செவ்வாய், 21 ஏப்ரல், 2015

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கி.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் சி.ராமநாதன் ஆகியோர்திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 7 நாள்களாக வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்,
உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதியுடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில்உடன்பாடு ஏற்பட்டதால் சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக