆசைநாயகியாகாரணம்,இலக்கியத்தில் தலைவியின் தோழியாக வருபவள் செவிலித்தாயின் மகள் அல்லர்.செவிலித்தாய்க்குச் சொந்த மகனோமகளோ இருப்பதாக இலக்கியத்தில் குறிப்புகள் இல்லை.இது மேலும் ஆய்வுக்குரியது.

குழப்பமும் தெளிவும்

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள "காமக்கிழத்தியர்" சொல் யாரைக் குறிக்கிறது?விலைமகளிரையாஅல்ல. "கிழத்தி" என்றால்தலைவியைக் குறிக்கும். "கிழவன்" என்பது,தலைவனைக் குறிக்கும். "காமக்கிழத்தியர்" என்பதுஆசைநாயகிகளைக் குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் காணப்படும் "காமக்கிழத்திகாதற்பரத்தைசேரிப்பரத்தைநயப்புப் பரத்தைஇற்பரத்தைஇல்லிடப்பரத்தை" போன்ற சொற்கள் அவ் இலக்கியங்களின் மூலப்பாடலில் இடம்பெறவில்லைஅப் பாடல்களின் திணைதுறைஅடிக்குறிப்புகள்பதவுரை போன்றவற்றில் காணப்படுகின்றனஇவை அனைத்தும் அப்பாடல்களைப் புரிந்து கொள்வதற்காகப் பிற்காலத்தில்சங்ககாலத்துக்குப் பின்னர் எழுதப்பெற்றவை.

முற்காலத்தில் "நாற்றம்" என்ற சொல் "நறுமணம்" என்ற பொருளில் கையாளப்பட்டது.பிற்காலத்தில் அதே சொல் "விரும்பத்தகாத மணம்" என்ற பொருளில் கையாளப்பட்டுவருகின்றது.அதுபோலத்தான்முற்காலத்தில் ஆசைநாயகிகளைக் குறித்த சொற்கள் பிற்காலத்தில் விலைமகளிரைக் குறிக்கப் பயன்படுகின்றன.

யாருக்குச் சொந்தம் யார் யாரோ?

வெளியாளுக்குத் தன் தலைவனின் மனைக்கிழத்தி (தலைவியார் அவளுடைய பிள்ளைகள் யார் யார் என்பதெல்லாம் நன்றாகத் தெரியும்ஆனால்தலைவிக்குத் தன் தலைவனுக்கு யாரெல்லாம் ஆசைநாயகிகள் என்பது தெரியாதுஒன்றிரண்டு என்றால் தெரிந்திருக்கும்!

வழித்தடத்தில் தன் தலைவனின் தலைவியைச் சந்திக்கும் ஒரு ஆசைநாயகிஅவளருகில் சென்று,தன்னை அறிமுகப்படுத்தும் விதமாக, "நான் தூரத்தில் வசிப்பவள்உனக்குத் தங்கைமுறையை உடையவள்" என்று கூறித் தலைவியின் நெற்றியையும் கூந்தலையும் அன்புடன் வருடுகிறாள்.இந்தப் பாசவருடல் அகநானூற்றின் 386ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளதுஇப்படிப் பாசமாக அவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டைகள் வருவதும் உண்டு.

சக்களத்திச் சண்டைகள்

"சக்களத்தி" என்றால் சக கிழத்தி என்று பொருள்அதாவதுஅக்காள்  தங்கைகள்.அவர்களுக்குள் ஏன் சண்டைவருகிறதுஅவர்களுக்குத் தனித்தனியே கணவர்கள் இருந்துவிட்டால் ஏன் சண்டைவரப்போகிறதுஒரே கணவன் என்பதால்தான்அதுவும் அவர்கள் ஒருதாய் வயிற்று அக்காள்  தங்கைகளாக இல்லாமல் இருப்பதால்தான் இச் சண்டை வலுக்கிறது.

குறிப்பாக இச் சண்டைகள் அக்காலத்தில் மருதத்திணை சார்ந்த இடங்களில் (வயலும் வயல் சார்ந்த இடங்கள்மிகுதியாக உள்ளதுகாரணம்தலைவனிடம் செல்வம் மிகுந்துள்ளது.அவனுக்கு "வீடுகள்" சிலவற்றைப் பராமரிக்கும் தெம்பும் வந்துவிடுகிறதுஅவன் ஆசைநாயகியிடம் மிகுதியான நேரத்தைச் செலவிடுவது தலைவிக்குப் பிடிக்கவில்லைதன் கணவனைக் கட்டுப்படுத்த இயலாத தலைவிதன் கணவனின் ஆசைநாயகியின் மீது சினத்தைக் காட்டுகிறாள்இதனை அகநானூற்றின் 76, 276, 336, 346 ஆகிய பாடல்களும் குறுந்தொகையின் 8, 164, 80, 364, 370 ஆகிய பாடல்களும் விளக்கியுள்ளன.

தலைவனைப் பிரிந்து வருந்துவது தலைவி மட்டுமல்லசிலவேளைகளில் ஆசைநாயகிகளும்தான்.இச்சோகத்தினை நற்றிணையின் 90, 216, குறுந்தொகையின் 238, அகநானூற்றின் 146 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றதுஆசைநாயகிகள் விலைமகளிர்களாக இருந்தால்இச்சோகம் அவர்களை வாட்டியிருக்குமாஇதன்வழியாகவும்ஆசைநாயகிகள் விலைமகளிர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள 320ஆவது பாடல் ஒரு பரத்தை தன் தலைவன் தன்னைப் பிரிந்து பிறிதொரு பரத்தையிடம் சென்றதால் வருந்திக் கூறுவதாக அமைந்துள்ளதுஅப்படியென்றால் அந்தப் பரத்தை கைவிடப்பட்டவள் ஆகிறாள்அவள் இனி வேறு ஒரு தலைவனைத் தேடிக்கொள்வாளோஅப்படியென்றால்இந்தப் பரத்தையும் விலை மகளாகிறாளோ?

ஆசைநாயகியைச் சரிவரப் பேணிக்காக்காத தலைவர்களால் அவர்கள் வேறுவழியின்றி,வாழ்வாதாரத்துக்காக விலைமகளாக மாறுகின்றனர்போரில் வென்று கொள்ளையடித்துவரும் பொருட்களுடன் அடிமைகளாகப் பெண்களையும் கொண்டுவருதல் வழக்கமாக இருந்துள்ளது.அவ்வாறு கொண்டு வரப்பட்ட மகளிர் "கொண்டிமகளிர்" என்று அழைக்கப்பட்டனர்.அப்பெண்களும் காலப்போக்கில் விலைமகளிராகிறார்கள்.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள 170ஆவது பாடல் பரத்தையைக் கண்ட ஊர்ப்பெண்கள் தம் தலைவனை அவளிடமிருந்து காத்துக்கொள்வதற்கு முற்படுவதாகக் கூறியுள்ளதுஅப்படியென்றால்,ஆசைநாயகியைவிட விலைமகள் ஆபத்தானவளோ!

சங்க காலத்தில் பெண்ணுடல் விற்கப்படவில்லைசங்க காலத்துக்குப் பின்னர் பெண்ணுடல் பல வகைகளில் விற்கப்பட்டதுகாலத்தால் பிற்பட்ட பரிபாடலையும் மதுரைக்காஞ்சியையும் வீதிகளில் விலைமகள்கள் பெருகிவிட்ட தன்மையினைப் புலப்படுத்துகின்றன.

மதுரைக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள 569 முதல் 576 ஆம் வரையிலான அடிகள் அக்காலத்தின் பெரு நகரங்களுன் ஒன்றான மதுரை நகர வீதிகளில் விலைமகள்கள் வலம்வருவதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.

பரிபாடலின் 20ஆவது பாடலின் 48 முதல் 58 வரையிலான அடிகளில் தெருவில் செல்லும் விலைமகளைக் கடிந்துகொள்ளும் நிகழ்வு சுட்டப்பெற்றுள்ளது.

சங்ககாலத்திற்குப் பின் காலவோட்டத்தில் இவ் விலைமகளுக்குப் பொதுமகள்வரைவின் மகளிர்,கணிகைசலதிதாசிவேசிதேவரடியாள்விபச்சாரிபாலியல் தொழிலாளி இன்னபிற பெயர்கள் ஏற்பட்டன.

காலங்கள் மாறினாலும் மனைவிஆசைநாயகிவிலைமகள் என்ற முத்தரப்பும் வலுவுடன்தான் உள்ளன.

- – -


S

இடைநிலை ஆசிரியர்795 பேர் தங்களுக்குரிய பணியிட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டனர்

1,649 இடைநிலை ஆசிரியர்களும், 167 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களும் தொடக்க கல்வி துறையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான கவுன்சலிங் நேற்று காலை தொடங்கியது. இதில், 795 பேர்தங்களுக்குரிய விருப்ப இடங்களை தெரிவு செய்து பணியிட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டனர்.
நேற்றைய கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு, வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கானஇடைநிலை ஆசிரியர் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும்


Sent from my

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்முறையை ரத்து செய்யக்கோரி ஊர்வலம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஊர்வலம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்முறையை ரத்து செய்யக்கோரி நேற்று ஊர்வலம் சென்றனர். அவர்களில் 4 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்ந்து எடுத்து வருகிறது.
அதன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வு வைத்தும், அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றை கொண்டும் ஆசிரியர்பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். அவ்வாறு 14 ஆயிரம் பி.எட். முடித்த பட்டதாரிகள் மற்றும் இடைநிலை பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாகதேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெற்று பணிநியமனம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித்தேர்வில் எடுத்த
மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு ஆசிரியர்களை பணிநியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆசிரியர்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டபல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
விஷம் குடித்தனர்
நேற்று அவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலமாகபுறப்பட்டனர். அவர்கள் லாங்ஸ் கார்டன் வரை சென்று அங்கு சாலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை குறித்து பேச வாய்ப்பு அளிக்கும்படி போலீசாரிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் செவி சாய்க்கவில்லை. மாறாக அவர்களை கைது செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த4 ஆசிரியர்கள் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதி உடனே அவர்கள் 4 பேர்களையும் ஆசிரியர்களே ஆட்டோவில் ஏற்றி சென்னையில் உள்ளராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அவர்களுக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வருமாறு:- நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (29),
சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த கபிலன் (29), சேலம் மாவட்டம் வீரகனூர்பகுதியை சேர்ந்த செல்லத்துரை (31) மற்றும் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29) ஆகியோர் இவர்கள் 4 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த மற்ற ஆசிரியர்கள் இரவு வரை உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Sent from my iPad

திருவண்ணாமலை இடைநிலை ஆசிரியர்கள் 62 பேருக்கு பணி நியமனஒதுக்கீட்டு ஆணை

திருவண்ணாமலை இடைநிலை ஆசிரியர்கள் 62 பேருக்கு பணி நியமனஒதுக்கீட்டு ஆணை
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 62பேருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், பணி நியமனஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கென ஏற்கெனவே ஆசிரியர்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 67பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. இதில், 62 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 5 பேர்கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட 62 பேரும்திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்தஇடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 62 பேருக்கும் பணி நியமனஒதுக்கீட்டு ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
பொ.பொன்னையா வழங்கினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் அளிக்க வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில்பணி நியமனம் அளிக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த குழந்தைகள்பாதுகாப்புத் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள்வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால்
ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திங்கள்கிழமை நடைபெறவில்லை. இதையடுத்து மனு அளிக்க வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில்போட்ட மனு:
தருமபுரி மாவட்டத்தில் யுனிசெப் நிதியுதவியுடன் செயல்பட்டஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மலைப்பகுதியில் உள்ளஉண்டு உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்தஜனவரி 2010-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே மாதம் 31-ஆம்தேதி வரையில் 70 பேர் பணியாற்றினோம். உரிய கல்வித் தகுதிகளுடன் நேர்காணல் அடிப்படையில் பணியில் சேர்ந்ததங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள்,யுனிசெப் ஆய்வுக் குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தங்களது பணி அனுபவத்திற்கு தகுந்த மதிப்பெண்கள் வழங்கி, ஆசிரியர்தகுதித் தேர்வில் தற்போது பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்அடிப்படையில் பணியமர்த்தப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு அரசாணை வெளியிடுவதற்கு முன்பே பணியில் சேர்ந்ததால்கருணை அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன்,பணி அனுபவத்திற்கு அளிக்கப்படும் மதிப்பெண்ணைக் கணக்கில்கொண்டு ஆசிரியர் பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

IMPORTANT ANOUNCEMENT BY TRB: பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வு

IMPORTANT ANOUNCEMENT BY TRB: பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வு
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கான
பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3)தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான என்ற இணையதள முகவரியில்வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும்,வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம்தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமனஆணைகள் வழங்கப்பட உள்ளன.

இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 1 செப்டம்பர், 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு

அரசு ஊராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடர்கிறது சிக்கல் பணி நிரந்தரம் ஆக முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

'ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்; யார் எழுதக் கூடாது' என்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இரு துறைகளின் இயக்குனர்கள், தெளிவான உத்தரவை பிறப்பிக்காததால், பணி நிரந்தரம் ஆக முடியாமல், ஏராளமான ஆசிரியர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2012ல், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. இந்த தேர்வை யார் எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், பலமுறை தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.அதன்படி, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வு குறித்து, அறிவிப்பு வெளியான,
2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின், புதிய ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கண்டிப்பாக, டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், மேற்கண்ட தேதிக்கு முன், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
அதேபோல், 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், புதிய ஆசிரியர் தேர்வு குறித்தஅறிவிப்பு வெளியாகி, மேற்கண்ட தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பணியில் சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர் அனைவரையும், டி.இ.டி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால் தான், பணி நிரந்தரம் செய்வோம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும், இழுத்தடிப்பாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறியதாவது:டி.ஆர்.பி., உத்தரவை, அதிகாரிகளிடம் காட்டினாலும், அதை, அவர்கள் ஏற்பதில்லை. 'எங்களுக்கு, எங்கள் துறை இயக்குனரிடம் இருந்துதெளிவான வழிகாட்டுதல் உத்தரவு வர வேண்டும்; இதுவரை வரவில்லை. வந்தால் தான், அதன்படி செயல்பட முடியும்' என, கூறுகின்றனர்.இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணி நிரந்தரம் ஆக முடியாமல் தவித்து வருகின்றனர். இது, முக்கியமான பிரச்னை என்பதால், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள், டி.இ.டி., தேர்வு குறித்த வழிகாட்டுதல் உத்தரவை, உடனடியாக, மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்


Sent from my iPad

பட்டதாரி ஆசிரியர் :5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

சென்னை.,கன்னியாகுமரி.,நெல்லை,தூத்துக்குடி,மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர் பணி இடங்கள்காலி இல்லை.எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை.
4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.

SGT COUNSELING UPDATE :மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம்

SGT COUNSELING UPDATE :மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம்
திருச்சி. 10

கோயம்புத்தூர் 12

தர்மபுரி. 70

SGT COUNSELING :நீங்களும் உதவலாம்....

அன்பான வேண்டுகோள்
தாங்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிட விவரத்தை அனுப்பி உதவிட வேண்டுகின்றோம். அது அடுத்த நாளில் நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பிற மாவட்டத்தினருக்கு உதவக்கூடும்
விவரத்தினை கீழ்கண்ட எண்ணுக்கு கீழ்கண்டவாறு sms மூலம் அனுப்பலாம் அல்லது தொடர்பு கொண்டு கூறலாம்.
District- no of vacants-no of candidates
example sms
velore -vacant 60- candidate 35

candidate என்பது முதல் நாள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை(பட்டியல் ஒட்டப்படும்)

அனுப்பவேண்டிய mob no: 8508472547


Sent from my iPad

தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்,திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்,திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் அண்மையில்திருவண்ணாமலை தியாகி ந.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்
பள்ளியில் நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவராக பிரசன்னா, மாவட்டச்செயலாளராக சதாசிவம், மாவட்ட பொருளாளராக முருகையா, மகளிரணிச்செயலாளராக ஜெயஸ்ரீ மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சந்திப்பு: புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையாவைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர் . நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் சம்பத்குமார், முன்னாள் மாவட்டச்செயலாளர் சுந்தரம், திருவண்ணாமலை கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்மணிகண்டன், இளங்கோ, ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SEPTEMBER: IMPORTANT DATES FOR TEACHERS

SEPTEMBER: IMPORTANT DATES FOR TEACHERS

05.09.2014-ஆசிரியர் தினம்.
06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்
06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு
06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி. 10.09.2014 முதல் 12.09.2014 வரை- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்றதலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி.
17. 09. 2014 முதல் 25.09.2014 வரை உயர் மேல்நிலைப்பள்ளி 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல்பருவத்தேர்வு (I st TERM )நடைபெற உள்ளது.
22.09.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவதேர்வு (I st TERM ) ஆரம்பம்.
27.09.2014-05.10.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கான விடுமுறை

1,649 இடைநிலை ஆசிரியர் :செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்ககல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்ககல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான கலந்தாய்வு இன்று முதல் செப்., 4 வரை நடக்கிறது. கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து,தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி மேற்பார்வையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு முடியும் வரை,மாவட்ட தலைமையை விட்டு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. கலந்தாய்வுக்கு வருபவர்களிடம், கனிவான
அணுகு முறையை கையாள வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்தவுடன்,mஒதுக்கீட்டு ஆணையை உடனே பிரின்ட் எடுத்து கொடுக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும்போது, மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இல்லாத பட்சத்தில்,அதை காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டும். பணியிட ஒதுக்கீடு பெற்றவர்கள்,ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிட்டுள்ள, ஆவணங்களுடன் செப்.,4 முதல் 6 ம் தேதிக்குள் மாவட்ட தொடக்க
கல்வி அலுவலரிடம் பணி நியமன ஆணை பெற்று, செப்.,8 ல் பணியில் சேர்ந்திட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பணி நியமன ஆணை வழங்கும் முன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகங்களில் பணிபுரியும்அமைச்சு பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்க வேண்டும். பின்னாளில் ஏதேனும்குறை நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருமே பொறுப்பு ஏற்க நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை 


இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடிஉள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கானகலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ளகாலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு நாளை யும் (செவ்வாய்)கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ளகாலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தால் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பிட முகவரி உள்ள மாவட்டத்தைச் சேர்ந்தஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும்கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.கலந்தாய்வின்போது, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் டிஆர்பி தெரிவுக்கடிதம் ஆகியவற்றை கண்டிப்பாககொண்டுவர
வேண்டும். சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, பெரம் பலூர், தேனி, விருதுநகர் ஆகியமாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லாத தால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்இன்று (திங்கள்கிழமை) கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்
காலிப்பணியிடங் களுக்காக நாளை (செவ்வாய்க் கிழமை) தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கலந்தாய்வில்கலந்து கொண்டு பணிஒதுக்கீட்டு ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Sent from my iPad