திங்கள், 30 டிசம்பர், 2013

தருமபுரி :பட்டதாரி ஆசிரியர்கள் 36 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப்  பதவி உயர்வு


தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 36 பேர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.

தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 46 பேர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .இதில், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் 36 பேர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.

இவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி ஆணைகளை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ், முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக பதவி உயர்வு பெற்றவர்களில், ஆங்கிலப் பாடத்தில் 6பேர், வரலாறு, வணிகவியல் தலா 2, பொருளியல் 9, தமிழ், வேதியியல், இயற்பியல் தலா 3, தாவரவியல், கணிதம் தலா 4 பேர் அடங்குவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக