சனி, 22 பிப்ரவரி, 2014

NMMS NEWS UPDATE :தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது

தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது

பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட
மையத்திற்கு செல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், மத்திய
அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய
திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்த தேர்வை, 1.6 லட்சம் பேர் எழுத இருந்தனர். கடைசி நேரத்தில், கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால், அவை,
நேற்றிரவு வரை, தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கஇருந்த தேர்வை, பிற்பகல், 2:00 மணிக்கு தள்ளிவைத்து, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த விவரம்,முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, இன்று காலை, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக