புதன், 10 ஜூன், 2015

TRB PG TAMIL: ஆறுமுகநாவலர்



உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையேநோக்கிப் பயணமாகியதுஇந்நூற்றாண்டில்  அரசியலாரும்கிறித்துவமதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும்,பாடசாலைகளையும் நிறுவினர்ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப்பற்பல பாடங்களைக் கற்பித்தனர்சென்னைக் கல்விச்சங்கம்(MadrasCollege) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும்உரைநடைப்புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
      இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்புநூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடைஇலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.

       இந்திய நாட்டை அப்போது ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியார் இலக்கண நூல்களைஎளியஉரைநடையில் எழுதி வெளியிடுவோர்க்குப் பரிசளிப்பதாகக் கூறவே தமிழில் பல இலக்கண நூல்கள்உரை நடையில் வெளிவந்தனஇந்நூற்றாண்டில் நாடு முழுவதும் அச்சுக்கூடங்களை நிறுவி,எண்ணற்ற உரைநடை நூல்களை இயற்றி அச்சிட்டனர்குறிப்பாக 'மிஷன்என்னும் கிறித்துவசங்கங்கள் மதசார்பான உரைநடை நூல்களை ஏராளமாக அச்சிட்டுக் குறைந்த விலைக்குக்கொடுத்தனர்இவ்வாறாக உரைநடை வளர்ச்சி மேலோங்கியது.  இவ்வளர்சிக்கு வித்திட்டவர்ஆறுமுகநாவலர்அவர் குறித்த தகவலைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பிறப்பும் கல்வியும்
  யாழ்பாணத்து நல்லூரில் சைவ வேளாளர் குலத்தில் 18.2.1822 அன்று பிறந்தவர்ஆறுமுகநாவலர்புலவர் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையார் இவரின் பெற்றோர்கள் ஆவர்.இவருக்கு ஆங்கில அறிவும்தமிழ்ப்புலமையும் இளமையிலே கைவரப் பெற்றனபள்ளிப்படிப்பினையாழ்ப்பாணத்தில் கற்றார்மெத்தடிஸ்ட் மிசன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்
தமிழ்நாடும் இலங்கையும் அரசியல்மொழிசமுதாயம்பண்பாட்டுத்தொடர்பு கொண்டுகாணப்பட்டிருந்த காலமாகத் திகழ்ந்ததுதமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டிருந்த பெரியோர்பலரை இலங்கை ஈன்றெடுத்திருக்கிறதுபல்வேறு துறைகளில் மனிதர்கள் தமிழ்பற்றுள்ளவராகஇருந்துள்ளனர்அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுகநாவலர் ஆவார்.
            சைவமும், தமிழும் தம் இரு கண்களாகக் கொண்டு விளங்கினார்.இவ்விரண்டினைவளர்ப்பதற்கு யாழ்பாணத்திலும்சிதம்பரத்திலும் கல்லூரிகளை நிறுவினார். "அவற்றிக்கு ஆகும்பணத்திற்கு வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத்தமிழ்த் தொண்டு செய்த சான்றோர் அவர்"என்று டாக்டர் மு.குறிப்பிடுகிறார்கிறித்துவ சமயம் வளர்ந்து பரவி வந்த காலத்தில் பழையசமயமான சைவ சமயத்திற்கு புத்துயிர் அளித்தார்தம் 19ஆம் வயதில் இருமொழிக் கற்பிக்கும்ஆசிரியராகத் திகழ்ந்தார்தூய தமிழில் பரிசுத்த வேதகாகம( Bible) நூலை மொழிபெயர்க்கத்துணைபுரிந்தார்.
            சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்க ஆர்வம் கொண்டதுமட்டுமின்றி சமயத்தை பரப்பவும் பெரிதும் முயன்றார்அதற்காகவே பற்பல நூல்களைஎழுதிவெளியிட்டார்ஆறுமுக நாவலருக்கு 27 வயது ஆகும் பொழுது நாவலர்என்ற பட்டத்தைத்திருவாவடுதுறை ஆதீனத்தார் வழங்கி அவரை சிறப்பித்தனர்.                                                      
வள்ளலாரின் பாடல்களை 'அருட்பாஎன வாதிட்டவர்சைவ சமயத்தில் கொண்ட  ஊன்றியபற்றே வள்ளலார் பாடல்களை ஏற்கத் தயங்கியதுஅவரிடம் கல்வி கற்ற மாணவர்களிலே 'சபாபதிநாவலர்என்பவர் தலைசிறந்தவர் ஆவார்சமய நூல்களை இயற்றுவதோடு மட்டுமின்றிசிறுவர்களுக்குப் பாடப்புத்தகங்களையும் எழுதினார்.
சிறப்புப்பெயர்கள்
பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளதால் இவரை அறிஞர் வி.கோ.சூரியநாரயணசாஸ்திரியார் 'வசனநடை கைவந்த வள்ளலார்' எனப் பாரட்டியுள்ளார். 'வைதாலும் வழுவின்றிவைவாரேஎன்ற பாராட்டுரையும் இவர் குறித்து எழுந்ததே ஆகும்ஆங்கில உரைநடைக்கு டிரைன்( Dryden ) போலத் தமிழுக்கு ஆறுமுகநாவலர் எனும் சிறப்பினைப் பெற்றவர் இவரை,                         
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேற்
  சொல்லுதமி  ழங்கே  சுருதி    எங்கே?
என திரு சி.வை.தாமோதிரம்பிள்ளை பாரட்டியுள்ளார்.
            தமிழ் காவலர்தமிழ் உரைநடையின் தந்தைநாவண்மை படைத்த பேச்சாளர்உரைநடைவேந்தர்பதிப்பாசிரியர்சைவ தந்த தண்ணளியாளர் ஐந்தாம் சமயக்குரவர் எனப் பலசிறப்புப்பெயர்களைக் கொண்டுள்ளார்பெர்சிவில் என்னும் கிறித்துவ பாதிரியார் இவரிடம் தமிழ்படித்தார் என்பது இவரின் புலமையின் சிறப்பாகும்இலக்கண வழுவில்லாத தூய்மையன எளியநடையே முதன்முதலில் கையாண்டவர் இவரே.
ஆற்றியத் தொண்டுகள்:
Ø  இயற்றிய நூல் - 23
Ø  உரை நூல் - 8
Ø  அச்சுப் பதிப்பு - 39
Ø  பாடல் வகைகள் - 14
v  சென்னையில் ஓர் அச்சகத்தை நிறுவி சைவ வினா விடை சைவ சமய நெறி உரை,திருமுருகாற்றுப்படையுரை போன்ற சமய நூல்களை வெளியிட்டுள்ளார்.
v  ஆங்காங்கேச சென்று சமயச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
v  பாரதம்பெரியபுராணம்,கந்தபுராணம்,சிற்றுரை போன்ற இலக்கிய நூல்களைபதிப்பித்துள்ளார்.
v  நன்னூல் காண்டிகையுரைஇலக்கணக் கொத்துஇலக்கணச்சூறாவளி போன்றநூல்களைப் பதிப்பித்துள்ளார்.
v  சைவ பிரகாச வித்தியா சாலை (ஆறுமுக நாவலர் உயர்நிலைப் பள்ளி எனசெயல்படுகிறது).                வண்ணார் பண்ணைஜோப்பாய்கொழுப்புத்துறை,பருத்தித்துறைஏழாலை முல்லைத்தீவு,  யாழ்ப்பாணம் எனும் இடங்களில் நடத்தினர்.
v  நல்லூரின் வித்யானு பாலன யந்திர சாலை 1848 தொடங்கப்பட்டது
v  வண்ணாரப் பண்ணையில் சைவ ஆங்கில வித்யாசாலை தொடங்கினார்.
v  சிதம்பரம் - சைவ பிரகாச வித்தியா சாலை தொடங்கினார்.
v  1, 2, 3, 4, ஆம் வகுப்புகளுக்குரிய பல பாடங்களைச் சிறப்பாக அச்சாக்கி வெளியிட்டுள்ளார்.
v  கீர்த்தனைங்கள்பாடல்கள் சிலவற்றை எழுதியுள்ளார்.
v  கணித வாய்பாடுகளை வெளியிட்டுள்ளார்.
v  திருவிளையாடற் புராண வசனம்பெரியபுராண வசனம் ஆகியவற்றை சிறப்பாக அச்சாக்கிவெளியிட்டுள்ளார்.
v  யாழ்பாணத்துச் செல்வர்களும் திருவாடுதுறை மடம் தலைவரும் இராமநாதபுரம் சேதுபதிமன்னர் போன்றோரின் உதவியால் 39 நூல்களை பனை ஏட்டிலிருந்து நூல்வடிவில்அச்சிட்டுள்ளார்.
v  பாலவந்தம் சமீந்தார் பொன்னுச்சாமித்தேவர் (பாண்டி துரை தேவரின் தந்தைஉதவியால்திருக்குறள் பரிமேலழகர் உரையே 1861-ல் அச்சிட்டுள்ளார்.
v  போலிமருட்பாமறுப்புகந்தபுராண வசனம் போன்ற உரைநடைகளை இயற்றியுள்ளார்.
v  சைவ தூக்ஷ்ண பரிகாரம்வச்சிர தாண்டம் போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.
v  தமிழ் மாணவர்களுக்காக சைவ படலம்இலக்கணச் சுருக்கம்இலக்கண வினா விடை,சைவ வினா விடைசூசனம்சிவாலாய தரிசன விதிஅனுட்டான விதிபெரிய புராணவசனம்சிதம்பர மான்மியம்இலங்கை  பூமி சரித்தரம்சேது புராணம் போன்ற நூல்களைஇயற்றியுள்ளார்.
v  சூடாமணி உரை(முதன்முதலில் அச்சிட்டதுசௌந்தரியலகரி உரையாழ்ப்பாண சமயஉரைசிவ தருமோத்திர உரைமருதூர் அந்தாதிசைவ நெறி உரை,திருமுருகாற்றுப்படை உரைசிவ    போதகசிற்றுரைசிவராத்திரி புராண உரை போன்றஉரை நூல்களை எழுதியுள்ளார்.
v  கதிர்மாக சுவாமி கீர்த்தனைதனிப் பாடல்கள்தேவகோட்டை தல புராணம்சித்திவிநாயகர் விளக்கம் போன்ற செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார்.
அளிக்கப்பட்ட சிறப்புக்கள்:
v  1971-ல் இலங்கை அரசு தேசீய வீரர் பட்டமும்அஞ்சல் தலையும் வெளியிட்டது.
v  நான்காம் உலகத் தமிழ் மாநாட்டில் தனிநாயக அடிகள் தலைமையில்  ஞானியார்அடிகள்விபுலானந்த அடிகள்ஆறுமுக நாவலர்  போல்வர்களுக்கு சிலைகள்வைக்கப்பட்டன.                                                                                          
            அயலக மண்ணில் பிறந்து தமிழ் மொழி  உரைநடை வளர்ச்சி  பெறக் காரணமாயிருந்தவருள் இவரும் ஒருவர்பல நூல்களை உரை கண்டும்பதிப்பித்தும்அச்சிட்டும் என பல பரிணாமங்களில்திகழ்ந்த இவர் 5.12.1879 அன்றுஇவ்வுலகினை விட்டு பிரிந்தார்அவர் உயிரோடு இல்லாவிடினும்அவரால் படைக்கப்பட்டஉருவாக்கப்பட்ட அச்சிடப்பட்ட நூல்கள் இன்று வரையிலும்இவ்வாய்வுலகத்திற்கு உயிரோடுத் திகழ்கின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக