ஞாயிறு, 1 மார்ச், 2015

ரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

வருமான வரி உச்சவரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் 4.4 லட்சம் ரூபாய் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல் வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும். அதற்கான விளக்கம் இதோ. 

இந்த பட்ஜெட்டில் பிரிவு 80 டி மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளை திரும்பப் பெறும் தொகை 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த தொகை மூத்த குடிமக்களுக்கு 30,000 ரூபாயாக உயர்த்தப் பட்டிருக்கிறது. 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது என்பதால் அவர்கள் செய்யும் மருத்துவ செலவுகளை வரி செலுத்தும் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியும். இந்த தொகை 30,000 ரூபாய். மூன்றாவதாக பென்ஷன் திட்டங்களில் செய்யும் முதலீடு களில் 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மாத சம்பளக்காரர் களுக்கு போக்குவரத்து படி விலக்கு தொகை மாதத்துக்கு 1,600 ரூபாயாக உயர்த்தப் பட்டிருக்கிறது. தற்போது இந்த தொகை மாதத்துக்கு 800 ரூபாயாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் கொடுக் கப்பட்ட சலுகைகள் இவ்வளவு தான். ஏற்கெனவே இருக்கும் சலுகைகளை வைத்து 4.4 லட்ச ரூபாய்க்கு விலக்கு என்பதை அருண் ஜேட்லி அறிவித் திருக்கிறார்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக