சனி, 26 அக்டோபர், 2013

TRB PG :தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சி

 தருமபுரியில் புதன்கிழமை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான
போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி செவ்வாய், புதன்கிழமை ஆகிய
இரண்டு நாள்கள் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நடைபெற்றது. இதில், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்
கல்வி துணை இயக்குநர் புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி,
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் நாளில் 92 பேரின்
சான்றிதழ்களையும், இரண்டாம் நாளில் 92 பேரின் சான்றிதழ்கள் என மொத்தம்
184 பேரின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

1 கருத்து: