ஞாயிறு, 1 மார்ச், 2015

கணினி ஆசிரியர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள்மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம்..


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற ஆணையின்படி, மாநில வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுனர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக