சனி, 26 ஜூலை, 2014

முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் :ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனிமாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கனாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் சரவணக்குமார்முன்னிலையில் நடந்தது.மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துக்குமாரி பேசினார்.
பணி மாறுதல்மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் மாநில அளவில் காலிப்பணியிடங்கள் காட்டாமல்மறைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. கலந்தாய்வு நாள் அன்று அனைத்து ஆசிரியர்களும் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை கண்டித்து ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்ததீர்மானிக்கப்பட்டது. பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழி மூலம் நடத்தாமல், பழையமுறையிலேயே நடத்த வேண்டும்.2004ல் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக