செவ்வாய், 22 அக்டோபர், 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் செவ்வாய் (அக்.22) மற்றும் புதன்கிழமைகளில் (அக்.23) நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
 மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய விவரம் மற்றும் அழைப்புக் கடிதம்
ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 
 சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்,
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்யப்பட்ட பயோ-டேட்டா படிவங்கள், சான்றொப்பம் பெறப்பட்ட
அடையாளப் படிவம், தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும்
சான்றொப்பமிடப்பட்ட 2 நகல்கள் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவரப்படும் சான்றிதழ்கள் மட்டுமே பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு பெறப்பட்ட சான்றிதழ்கள் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படாது.  
ஒவ்வொரு மையத்துக்கும் ஒன்று முதல் மூன்று மாவட்டங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  மாநிலம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையில்  முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக, இன்று நடக்கும் சான்றிதழ்சரிபார்ப்பு முடிவை வெளியிட, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. 
சங்கரன்கோவில் ஜோதி ஆபிரகாம்,தாக்கல் செய்தமனு:
 நான் எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., ( இதழியல்),பி.எஸ்.சி., எம்.எட்., - எம்.பில்., படித்துள்ளேன்.
முதுகலை பட்டதாரி (வரலாறு) ஆசிரியர்கள், 173 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், ஜூலை 21ல் நடத்திய தேர்வில், எனக்கு 111 மதிப்பெண் கிடைத்தது. இதே மதிப்பெண் எடுத்த ஒருவரை, அக்., 22ல் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டி.ஆர்.பி., அழைத்துள்ளது.
எனக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை. டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர், பள்ளிக்
கல்வித்துறை இயக்குனரிடம் புகார் செய்தேன். முன்பு,1:2 விகிதம் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பர். தற்போது 1:1 விகித அடிப்படையில் அழைத்துள்ளனர். மாவட்ட
வேலைவாய்ப்பு  அலுவலகத்தில், 1997ல், பி.எட்., பதிவு செய்து, காத்திருக்கிறேன்.
இவ்வாறு பதிவு செய்து, 10 ஆண்டுகளுக்கு மேல்,வேலைக்காக காத்திருப்போருக்கு, டி.ஆர்.பி., தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளது. இதனால், என்
மதிப்பெண், 115 ஆக உயரும். சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு"ள்ளார். 
நீதிபதி, எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது.
"தேர்வு எழுதி தகுதியானவர்கள் மற்றும் விடுபட்டவர்களின் பெயர்களையும் ஒருங்கிணைத்து, பட்டியல்தயாரித்து, டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிட, தடை விதிக்கப்படுகிறது. அக்., 28க்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது'  என உத்தரவைப்  பிறப்பித்துள்ளார்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் தமிழ் தவிர மீதமுள்ள 2,276 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்  என     எதிர்பார்க்கப்பட்டது ஆனால்   இவ்வழக்கு காரணமாக தேர்வு முடிவு வெளியிடுவது சற்று தாமதமாகக் கூடும்  எனத் தெரிகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக