வியாழன், 27 பிப்ரவரி, 2014

தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையானஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம்இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதனால்தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டப் போராட்டம் தொடர்பாக எங்களது செயற்குழுவில் கூடி முடிவு செய்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக