வியாழன், 4 செப்டம்பர், 2014

10ம் வகுப்பு 'தத்கல்' திட்டம்-மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் வழியாக, மாணவர்கள்விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, வேலுார், கடலுார் மற்றும்
சென்னை ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். கல்வி மாவட்ட வாரியான சேவை மையங்களின் விவரங்களை,www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக