புதன், 29 ஏப்ரல், 2015

TRB PG TAMIL:இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே.


ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண் கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலான்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே.

- புறநானூறு 194

துன்பத்தை எதிர்கொள் - துன்பத்தை இன்பமாகக் காண்
இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர்.

உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால் அது இனிமையானதுதான்.

இனியது என்பது இன்பமானது,
இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.

நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.

எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்

"கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன"

ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.

இன்பம் துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

- கண்ணதாசன்

மனிதப் பிறவி, ஓர் ஒப்பற்ற பிறவி. விலங்குத் தன்மையிலிருந்து விலகி, மனிதத் தன்மையை அடைந்து, இறைமைத் தன்மையை அடைய அது முயல வேண்டும். இயல்பாக, மனித வாழ்க்கை குறைவுடையது. குறையினின்றும் நீங்கி, நிறைவாழ்வு பெறுதல் வேண்டும். ஒரு விதத்தில் உலகியல், துன்பமாகவே இருந்தாலும், அதை இன்பமாக மாற்ற வேண்டும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக