திங்கள், 23 டிசம்பர், 2013

சென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ்விடுமுறை


சென்னை உயர்நீதிமன்றத்தின், கிறிஸ்துமஸ்விடுமுறை கால நீதிமன்றங்களில், பணியாற்றும்
நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, 25ம்தேதி முதல், ஜன., 1ம் தேதி வரை கிறிஸ்துமஸ்விடுமுறை. இந்த நாட்களில், முக்கிய
வழக்குகளை விசாரிக்கும் வகையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.வரும், 30ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில், நீதிபதி கே.பி.கே.வாசுகி மற்றும் நீதிபதி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய, அவசர வழக்குகளை மட்டும் கவனிப்பர். அதே போல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், மகாதேவன் ஆகியோர், 30ம் தேதியன்று வழக்குகளை கவனிப்பர்.அவசர மனுக்கள்
தாக்கல் செய்ய விரும்புவோர், 27ம் தேதி பிற்பகல், 1:30 மணிக்குள், தங்கள் மனுக்களை சிறப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக