வியாழன், 9 ஏப்ரல், 2015

பள்ளிக்கல்வித்துறை :வரும், 23ம் தேதி முதல் கோடை விடுமுறை

பத்தாம் வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன.
தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல் கோடை விடுமுறை
துவங்குகிறது. ஜூன், 1ம் தேதி புதிய வகுப்புகள் துவங்கும்.பத்தாம் வகுப்புக்கு, கடந்த, 19ம்
தேதி பொதுத் தேர்வு துவங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வுகள்
முடிந்துள்ளன. நாளை, சமூக அறிவியல் தேர்வுடன் பொது தேர்வு முடிகிறது. அனைத்து வகுப்புகளுக்கும்வரும், 22ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. வரும், 23ம் தேதி முதல் கோடை விடுமுறை
விடப்படுகிறது.
ஆனால், ஒன்று முதல் ஐந்து வரையிலான தொடக்கப்பள்ளிகள் ஏப்ரல், 30ம் தேதி வரை இருக்கும்
என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன், 1ம் தேதி பள்ளிகளை திறக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக