சனி, 27 ஜூன், 2015

TRB PG TAMIL :புதுக்கவிதை

.


காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பாஆசிரியம்வஞ்சிகலி,பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை'விருந்து' எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு 'புதிதாக்கு' (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         "சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை" என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர்ரிம்போமல்லார்மேஜெர்மனியின் ரில்கேஅமெரிக்காவின் வால்ட் விட்மன்இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் 'வசன கவிதைஎன்றும் பின்னர் 'சுயேச்சா கவிதை'லகு கவிதை'விடுநிலைப்பாஎன்றும், "கட்டிலடங்காக் கவிதை" என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் "புல்லின் இதழ்கள்" என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்றஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.  அதற்கு அவர் இட்ட பெயர் "வசன கவிதை" என்பதாகும்பாரதி வழியில் .பிச்சமூர்த்தி,கு..ராசகோபலன்,வல்லிக்கண்ணன்புதுமைப்பித்தன்போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின

1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றிசூறாவளிகாலமோகினிகிராமஊழியன்சிவாஜிமலர்நவசக்திஜெயபாரதிஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்றுஅழைத்தனர்இக்காலத்தில்புதுக்கவிதை முன்னோடிகளான .பிச்சமூர்த்திகு..ராசகோபாலன்.நாசுப்பிரமணியன்புதுமைப்பித்தன் போன்றோர்மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.

 2.எழுத்துக் காலம்
எழுத்துசரஸ்வதிஇலக்கிய வட்டம்நடைதாமரைகசடதபறபோன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையைவளர்த்தன..பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம்எழுத்து இதழில் தொடர்ந்ததுமயன்சிட்டிவல்லிக்கண்ணன்ஆகியோர்ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  .நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம்கணையாழிசதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டனபுவியரசுஞானி,முல்லைஆதவன்அக்கினிபுத்திரன்சிற்பிகங்கை கொங்காண்டான்தமிழ்நாடன்சக்தி கனல்மு.மேத்தாதமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   

        சில புதுக்கவிதைச் சான்றுகள்

  நல்ல காலம் வருகுது                                                               
   நல்ல காலம் வருகுது                                                                
  தெருவிலே  நிற்கிறான்                                                                            
குடுகுடுப்பைக் காரன்!                                           




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக