திங்கள், 28 அக்டோபர், 2013

TNPSC. GROUP I:பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1
பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும்
என்று தேர்வாணையத்  தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கான
குரூப் 1பிரதான தேர்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. சென்னையில்
கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த இந்தத்
தேர்விவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். நூற்றுக்கும்
மேற்பட்டோர் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை.

குரூப் 1 தேர்வு முடிவுகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
நவநீதகிருஷ்ணன் கூறியது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எந்தவிதத்
தவறுக்கும் இடம் தராமல்நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.மிகவும்
வெளிப்படைத்தன்மையோடு குரூப் 1 பணிகளுக்கு ஆள்கள்                                                                                                                                           
தேர்வு செய்யப்படுவார்கள். பிரதான தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும்.அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியானவர்கள் விரைவில்
பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக