வியாழன், 23 அக்டோபர், 2014

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 3

இசையமுது
சொல்பொருள்
* வானப்புனல் - மழைநீர்
* வையத்து அமுது - உலகின் அமுதம்
* வையம் - உலகம்
* தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
* புனல் - நீர்
* பொடி - மகரந்தப் பொடி
* தழை - செடி
* தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
* தழைத்தல் - கூடுதல், குறைதல்
* தழைக்கவும் - குறையவும்.

* புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
* இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
* பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய
பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
* பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
* திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப
விளக்கு.
* கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
* கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
* இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
* பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

பழமொழி நானூறு சொல்பொருள்:
* ஆற்றவும் - நிறைவாக
* நாற்றிசை - நான்கு + திசை
* ஆற்றுணா - ஆறு + உணா
* வழிநடை உணவு - இதனை கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர்.
* பழமொழி நானூறு ஆசிரியர் - முன்றுறை அரையனார்.
* முன்றுறை என்பது ஊர்ப்பெயர்
* அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - பழமொழி நானூறு.
* பழமொழியில் உள்ள பாடல்கள் - 400
* ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
.

பொருள்: * ஆற்றுணா வேண்டுவது இல் - "கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"
* ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)
* குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.


உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
* நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால்
நேரு
* நேருவின் துணைவியார் பெயர் - கமலா
* தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன்
என்னுமிடத்தில் உள்ளது.
* நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம்
எழுதியுள்ளார்.
* பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும்
போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
* நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
உள்ளது.
* நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
* போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
* அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
* இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
* தழை என்பதன் பொருள் - செடிகொடி. குறிப்பு:
* சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
* மில்டன் - ஆங்கில கவிஞர்.
* பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
* காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
* டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் -
உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
* பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர். * பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும்பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
* கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
* நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.

* ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும்,
முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக்
கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு

குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.

இலக்கணம்: * ஓளியை உணர்த்தும் சொற்கள்இரண்டு இரண்டாக சேர்த்து வருவது,
பிரித்தால் பொருள் தராது. எ.கா: கண கண, சள சள, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள.
இதனை இரட்டைக்கிளவி என்பர்.

செய்யுள்: சித்தர் பாடல்
* சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில்
வாழ்ந்தவர்கள்

* "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச்
சித்தர்.
* உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -
கடுவெளிச் சித்தர்.
* சித்து - அறிவு
* கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
* நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் -
கடுவெளிச் சித்தர்.
* பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் -
இவை காரணப்பெயர்கள்.
* வேம்பு - கசப்பான சொற்கள்.
* வீறாப்பு - இறுமாப்பு
* கடம் - உடம்பு.
* சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
* வெய்யவினை - துன்பம் தரும் செயல்
* சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
* பலரில் - பலர் + இல்(வீடுகள்)


கவிதை: தாகம்
* யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால்
கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
* கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய
அகாடமி விருது பெற்றது.
* இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
* புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
* தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பாலவீதி

உரைநடை: இளமையில் பெரியார் கேட்ட வினா

* இயற்பெயர்: இராமசாமி
* பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
* பிறந்த ஊர்: ஈரோடு.
* தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம்
.* போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில்தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர்என அழைக்கப்பட்டார்.

* தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் -
சுயமரியாதை.
* பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
* சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின்
யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
* மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
* பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில்
எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம்
செய்தார் - 13,12,000 கி.மீ
* பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம்
உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.

பெரியார் பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை;
அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.

செய்யுள்: புறநானூறு: * புறநானூறு = புறம் + நான்கு + நூறு.

* தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
* இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
* அரிய நெல்லிக்கனியை அதியமானின் பெற்றவர், நண்பர் - ஔவையார்.
* சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
* நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார். சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும்ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
* ஔவை என்பதன் பொருள் - தாய்.

பாடல் வரிகள்:
* எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்

பொருள்:
* அவல் - பள்ளம்
* மிசை - மேடு,
* நல்லை - நன்றாக இருப்பாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக