சனி, 21 பிப்ரவரி, 2015

TRB PG TAMIL 2012-13:பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர்- அரசு சார்பில் மறு ஆய்வு வழக்கு திங்களன்று விசாரணைக்கு வருகின்றது

TRB PG TAMIL 2012-13:பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர்- அரசு சார்பில் மறு ஆய்வு வழக்கு திங்களன்று விசாரணைக்கு வருகின்றது

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் 2012-13 முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.

நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

அதனை எதிர்து அரசு சார்பில் மறு ஆய்வு மனுக்களும், மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 23.02.15 திங்களன்று நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வருகின்றது. அரசு சார்பில் அட்வகெட் ஜெனரல் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக