செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிக பி.எட்., கல்லூரிகள் :புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை!

'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல்கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், மூன்று நாள் சர்வதேச மாநாடு, சென்னையில்
நேற்று துவங்கியது.பல்கலை, தொழிற்துறை மற்றும் சமூகம் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கல்வியை மேம்படுத்துவது எப்படி என்றமையக் கருத்துடன் இந்த மாநாடு நடக்கிறது.
நிகழ்ச்சியில் சந்தோஷ் பாண்டா பேசியதாவது:ஆசிரியர் கல்வியியல் பி.எட்., படிப்புக்கான, 2014ம் ஆண்டு புதியவிதிமுறைகள், நாடு முழுவதும், வரும் கல்வியாண்டில், ஜூலை முதல் அமலாகிறது. கல்வியில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதால், இந்த விதிமுறைகளை அமல்படுத்த முன்வர வேண்டும். தமிழகத்தில் அதிக அளவில் பி.எட்.,கல்லூரிகளில் முதலீடு செய்கின்றனர். அதிக முதலீடு இருந்தால்,வேறு துறைகளில் அதை பயன்படுத்துங்கள்; கல்வியைவணிகமாகக் கருத வேண்டாம். இவ்வாறு, அவர் பேசினார்.
தரமற்ற கல்லூரிகள் அதிகம்:
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிக பி.எட்., கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில்இனி புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு மத்திய கல்வியல் கவுன்சில் அனுமதி அளிக்காது. தரமற்ற கல்லூரிகள்அதிகமாவதைத்தடுக்கவும், தரமான கல்லூரிகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.புதிய கல்லூரி தேவைஎன்று, மாநில ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், தடையில்லா சான்று அளித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர்கூறினார்.

யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''நாடுமுழுவதும், 155 கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளன. தமிழகத்தில், 20 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக