புதன், 19 மார்ச், 2014

பிளஸ்–2 கணிதத்தேர்வில் பிழையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் அளிக்கப்படுமா?அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பதில்

பிளஸ்–2 கணிதத்தேர்வில் அச்சுப்பிழையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று கேட்ட கேள்விக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பதில் அளித்தார்.
பிளஸ்–2 கணிதத்தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 3–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. விடைத்தாள்களை திருத்தும் பணி 24–ந்தேதி 66 கல்வி மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற உள்ளது. அதற்காக விடைத்தாள்கள் மிக பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்–2 தேர்வில் இயற்பியல் தேர்வும், வேதியியல் தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.ஆனால் கணிதத்தேர்வில் 2கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கேள்வி அச்சுப்பிழையுடன் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் கணிதத்தேர்வில் 200–க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அச்சுப்பிழையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:– அச்சுப்பிழையுடன் கேள்வி பிளஸ்–2 தேர்வையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் எந்தவித குறையும் இன்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பிளஸ்–2 கணிதத்தேர்வில் 15 கேள்விகள் கொடுத்து அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக விடை அளித்தால் 6 மதிப்பெண் வழங்கப்படும்.ஆனால் 15 கேள்விகளில் ஒரு கேள்வி மட்டும் அச்சுப்பிழையுடன் கேட்கப்பட்டிருந்தது.அந்த கேள்விக்கு எத்தனை மாணவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்துள்ளார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு பாடத்திற்கும் வினாக்களை சரிபார்த்து மதிப்பெண் அளிப்பது குறித்து ஒரு கமிட்டி வழக்கமாக அமைக்கப்படுவது உண்டு. அதுபோல கணிதபாடத்திற்கும் கமிட்டி அமைக்கப்படும். இது விடைத்தாள் திருத்துவதற்கு சற்று முன்னதாகத்தான் அமைக்கப்படும்.
கருணை மதிப்பெண்
கணிதத்தேர்வில் அந்த குறிப்பிட்ட கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. எனவே அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் கருணை மதிப்பெண்ணாக முழு மதிப்பெண் அளிக்கலாமா? என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும். மாணவர்கள் எந்த அளவிலும் பாதிக்கப்படமாட்டார்கள்.இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக