புதன், 15 ஜூன், 2016

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1881-1953)

எந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலாமலேயே சிறந்த தமிழறிஞராக விளங்கியவர் பண்டிதமணி
மு.கதிரேசன் செட்டியார் (1881-1953). இவர் தமது வட மொழியறிவைத் தமிழின் மேன்மைக்கு
பயன்படுத்தினார். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை தோன்றுவதற்கு காரணமாக இவரும் விளங்கினார்.
அக்காலத்தில் இந்த சன்மார்க்க சபையும், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமும் போட்டியிட்டுத்
தமிழையும், சைவத்தையும் வளர்த்தன. உரைநடைக் கோவை, நாட்டுக்கோட்டை நகரத்தார் வாழ்க்கை,
நாட்டுக்கோட்டை நகரத்தார் சீர்திருத்தம், பண்டிதமணி பாடல்கள், பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பண்டிதமணி சிறந்த நடையில் எழுதுபவர். மிக எளிய நடையில் எழுதுவதை அவர்
விரும்பியதில்லை. இவருடைய நடை சிறிது கடினமாயிருப்பினும் மீண்டும், மீண்டும் படித்தால் என்ன
சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். 'நடை வனப்பு' என்பது இவர் பெரிதும் போற்றிய ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக