வியாழன், 11 செப்டம்பர், 2014

ஈர்ஒற்று மயக்கம்


6.4 ஈர்ஒற்று மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு: புகழ்ச்சி

இதில் 'ழ்' என்னும் மெய் எழுத்துக்குப் பின் 'ச்' என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த 'ச்' என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

• 'ய்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

நாய்க்கால்- க்
வேய்ங்குழல்- ங்
காய்ச்சல்- ச்
மெய்ஞ்ஞானம்- ஞ்
மேய்த்தல்- த்
பாய்ந்தது- ந்
வாய்ப்பு- ப்
செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)

• 'ர்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

பார்க்கிறாள்
- க்
ர்ங்கோடு
- (ஆத்திமரக்கிளை) - ங்
உயர்ச்சி
- ச்
ஞ்
- வழக்கத்தில் இல்லை.
பார்த்தல்
- த்
ர்ந்து
- ந்
தீர்ப்பு
- ப்
ம்
- வழக்கத்தில் இல்லை.

• 'ழ்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

வாழ்க்கை
- க்
பாழ்ங்கிணறு
- ங்
வீழ்ச்சி
- ச்
ஞ்
- வழக்கத்தில் இல்லை
வாழ்த்து
- த்
வாழ்ந்து
- ந்
தாழ்ப்பாள்
- ப்
ம்
- வழக்கத்தில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக