வெள்ளி, 27 ஜூன், 2014

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுதமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் நடந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் பண்டிட்களுக்கு அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவினால், நியமன ஆணை வழங்காமல் இருந்தது.
இந்த வழக்கு இன்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதி தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக