செவ்வாய், 18 மார்ச், 2014

ஆசிரியர் தகுதி சிந்திக்கவேண்டிய சில கேள்விகள்.....

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் தகுதி தேர்வுகளை,ஒவ்வொரு முறையும், 6 - 10 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், மத்திய அரசின் தேர்வில் - 2012ல், 1 சதவீதத்திற்கும்
குறைவானவர்களும்; 2013ல், 11 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றனர். மாநில அரசின் தேர்வில் - 2012ல், 1சதவீதத்திற்கும்குறைவானவர்களும்; 2013ல், ஏறத்தாழ 4 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.ஆசிரியர்களின் திறன் நிலை இப்படி இருக்க, நாம் சில தீவிரமான கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது:

1.பி.எட்., அல்லது டி.டி.எட்., கல்வி முறை மோசமாக இருக்கிறதா? அதில் தேர்ச்சி பெற்று வெளியே வருபவர்களிடம்,ஆசிரியர்களாக ஆகும்தகுதி இல்லை என்பதால் தான், தகுதி தேர்வு தேவைப்படுகிறதா? ஆம் எனில், தரமற்றபயிற்சியை தரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை என்ன செய்யலாம்?

2.ஆசிரியர் தகுதிதேர்வில், தேர்ச்சி பெறுவோரின் சதவீதத்தை பார்க்கும் போது பகீர் என்கிறது! தங்களுக்கானதகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் தான்,இன்று, நம் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்களா?இவர்களுக்கு, நம் குழந்தைகளுக்கான பாட புத்தகங்களை, கேள்வி தாள்களை தயாரித்து, மதிப்பெண் கொடுப்பதற்கு என்ன
தகுதி உள்ளது?

3.இட ஒதுக்கீடு என்பதற்கு, இன்று, தமிழகத்தில் எதிர்ப்பே கிடையாது. ஆனாலும், ஏற்கனவே குறைவாக உள்ள, 60 சதவீதம்என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் விகிதத்தை,ஒரு சில சமூகங்களுக்காக 55 சதவீதம் என, குறைத்தால் அடுத்தடுத்ததலைமுறைகளின் கல்வி மேலும் பாதிக்கப்படாதா? இந்த தகுதி தேர்வை கொண்டுவருவதன் நோக்கமே, மிக தரமான
ஆசிரியர்கள் இல்லாவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடும் என்பது தானே?

4.சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாதுஎன்று, நீதிமன்றம் சொல்லிவிட்டது.கல்வி உரிமை சட்டத்தின் பிற ஷரத்துகளாவது அங்கு செல்லுபடியாகுமா? அங்குள்ள ஆசிரியர்களும் ஆசிரியர்தகுதி தேர்வு எழுதவேண்டுமா அல்லது தேவையில்லையா? இது குறித்து, மாநில அரசு தெளிவுபடுத்துமா?

5.கல்வி உரிமை சட்டம் இயற்றப்பட்டு ஐந்தாண்டுகள் விரைவில் முடியப்போகின்றன. வரும், மார்ச் 31, 2015க்குள்,எப்படியும், தமிழக ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுவிடப்போவதில்லை.அப்போது யாரேனும் கல்வி உரிமை சட்டத்தின் ஷரத்துகளின் அடிப்படையில், ஏன் ஆசிரியர்கள்தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்று, தமிழக அரசின் மீது பொது நல வழக்கு தொடரலாம். தமிழக அரசும்,
மத்திய அரசும் என்ன பதில் சொல்லும் அப்போது?

6.கல்வி துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஏறத்தாழ 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும் தமிழக அரசு, இத்தகையஅடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாமா?பணத்தை கொட்டினால் மட்டும் கல்வி திறம் மேம்படுமா?

DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக