திங்கள், 3 மார்ச், 2014

லேப் டாப்கள் திருட்டு: பள்ளிகல்வி துறையின் உத்தரவை தலைமை ஆசிரியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்

லேப் டாப்கள் திருட்டு: பள்ளிகல்வி துறையின் உத்தரவை தலைமை ஆசிரியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ம் தேதிகாலை சுமார் 4.30 மணியளவில் 53 லேப் டாப்கள் திருடபட் டிருந்தது.இது தொடர்பாக அன்றையதினமே அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ் .அம்சவேணி கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் பிப்ரவரி 12ம் தேதி திருடப்பட்ட லேப் டாப் களுக்கு ரூ 8,47,470 கட்ட வேண்டும் என பள்ளி கல்வி துறையிடமிருந்து தலைமை ஆசிரியைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.தலைமை ஆசிரியை சில மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள தால் பள்ளிகல்வி துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக