வியாழன், 10 ஏப்ரல், 2014

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ் : மாணவர்களுக்கு பெற்று தர உத்தரவு

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
பெற்றுத்தர அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்று தருவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது.அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு,இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயேபூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பெற்று, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2 ல்அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச திட்டங்கள் அனைத்தும் பள்ளி திறக்கும் நாளில் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தாண்டு முதல் இலவச பஸ் பாஸ் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக