திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்,திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்,திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் அண்மையில்திருவண்ணாமலை தியாகி ந.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்
பள்ளியில் நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவராக பிரசன்னா, மாவட்டச்செயலாளராக சதாசிவம், மாவட்ட பொருளாளராக முருகையா, மகளிரணிச்செயலாளராக ஜெயஸ்ரீ மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சந்திப்பு: புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையாவைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர் . நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் சம்பத்குமார், முன்னாள் மாவட்டச்செயலாளர் சுந்தரம், திருவண்ணாமலை கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்மணிகண்டன், இளங்கோ, ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக