செவ்வாய், 2 செப்டம்பர், 2014

IMPORTANT ANOUNCEMENT BY TRB: பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வு

IMPORTANT ANOUNCEMENT BY TRB: பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வு
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கான
பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3)தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான என்ற இணையதள முகவரியில்வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும்,வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம்தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமனஆணைகள் வழங்கப்பட உள்ளன.

இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக