புதன், 29 ஜூலை, 2015

TRB PG TAMIL தொல்காப்பிய மெய்ப்பாடு




மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல். தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் 4 வகைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும் 32 மெய்ப்பாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர். இவை உடலின் மெய்ச்சுவைகள். அதாவது மெய்யுணர்வுகள். இவை அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன.

இவையேயன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

  • பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவானஅகத்தெழுச்சி உணர்வுகள்.
  • சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
  • தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு.

ஒப்புநோக்குக

புறப்பொருள் மெய்ப்பாடுகள் 

மெய்ப்பாடு எட்டு. அவை நகை, அழுகை முதலானவை.
மெய்ப்பாடு தோன்றுமிடம் சுவை. சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவை-உணர்ச்சி. அவை எள்ளல், இளமை முதலான 32, மற்றும் உடைமை, இன்புறல் முதலான 32

8 வகை 

மெய்ப்பாடு மெய்ப்பாடு தோன்றும் அகச் சுவைகள்
நகை எள்ளல்  இளமை  பேதமை   மடன் 
அழுகைஇளிவு  இழவு  அசைவு  வறுமை 
இளிவரல் மூப்பு   பிணி   வருத்தம்  மென்மை 
மருட்கை  புதுமை   பெருமை   சிறுமை  ஆக்கம் 
அச்சம்அணங்கு   விலங்கு   கள்வர்  தம்-இறை 
பெருமிதம்கல்வி  தறுகண்  புகழ்மை  கொடை 
வெகுளிஉறுப்பறை  குடிகோள்  அலை  கொலை 
உவகை செல்வம்  புலன்   புணர்வு  விளையாட்டு

அகச் சுவைகள் 32

மேலே சொல்லப்பட்ட எட்டு வகையான மெய்ப்பாடுகளின் கூறுகள் இந்த 32 மெய்ப்பாடுகள்.

உடைமை,இன்புறல்,நடுவுநிலை,அருளல்,தன்மை,அடக்கம்,வரைதல்,அன்பு,
கைம்மிகல்,நலிதல்,சூழ்ச்சி,வாழ்த்தல்,நாணுதல்,துஞ்சல்,அரற்று,கனவு,
முனிதல்,நினைதல்,வெரூஉதல்,மடிமை,கருதல்,ஆராய்ச்சி,விரைவு,உயிர்ப்பு,
கையாறு,இடுக்கண்,பொச்சாப்பு,பொறாமை,வியர்த்தல்,ஐயம்,மிகை,நடுக்கு,

அகப்பொருள் மெய்ப்பாடுகள்

அவத்தை 6 

'வினைய நிமித்தம்' எனத் தொல்காப்பியர் குறிப்பிடும் இந்த மெய்ப்பாடுகளை உரையாசிரியர்கள் 'அவத்தை' என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். தலைவன் முதன்முதலில் பார்க்கும்போது தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் இவை. 

தலைவி மெய்ப்பாடு (அவத்தை) வரிசை எண்தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுமெய்ப்பாடு பற்றிய விளக்கம்
1புகு முகம் புரிதல்,
பொறி நுதல் வியர்த்தல்,
நகு நயம் மறைத்தல்,
சிதைவு பிறர்க்கு இன்மை
காதலன் பார்ப்பதைக் காதலி விரும்புதல்
காதலி நெற்றியில் வியர்வை
தான் விரும்புவதைக் காதலி மறைத்தல்
மற்றவர்களைப் பற்றி எண்ணாமை
2'கூழை விரித்தல்,
காது ஒன்று களைதல்,
ஊழ் அணி தைவரல்,
உடை பெயர்த்து உடுத்தல்,
தலைமுடியை விரித்துவிடுதல்
காதில் இருக்கும் அணிகலன் ஒன்றைக் கழற்றிப் போட்டுக்கொள்ளுதல்
அணிந்திருக்கும் அணிகலன்களைத் தடவிப் பார்த்துக்கொள்ளுதல்
காதல் உணர்வால் தளரும் ஆடையை இறுக்கி உடுத்திக்கொள்ளுதல்
3'அல்குல் தைவரல்,
அணிந்தவை திருத்தல்,
இல் வலியுறுத்தல்,
இரு கையும் எடுத்தல்,
தன் குறி உறுப்பில் தோன்றும் ஊறலால் அதனைத் தடவுதல்
அணிந்திருப்பவைகளைத் திருத்தி அழகு செய்துகொள்ளுதல்
தம் இல்லத்தார் கடிவர் எனல்
மாட்டேன் என்று கூறிக் கைகூப்பல்
4'பாராட்டு எடுத்தல்,
மடம் தப உரைத்தல்,
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்,
கொடுப்பவை கோடல்
தலைவனை உயர்ந்தவன் எனப் பாராட்டுதல்
பழகுவதற்குக் கூசும் தன் மடமைத் தன்மையை விட்டுவிட்டு அவனிடம் அளவளாவிப் பேசுதல்
உற்றார் உறவினர் அன்பு இல்லாமல் அலர் தூற்றுவார்களே என்று நாணுதல்
தலைவன் தரும் காதல் பரிசை ஏற்றல்
5'தெரிந்து உடம்படுதல்,
திளைப்பு வினை மறுத்தல்,
கரந்திடத்து ஒழிதல்,
கண்டவழி உவத்தல்,
அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு அவனுக்கு உடன்படல்
காதலில் திளைப்பதை மறுத்தல்
அவனைக் தேடிவரச் செய்யத் தான் மறைவிடம் ஒன்றில் தன்னை ஒளித்துத்துக்கொள்ளுதல்
அவன் தன்னைக் கண்டுபிடித்து வந்தவுடன் மகிழ்தல்
6'புறம் செயச் சிதைதல்,
புலம்பித் தோன்றல்,
கலங்கி மொழிதல்,
கையறவு உரைத்தல்,
புணர்ச்சிக்குப் பின்னர் நிகழ்வன
அவன் தன்னை ஒப்பனை செய்துவிட்டதைப் பிறர் அறியமுடியாதபடி அவன் செய்த ஒப்பனைகளை அழித்தல்
அவனோடு இருந்ததற்காகப் புலம்புவது போலத் தோற்றமளித்தல்
கலக்கத்தோடு அவனிடம் பேசுதல்
'இனி எனக்கு உன்னைத் தவிர வேறு வழி இல்லை' என்று தான் கையற்றிருக்கும் இயலா நிலையை அவனிடம் எடுத்துக் கூறுதல்

உரையாசிரியர் விரிவு

அவத்தைகள் 10 என வடநூலார் கொள்வர்.

வடநூலார் கூறும் மன்றல் என்னும் ஆண்-பெண் உறவுகள் எட்டு. அவற்றில் நடுவண் ஐந்திணைக்கண் வருவன ஆறு. இவற்றைத் தொல்காப்பியர் விளக்கினார். ஏனைய நான்கும் கைக்கிளைக்கும்பெருந்திணைக்கும் உரியன. ஒத்த காமத்து நிகழாது.

7ஏழாம் அவத்தைநாண் நீங்கிய காதல்
8எட்டாவதுதேறுதல் ஒழிந்த காமத்து மிகுதி
9ஒன்பதாவதுஉன்மத்தம்
10பத்தாவதுசாக்காடு

இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின் . ஒன்பதாவது மயக்கம்; ; ஆதலான் எனக் கூறினார் என்று கொள்க. 

மனம் அழிந்த தலைவியின் மெய்ப்பாடுகள் 

காதனுக்காகக் காத்திருக்கும்போது காதலியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள்

இன்பத்தை வெறுத்தல்,துன்பத்துப் புலம்பல்,எதிர் பெய்து பரிதல்,ஏதம் ஆய்தல்,பசி அட நிற்றல்,
பசலை பாய்தல்,உண்டியின் குறைதல்,உடம்பு நனி சுருங்கல்,கண் துயில் மறுத்தல்,கனவொடு மயங்கல்,
பொய்யாக் கோடல்,மெய்யே என்றல்,ஐயம் செய்தல்,அவன் தமர் உவத்தல்,அறன் அளித்து உரைத்தல்,
ஆங்கு நெஞ்சு அழிதல்,எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்,ஒப்புவழி உவத்தல்,உறு பெயர் கேட்டல்,(நலத் தக நாடின்) கலக்கம்

மனம் அழியாத் தலைவியின் மெய்ப்பாடுகள் 8

இது திருமணத்துக்கு முற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும், திருமணத்துக்குப் பிற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும் இருவகையாக்கித் தொகுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முந்திய களவு வாழ்க்கையில் தோன்றுவன

தலைவன் மனம் அழியக்கூடாது என நடந்துகொள்ளும் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் 'அழிவில் கூட்டம்' எனப்படும்.

  1. முட்டுவயின் கழறல்,
  2. முனிவு மெய்ந் நிறுத்தல்,
  3. அச்சத்தின் அகறல்,
  4. அவன் புணர்வு மறுத்தல்,
  5. தூது முனிவு இன்மை,
  6. துஞ்சிச் சேர்தல்,
  7. காதல் கைம்மிகல்,
  8. கட்டுரை இன்மை,

திருமணத்துக்குப் பின்னர் கற்பு வாழ்க்கையில் தோன்றுவன - 10 

  1. தெய்வம் அஞ்சல்,
  2. புரை அறம் தெளிதல்,
  3. இல்லது காய்தல்,
  4. உள்ளது உவர்த்தல்,
  5. புணர்ந்துழி உண்மை,
  6. பொழுது மறுப்பு ஆக்கம்,
  7. அருள் மிக உடைமை,
  8. அன்பு தொக நிற்றல்,
  9. பிரிவு ஆற்றாமை,
  10. மறைந்தவை உரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவி

வாழ்வியல் மனநிலை

இது திருமணத்துக்கு முன்னர், திருமணத்துக்குப் பின்னர் என்னும் இரண்டு கோணங்களில் நோக்கப்பட்டுள்ளது.

மணப்போர் ஒப்புமை [50]

வாழ்க்கையில் இணையும் ஆண் பெண் இங்குக் காட்டப்பட்டுள்ள 10 நிலைகளில் ஒத்தவர்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பர்.

ஒப்புவிளக்கம்
பிறப்புஆண், பெண் என்னும் பிறப்பு [51]
குடிமைஆயர், வேட்டுவர் போன்ற ஒத்த குடி
ஆண்மைஆண்மை, பெண்மை உணர்வுகள் ஒத்திருத்தல்
ஆண்டுபெண் மூத்தவளாக இல்லாமை, ஆண் கிழவனாக இல்லாமை
உருவுஒருவரை ஒருவர் கவரும் கட்டழகு
நிறுத்த காம வாயில்ஒத்த காம உணர்வுகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 
நிறைஒருவரை ஒருவர் விரும்பும் நிறைந்த உள்ளம் 
அருள்தவறுகள் நேரும்போது பெருந்தன்மையுடன் ஒத்துப்போகும் அருளுடைமை இருவருக்கும் இருத்தல் வேண்டும்
உணர்வுஈகை முதலான உணர்வுகள் ஒத்திருத்தல்
திருஒத்த செல்வ வளம் 

மணந்தோரிடம் தோன்றாமல் இருக்க வேண்டியவை 

நிம்பிரிபொறாமை அல்லது நச்சரித்தல்
கொடுமைமற்றவரைக் கொடுமைப்படுத்துதல்
வியப்புமற்றவரை வியவாமை
புறமொழிபிறரிடமோ, பிறரைப் பற்றியோ கோள் மூட்டக்கூடாது
வன்சொல்திட்டக்கூடாது
பொச்சாப்புசோர்வால் நேரும் மறதி கூடாது
மடிமைசோம்பல் கூடாது
குடிமை இன்புறல்ஒருவர் மற்றொருவர் குடியைத் தழுவுதலில் இன்பம் காணவேண்டும்
ஏழைமைஏழைமை உணர்வு கூடாது
மறப்புமற்றவர் உதவியை மறத்தல் ஆகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக