புதன், 18 பிப்ரவரி, 2015

மதுரை, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விழுப்புரத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு முகாம்,விழுப்புரத்தில் நடந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு, கடந்த மாதம் 10ம்தேதி நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு, புவியியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கானமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு நடந்தது.

தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மதுரை, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள்சரி பார்க்கும் பணி நேற்று நடந்தது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், 14 குழுக்களாகசான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
சீத்தாராமன், . பாஸ்கரன், தனமணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலக
கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர்வசுந்தராதேவி, துணை இயக்குநர் பூபதி ஆகியோர் கூர்ந்தாய்வுமேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக