வெள்ளி, 10 ஏப்ரல், 2015

தகுதித்தேர்வில் 2013 ல் தேர்ச்சிப்பெற்று 26.09 2014 ல் பணியில் சேர்ந்தவர்களின் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் சேகரிக்கப்படுகின்றது

காஞ்சிபுரம் மாவட்டம் வில்வாராய நல்லூரை சேர்ந்த திரு E.வேல்முருகன் என்பார் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களிடம் தகுதித்தேர்வில் 2013 ல் தேர்ச்சிப்பெற்று 26.09 2014 ல் பணியில் சேர்ந்தவர்களின் விவரம் மற்றும் அவர்கள் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் குறித்து அக்டோபர் 2014 ல் தகவல்கேட்டுள்ளார்.

அம் மனு 6 மாதங்களுக்கு பிறகு தற்போது அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.அதற்கு பதில் அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மேற்கண்டவிவரங்கள் சம்மந்தப்பட்டவருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பதிலளிக்க முதன்மைக்கல்வி அலுவலகத்தால் சேகரிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக