ஏப்ரல் 24ம் தேதி வாக்குப் பதிவும், மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மக்களவைக்கு நடைபெறும் 9 கட்ட தேர்தலில், தமிழகம் மற்றும்புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியானதுமே, தேர்தல் நடத்தைகளும் அமலுக்கு வருகின்றன. !
இந்த நிலையில், தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 29ம் தேதி துவங்குகிறது.வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 5ம் தேதி. வேட்பு மனுக்கள் ஏப்ரல் 7ம் தேதி பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 24ம் தேதி வாக்குப் பதிவும், மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக