ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில், புவிவட்டச்சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
பி.எஸ்.எல்.வி.1பி வரிசையில் ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இதேபோல் இன்னும் 4 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது. அதில் 2 செயற்கை கோள்கள் இந்த ஆண்டில் அனுப்ப இஸ்ரோ தீவிர ஏற்பாட்டினை செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், 58 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் கடந்த 2-ம் தேதி (புதன்கிழமை) காலை 6.44 மணிக்கு தொடங்கியது.
ராக்கெட்டை ஏவுவதற்கான சோதனைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் முன்னதாக நிறைவேற்றப்பட்டது.
கவுண்டவுன் முடிந்தவுடன் பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1432 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக